தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த இரண்டு மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனையடுத்து மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பழைய மின்சார கட்டணங்களையே செலுத்துமாறு தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது கணக்கெடுக்கப்படும் மின்சார ரீடிங்கின் படி அதிக தொகை செலுத்தும் நிலை உருவாகியிருப்பதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் பிரசன்னா, இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.