3 படங்களின் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்டக்கத்தி, பீட்ஸா, சூதுகவ்வும், தெகிடி, இறுதிச் சுற்று, இன்று நேற்று நாளை உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்.

இதில் பீட்ஸா படத்தின் இரண்டாம் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் இன்று நேற்று நாளை படத்தின் 2ஆம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது என அறிவித்திருந்தது.

அது போல் தங்கள் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களில், எந்தப் படத்தின் 2-ம் பாகம் வேண்டும் என ரசிகர்களிடைய கருத்து கணிப்பு நடத்தியது.

அதில் ‘சூது கவ்வும் 2’, ‘தெகிடி 2’ மற்றும் ‘மாயவன் 2’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த வாக்கெடுப்பில் சூதுகவ்வும் 2 படத்துக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும் சூதுகவ்வும், தெகிடி, மாயவன் ஆகிய 3 படங்களின் 2 -ம் பாகத்துக்கான திரைக்கதை உருவாக்கம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 movies Sequels of Thirukumaran Entertainment on floor

தண்ணீர் தொட்டிக்குள் வயதான பெண்ணுடன் ஜாலியாக நயன்தாரா தங்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் ஜாக்குலின்.

இவர் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜாக்குலின் ஒரு கிராமத்தில் பம்புசெட் தண்ணீர் தொட்டிக்குள் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவருடன் அந்த வீடியோவில் வயதான பெண்மணி ஒருவர் இருக்கிறார்.

ஆரம்பத்தில் தண்ணீர்க்குள் அமர்ந்திருக்கின்றனர். தீடிரென பம்பு செட்டில் இருந்து தண்ணீர் வருகிறது. அதிலும் ஜாக்குலின் ஜாலியாக குளிக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Actress cum Anchor Jacqueline recent video goes viral

Here is video link

https://www.instagram.com/p/B_MwrEYJfoD/

அஜித் உதவி செய்வாரு. நானும் செய்றேன்.; தீப்பெட்டி கணேசனுக்கு லாரன்ஸ் ஆறுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேனிகுண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.

இவர் சமீபத்தில் மிகவும் வறுமையில் உள்ளதாகவும் நடிகர் அஜித் தனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சூட்டிங் ஸ்பாட்டில் என்னுடைய ஒரிஜினல் பெயரான கார்த்திக் என்ற பெயரை இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் அஜித் மட்டுமே என்னை கார்த்தி என்று கூப்பிட்ட கடவுள்.

அஜித் அவர்களிடம் உதவி கேட்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.

ஆனால் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி கிடைக்க வேண்டும்.

அஜித்திடம் இந்த வீடியோ செய்தியை தெரிவித்தால் உடனே அவர் என்னை அழைத்து உதவி செய்வார். என கண்ணீருடன் கூறியிருந்தார் தீப்பெட்டி கணேசன்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில்…

‘நண்பா இந்த வீடியோவை அஜித்தின் மேனேஜரிடம் சேர்த்துவிட்டேன். அது அஜித்திடம் கிடைத்தால் அவர் நிச்சயம் உதவி செய்வார்.

உங்கள் குழந்தைகள் கல்விக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உங்கள் விபரங்களை அனுப்பவும் என்று தெரிவித்துள்ளார்.

Ajith will help you Lawrence promises to Theepetti Ganesan

கொரோனா LOCK DOWNல் தனுஷ் பர்த்டே COUNT DOWN தேவையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆடுகளம் படத்தில் நடித்தமைக்காக இளம் வயதிலேயே தேசிய விருதை வென்றவர் நடிகர் தனுஷ்.

இவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தனுஷ் படங்களை கொண்டாடுவது முதல் அவரின் பிறந்தநாளையும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காலத்திலும் தங்களால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருகின்றனர்.

வருகிற ஜீலை மாதம் 28ஆம் தேதி தனுஷ் தன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

இதற்கு இன்னும் 97 நாட்கள் உள்ளது. ஆனால் தற்போதே தனுஷ் பிறந்தநாளை கொண்டாட கவுன் டவுனை தொடங்கிவிட்டனர் இவரது ரசிகர்கள்.

100 நாட்கள் உள்ளது என தொடங்கி 99.. 98 என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிசைன் செய்து இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று, ஊரடங்கு என மக்கள் அவதிப்படும் வேளையில் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த கொல வெறி டிசைன் தேவையா? இது மக்கள் மனதை புண்படுத்ததா? என நடுநிலையான நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

இதை நடிகர் தனுஷ் கண்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Dhanush fans trending Count down days in Corona lock down

ஜிப்ரானுக்காக மீண்டும் இணைந்த கமல்-அனிருத் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்திற்கு

இசையமைத்து வருகிறார் அனிருத்.

கமல் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறை.

அதே போல் இதுநாள் வரை ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் பணியாற்றி வந்த ஷங்கர் முதன்முறையாக அனிருத்துடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் கமலுடன் இணைந்துள்ளார் அனிருத்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை கமலும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர்.

இப்பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

Indian 2 duo Kamalhaasan and Anirudh joins again

ட்விட்டரை ஒழிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ஜெயலலிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புரட்சித் தலைவி ஜெயலலிதா தான் இறந்துவிட்டாரே அவர் எப்போது ட்விட்டருக்கு எதிராக வேண்டுகோள் விடுத்தார்? என நீங்கள் யோசிக்கலாம்.

இது ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத் பற்றிய தகவல் தான்.

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

இவரின் சகோதரி ரங்கோலி தான் கங்கனாவின் ட்விட்டர் கவனித்து வருகிறாராம்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களைப் பற்றி ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

அதற்கு பாலிவுட் பிரபலங்கள் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனால் கங்கனா கணக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது .

இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் கங்கனா ரனாவத்.

அதில்… “மருத்துவரையும், காவல்துறையினரையும் தாக்கியவர்களைத் தான் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தான் என் சகோதரி கருத்து தெரிவித்திருந்தார்.

எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றியும் அவர் பேசவில்லை.

பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களை டுவிட்டர் ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறது.

உண்மையான தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கிறது.

எனவே ட்விட்டர் போன்ற தளங்களை இந்தியாவில் இருந்து ஒழிக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக நம் இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என தலைவி கங்கனா கூறியுள்ளார்.

Indian Govt should demolish Twitter says Thalaivi Kangana Ranaut

More Articles
Follows