நடிகர் மன்சூர் அலிகான் ஆஸ்பத்திரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரள செய்தவர் மன்சூர் அலிகான்.

பல படங்களில் வில்லனாக நடித்த இவர் பின்னர் படங்களை தயாரித்தும் இயக்கியும் ஹீரோவாக நடித்தார்.

சமீப காலமாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரை பில்ரோத் மரு‌த்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டுள்ளார்.

எனவே உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில், அவருக்கு ‘கொரோனா நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்துள்ளது!

இதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு கிட்னி கல் அகற்றும் அறுவை சி‌கி‌ச்சை நடைபெற உள்ளது.

Actor Mansoor Ali Khan admitted in private hospital

‘தி நைட்’-டில் இணையும் ஜோடிகள் ‘பிக்பாஸ்’ சாக்‌ஷி அகர்வால் & பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“குட் ஹோப் பிக்சர்ஸ்” சார்பாக கோகுல கிருஷ்ணன்மற்றும் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து
“தி நைட்” எனும் இப்படத்தை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர்.

இவர் தமிழில் “ஆறாவது வனம்” மற்றும் மலையாளத்தில் வெளியான சில படங்களை R புவனேஷ் எனும் பெயரில் இயக்கியிருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில்….

இது தமிழில் இதுவரை சொல்ல மறந்த, சொல்லப்படவேண்டிய கதையுடன் கூடிய
திரைப்படம்.

இது காடுகள் சார்ந்த கதைக்களம் ப்ளஸ் கம்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த அனிமல் திரில்லர்.

கதை பல சுவாரஸ்யமான சம்பவங்களோடு யாரும் யோசிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தது.

இத்திரைப்படத்தில் கதையின்
நாயகனாக விது என்கிற பாலாஜி
அறிமுகமாகிறார். இவர் இசையமைப்பாளரும் கூட!

நாயகியாக (பிக்பாஸ் புகழ்)
சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். மேலும் ஒரு புதுமையான வேடத்தில்
(நகைச்சுவை நடிகை)
மதுமிதா மிரட்டியிருக்கிறார்.

வில்லனாகபாலிவுட்டில் இருந்து
பிரபல நடிகர் ரன்வீர் குமார் அறிமுகமாகிறார்.

இவர்கள் தவிர பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

படத்தில் மிரட்டலான பின்னணி
இசையும், அருமையான பாடல்களையும் தந்து இசையமைப்பாளராக அன்வர் கான்டாரிக் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவில் பல சிரமங்களைக் கடந்து
காடுகளில் மிகச் சிறப்பாக
படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ்.G

அவரோடு பல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள்.

கொரோனா காலகட்டத்திலும்
இக்கட்டான சூழ்நிலையில் கடுமையான குளிரில் பல போராட்டமான
நிகழ்வுகளோடு தொழில்நுட்பக் கலைஞர்களும், தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனும் இடைவிடாது 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி
முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு
செய்துள்ளனர்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார் இயக்குநர் ரங்கா புவனேஷ்வர்.

Bigg Boss Sakshi Aggarwal and Balaji joins for The Night

நடிகர்கள் வெங்கட் பிரபு-பிரேம்ஜியின் தாயார் காலமானார்..; சிம்பு உருக்கமான இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்.

இவர் இயக்குனர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர்.

பல தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் தோன்றி இஇன்றைய தலைமுறையினரிடையே பிரபலமானவர்.

கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு, நடிகர் இயக்குனர் என திரையுலகில் பிலபலம்.

இவரது இளையமகன் பிரேம் ஜி அமரனும், இசையமைப்பாளர் நடிகர் என பிரபலமானவர்.

வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் இவரது தம்பி பிரேம்ஜி நிச்சயமாக இருப்பார்.

இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை (வயது 69) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மே 9 இரவில் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்..

இதோ அந்த அறிக்கை….

STR’s condolence message to VP mother

நடிகரும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தயாரிப்பாளருமான அந்தோணி சேவியர் மரணம்.; சுசீந்திரன் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக்யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணி புரிந்தவர் அந்தோணி சேவியர். இவருக்கு வயது 51.

சுசீந்திரன் இயக்கத்தில் “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தை தயாரித்தார்.

பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துகுடிக்கு சென்ற இடத்தில் ஹார்ட் அட்டாக் ஆகி நேற்று மரணமடைந்தார்.

