டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் ரஜினிக்கு ஷாக் கொடுத்த 3 ஸ்டார்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி தொடர்பான படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள சில மாதங்களுக்கு முன் காட்டுக்குள் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்போது நேற்று மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்பானது.

இதில் ரஜினி செய்த சாகசங்களை அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் கண்டுகளித்தனர்.

ரஜினியின் வேறொரு பரிமாணத்தை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டமைக்கு அவரது திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்த வாழ்த்து வீடியோவும் அதில் இணைக்கப்பட்டு இருந்தன.

நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

’எந்த ஆபத்து வந்தாலும் உங்களை ஒன்றும் செய்யாது. ஏனெனில் ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான், அடித்து தூள் கிளப்புங்க’ என நடிகர் மாதவன் வாழ்த்தினார்.

ரஜினியுடன் ’2.0’ படத்தில் நடித்த பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமாரும் அச்சமின்றி உங்கள் பயணத்தை தொடங்குங்கள் உங்கள் வழி தனி வழி’ என தன் வாழ்த்தை தெரிவித்திருந்தார்.

3 Stars surprises Rajini in Into the Wild show at Discovery Channel

உதவியாளர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுத்த பிரகாஷ்ராஜ்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரானா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க நாடெங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகள் மூடல், படப்பிடிப்புகள் நிறுத்தம் என்பதால் அனைத்து நடிகர்களுக்குமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இந்த நிலையில் தன் உதவியாளர்கள் பலருக்கும் சம்பளம் கொடுத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது..

“நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை இப்போதே கொடுத்துவிட்டேன்.

என்னால் முடிந்த வரை இன்னும் செய்வேன். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது. ” என கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜின் இந்த செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Actor Prakash Raj kindness towards his employees

சாரே கொல மாஸ்… திருமணத்தை எளிதாக நடத்தும் பேட்ட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி.

அந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி ஸ்டைலாக துப்பாக்கியை வைத்துக் கொண்டு சூட் செய்வார். அப்போது சாரே கொல மாஸ் என ரஜினியை பாராட்டியிருப்பார்.

இவர் மலையாள சினிமாவில் மிகப்பிரபலமானவர்.

’கம்மாட்டிபாடம்’ என்ற மலையாள படத்தில் நடித்து அந்த மாநில விருதை வென்றவர் இவர்.

இந்த நிலையில் மணிகண்டன் ஆச்சாரிக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் அடுத்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

தன் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தாராம்.

ஆனால் தற்போது இந்தியாவையே முக்கியமாக கேரளாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தன் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.

Petta actor Manikandan changes his marriage plans due to corona pandemic

தள்ளிப்போகும் ‘மாஸ்டர்’ ரிலீஸ்?; அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கபட்டு இருந்தது.

ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகமெங்கும் மார்ச் 31ஆம் தேதி 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

மேலும் கொரோனா பீதியில் இருந்து மக்கள் இயல்பு திரைக்கு திரும்ப வர சில நாட்களாவது ஆகும். எனவே மாஸ்டர் ஏப்ரல் முதல் வாரம் வெளியானால் அது வசூலை பாதிக்கும் எனத் தெரிகிறது.

இதனால் மே 1ஆம் தேதி மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சொன்னது போல நண்பர் அஜித் பிறந்தநாளில் மாஸ்டர் வெளியானால் அது அஜித் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தானே.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் பட டிரைலரை ஏப்ரல் முதல் வாரம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Vijays Master release may postponed to Ajith Birthday

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட லாரன்ஸ் தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்.

இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

தற்போது இதன் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து தமிழில் ஒரு படத்தை லாரன்ஸ் இயக்கி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறாராம்.

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கர் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் படமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Priya Bhavani Shankar to pair up with Lawrence

பெப்சி-க்கு ரஜினி 50 லட்சம், சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி 10 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை தமிழகத்தில் இந்த பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கு முன்பு சினிமா சூட்டிங் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் FEFSI பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

எனவே தொழிலாளர்களுக்கு உதவ நடிகர்கள் முன்வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதில் நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி குடும்பத்தினர் இணைந்து 10 லட்ச ரூபாய் நிதியை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார்கள் என்பதை பார்த்தோம்.

அவர்களைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் 250 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.

இயக்குநர் மனோபாலா 10 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சமும் விஜய்சேதுபதி 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவர்களை அடுத்து இன்னும் நிறைய நடிகர்கள் நிதியுதவி வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Rajini Sivakarthikeyan and Vijay Sethupathi donation to Fefsi union

More Articles
Follows