80களின் மாஸ் ஹீரோ கெட்டப்பில் ஆட்டம் போடும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 4 வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் யுவன் இசையில் இளையராஜா பாடிய ரோட்டுல வண்டி ஓடுது பாடலை இன்று வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு பாடலுக்கான சூட்டிங்கை இன்று சென்னை, கிண்டியில் தற்போது படமாக்கி கொண்டிருக்கிறார்களாம்.

இப்பாடல் மதுரை மைக்கேல் என்ற கேரக்டருடைய பாடல் என்பதால், 80களின் மாஸ் ஹீரோக்கள் கெட்டப்பில் சிம்பு ஆட்டம் போடவிருக்கிறாராம்.

விஜய்க்கு பதிலாக ஜிவி. பிரகாஷ்…? இது சீமானின் ‘கோபம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 

இயக்குநரும் நடிகருமான சீமான் தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இருந்தபோதிலும் இடையிடையே படங்களில் கவனம் செலுத்தவும் இருக்கிறாராம்.

இவர் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தில் பணி புரியவிருந்தார்.

ஆனால் சில காரணங்களால் அது தடைப்படவே, ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து பணிபுரிய இருக்கிறாராம்.

இப்படத்திற்கு கோபம் என தலைப்பிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது விஜய்க்காக எழுதிய கதையா..? அல்லது வேறு ஒரு புதிய கதையா..? என்ற விவரங்கள் தெரியவில்லை

நட்பில் பிரிந்தாலும் பிறப்பில் இணைந்த இளையராஜா-மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா.

இதனைத் தொடர்ந்து தற்போது வரை தன் இசையால் இந்திய மக்களை மகிழ்வித்து வருகிறார்.

தனது இசைப் பயணத்தில் 1000 படங்களை கடந்து, இன்றும் இசையின் ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.

ஒரு படத்திற்கு குறைந்தது 5 பாடல்கள் என்றால் நீங்களே பாடல்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

35 வருடங்களுக்கு முன், தூர்தர்ஷன் சேனல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது.

அதுவரை இந்திப் பாடல்கள் மட்டுமே தமிழகத்தில் பிரபலமாக இருந்தது.

அப்போது இந்திப்பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த தமிழனை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் இளையராஜாதான் என்று சொன்னால் அது மிகையல்ல.

தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்தவர். அர்பணித்து கொண்டிருப்பவர். இவரை தொடர்ந்து தன் வாரிசுகளையும் இசைக்காகவே தாரை வார்த்தவர் எனலாம்.

பாடல்கள் மட்டுமில்லை பின்னணி இசையில் கைத்தேர்ந்தவர் இளையராஜா. வசனங்கள் இல்லாத காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுப்பவர்.

திகில், செண்டிமென்ட் என எதையும் விட்டு வைக்கவில்லை. அனைத்திலும் தன் இசையை இசைக்க செய்து அந்த காட்சிகளை ரசிக்க செய்தவர்.

யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ, ஜானகி, சித்ரா உள்ளிட்ட குரல்களை நம் செவிகளுக்கு தேனாக பாய்ச்சியவர். இவரின் இசை அவர்களின் குரல்களை அலங்கரித்தது.

தாய்க்கு சொந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பியுள்ளார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.

முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் இசை அமைத்தவர். பல ராகங்களை உருவாக்கியுள்ளார்.

தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணி பியானோ, கிடார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாஸிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

உலகத்திலுள்ள டாப் 10 பாடல்களில் இளையராஜா இசையமைத்த ‘தளபதி’ பட பாடல் “ராக்கம்மா கையதட்டு” இடம் பெற்றிருந்தது. நான்கு முறை சிறந்த பாடலுக்கான இந்திய தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

இன்று (ஜீன் 2ஆம்) தேதி அவர் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

‘தளபதி’ என்றால் அது மணிரத்னம் இல்லாமல் சாத்தியமாகுமா? ஆம்.. இன்று இளையராஜாவின் பிறந்தநாள் மட்டுமல்ல மணிரத்னத்தின் பிறந்தநாளும் கூட… வாழும் இரு சரித்திரங்களும் இன்றுதான் (ஜூன் 2ஆம் தேதி) பிறந்தனர்.