அவரது உறவினர்கள் பெரும்பாலும் மதுரை புதூரில் வசித்து வருவதால் அவரது உடலை அங்கு எடுத்து செல்கிறார்கள். இன்று மதியம் நல்லடக்கம் நடைபெறுகிறது.

Lourdhu nagar 7th street, Alagar Kovil main road, K.Pudur, Tamil Nadu 625007.

இவருக்கு, மனைவி ஜோஸ்பின் ஜெயா, கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மகள் அபி, 18 வயதில் ஜெய்சன் என்ற மகனும் இருக்கிறார்கள் .

இவரது மறைவுக்கு சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Nenjil Thunivirundhaal producer Anthony Xavier passed away

புதுச்சேரி மக்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கும் நிலை.; ரங்கசாமிக்கு காரை திமுக எம்எல்ஏ நாஜிம் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

ஆக்சிஜன், மருந்துகள் இருந்தாலும் கூட புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் நிவாரண உதவியை அறிவித்திருக்கிறார்.

பொதுவாக நாட்டிலேயே புதுச்சேரி மாநிலத்தில்தான அதிக அளவில் மக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் நிலை இருந்தது.

ஆனால், தற்போது புதுச்சேரி மக்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வந்து முதல்வர் பதவியேற்ற பின்னரும் கூட, புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி நடந்துகொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

துணைநிலை ஆளுநர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சில கடமைகள் உள்ளன. தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி வழங்க ஆளுநர் மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பாக மக்கள் நலன் கருதி தமிழகத்தில் 2 நாட்கள் எல்லாக் கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது போல புதுச்சேரியிலும் செய்திருக்க வேண்டும்.

தமிழக முதல்வர் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தை ஒட்டியிருக்கிற பகுதி என்பதால் இங்கும் அதுபோலவே முடிவுகள் எடுக்கப்பட்டு சலுகைகள் அளித்தால் நன்றாக இருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி முதல்வர் விரவில் குணமடைந்து வர இறைவனை வேண்டுகிறேன்.

காரைக்காலைச் சேர்ந்தவர்கள் கரோனா தொற்றால் புதுச்சேரி ஜிப்மர் அல்லது அரசு மருத்துமனையில் உயிரிழந்துவிட்டால் அவர்களின் உடலைக் காரைக்காலுக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் இதற்கென ஒரு தனி மையத்தை உருவாக்கி சிரமங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும்.

முன்பு செய்யப்பட்டது போல, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோரை உரிய கண்காணிப்பு செய்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்.

கரோனா தொற்றாளர்கள் வெளியில் நடமாடும் நிலை உள்ளது. அதைத் தடுக்க அதிக ஊதியம் கொடுத்து அதிகமான அளவில் களப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தைப் போல புதுச்சேரியில் அரசு சார்பில் மலிவு விலை உணவகம் திறக்கவும், தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் செலவை அரசே ஏற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யார் என்ற போட்டிகளையெல்லாம் விட்டுவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து மக்களைக் காக்கும் களப்பணியில் இறங்க வேண்டும்”.

இவ்வாறு காரைக்கால் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ. நாஜிம் தெரிவித்தார்.

Karaikkal MLA Nazim requests CM Rangaswamy

ஊரடங்கில் சூட்டிங் கூடாது.. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை..; என்ன செய்வார் ‘அண்ணாத்த’ ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை (அதிகாலை 4 மணி வரை) முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.

எனவே இதனை முன்னிட்டு இன்றும், நாளையும் (மே 8 மற்றும் மே 9) அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் ராமசாமி என்ற முரளி தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்… கொரோனா ஊரடங்கு உத்தரவை திரையுலகினர் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வெளியூர்களில் சூட்டிங் நடத்துபவர்கள் உடனடியாக பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

‘அண்ணாத்த’ சூட்டிங்குக்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ளார் ரஜினிகாந்த்.

தயாரிப்பாளர் சங்க உத்தரவை மதித்து ரஜினி உடனே திரும்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கெனவே பலமுறை கொரோவினால் தடைப்பட்டது அண்ணாத்த பட சூட்டிங்.

இம்முறை அண்ணாத்த பட சூட்டிங்கை முடித்துவிட வேண்டும் என சிவா & சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

New trouble for Rajini’s Annaatthe

More Articles
Follows