பகல் நிலவு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம்.

அதன்பின்னர் ‘இதயகோயில்’, ‘மௌனராகம்’, ‘நாயகன்’ என தன் முத்திரையை ‘நச்’சாக பதித்தவர் மணிரத்னம். கமலுடன் கைகோர்த்த நாயகன் படம் இன்றும் உலக அளவில் சிறந்த 100 படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

அதன்பின்னர் இவர் இயக்கிய ‘இதயத்தை திருடாதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ போன்ற படத்தின் காட்சிகளும் பாடல்களும் இன்று வரை கவிதை சொல்லும்.

இதில் அஞ்சலி படம் இளையராஜாவின் 500வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் ரஜினி-மம்மூட்டி என இரு சூப்பர்ஸ்டார்களை ‘தளபதி’ படத்தில் இணையவைத்து தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கியவர் மணிரத்னம்.

‘மாஸ்’ ஹீரோவான ரஜினியை ‘க்ளாஸ்’ ஹீரோவாக காட்டியவர் மணிரத்னம். இளையராஜா-மணிரத்னம் இணைந்து பணியாற்றிய கடைசி படம் ‘தளபதி’தான்.

அதன்பின்னர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்து பணியாற்றினார். சமீபத்தில் வந்த காற்று வெளியிடை படம் வரை இவர்கள் கூட்டணி தொடர்கிறது.

இனி இளையராஜா, மணிரத்னம் எப்போது இணைவார்கள் என்கிற கேள்வி ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் எழாமல் இல்லை.

இனி இவர்கள் நிழல் உலகில் இணையாமல் போனாலும் நிஜ உலகில் தங்கள் பிறப்பால் இணைந்தே இருக்கின்றனர்.

இது தெய்வத்தின் செயல். இனி எவராலும் பிரிக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை.

In June 2nd two legends of Tamil cinema Ilayaraja and Maniratnam celebrates their birthday

இளையராஜாவுக்கு கவிதையில் வாழ்த்து சொன்ன விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசை உலகின் ஜாம்பவான் இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே இசை ப்ரியர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை இசைஞானிக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக், தனது வாழ்த்தை ஒரு கவிதையாக எழுதி, அதை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த கவிதை வரிகள்…

Vivekh actor‏Verified account @Actor_Vivek 2m2 minutes ago
My poem on Raja sir on his bday!!

 

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான் (80) காலமானார்.

இன்று அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட திடீர் மூச்சு திணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்தது.

அப்துல் ரகுமான், (பிறப்பு: நவம்பர் 9, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார்.

‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர்.

பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார்.

அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.

தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

Kaviko Abdul Rahman passed away

‘ஓபிஎஸ்ஸை விட 1000 மடங்கு உயர்ந்தவர் ரஜினி..’- தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் அரசியல் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஒரு தனியார் டிவியிலும் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். அதை அவரே விரைவில் அறிவிப்பார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை விட, 1000 மடங்கு உயர்ந்தவர் ரஜினிகாந்த்.

நான் ரஜினியை சந்தித்தபோது அவர் கூறியதாவது…

தமிழக மக்கள் எனக்கு எல்லாம் கொடுத்துவிட்டார்கள். அதை விட இந்த மந்திரி பதவி ஒன்றும் பெரிதில்லை.

ஒரு முதல்வராகத்தான் நான் அமர வேண்டும் என்ற கட்டாயமில்லை.

ஒரு சாமானியனாக தமிழ்நாட்டுக்குள்ளே வந்தவன். சாலை ஓரங்களில் படுத்து உறங்கியிருக்கிறேன்.

எனக்கு அனைத்தையும் கொடுத்த இந்த தமிழர்களுக்காக அரசியல் அமைப்பை சுத்தப்படுத்துகிற பணியையையாவது செய்ய வேண்டும்.” என்றார்.

நிச்சயம் ரஜினியின் அரசியல் ஒரு புதிய மாற்றமாக இருக்கும்.

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே அவர் அரசியலுக்கு வருகிறார்.” என்றார் தமிழருவி மணியன்.

Tamilaruvi Manian Open talk about Rajini political entry and his ideas

More Articles
Follows