ரஜினி-ஷங்கர் இணைந்துள்ள ‘2.0’ பர்ஸ்ட் லுக், பட ரீலீஸ் எப்போது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘2.0’.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்தியாவின் மிகப்பிரம்மாண்டமான படமாக ரூ. 350 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் இதன் படப்பிடிப்பை பலத்த பாதுகாப்புடன் நடத்தி வருகிறார் ஷங்கர்.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு துவங்கி 100 நாட்கள் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார் இயக்குனர்.

அதில் க்ளைமாக்ஸ் உள்ளிட்ட இரண்டு சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறாராம்.

இந்தாண்டு செப்டம்பரில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்.

அடுத்த வரும் 2017 கோடை விடுமுறைக்கு 2.ஓ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருட்டு டிவிடி வாங்குபவர்களை தண்டிக்கும் லைகா நிறுவனம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி இணைந்துள்ள படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படம் நாளை (ஜூன் 17) ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு திருட்டு டிவிடி வெளியாகும் பட்சத்தில், அதனை தடுக்கும் வகையில் ஒரு புதிய யுக்தியை எடுத்திருக்கிறது லைகா.

இதுகுறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது…

“இப்படத்திற்கு வர்த்தக ரீதியான டிரேட்மார்க் பதிவு ஒப்புதல் எண்ணை அறிவுசார் காப்புரிமை மையத்திலிருந்து பெற்றுள்ளோம். அந்த எண்: O-0000780028.

இந்த எண் பதிவு செய்யப்பட்டதன் மூலம் சட்டவிரோதமாக இப்படத்தின் டிவிடி விற்கப்பட்டாலோ, டிவிடி பார்த்தாலோ, டவுன்லோட் செய்தாலோ அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

மேலும் அவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தர முடியும்” என தெரிவித்துள்ளது.

‘கபாலி 22 மில்லியன்; ரஜினி 3 மில்லியன்…; அதிசயிக்கும் திரையுலகம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே மாதம் 1ஆம் காலை 11 மணியளவில் கபாலி டீசர் வெளியானது.

இதுநாள் வரை இதை டியூடிப் தளத்தில் 22 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இன்று வரை 22,084,018 பேர் பார்வையிட்டுள்ளனர்.

ஒரு தமிழ் படத்திற்கு இப்படியொரு பெருமை கிடைத்துள்ளதை திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் ட்விட்டரில் தன் கணக்கை தொடங்கினார் ரஜினி.

தற்போது இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனை தொட்டுள்ளது.

எனவே, இவை இரண்டையும் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

எம்ஜிஆர்-சிவாஜி-ஜெயலலிதாவை  இயக்கிய ஏ.சி. திருலோகச்சந்தர் மரணம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் திலகம் எம்ஜிஆரின் அன்பே வா மற்றும் ஜெயலலிதாவின் தர்மம் எங்கே? நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தெய்வமகன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்ஏ.சி.திருலோகச்சந்தர்.

மேலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நிறைய படங்களை இயக்கியுள்ளார்.

1960 முதல் 1980 வரையிலும் இவர் படங்களை இயக்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டு வந்தார்.

இன்று (15 ஜூன் 2016) மாலை திடீரென அவரது உயிர் பிரிந்தது.

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சென்னை, கானத்தூரில் மாயாஜாலுக்கு எதிரில்  உள்ள  வீட்டில் நாளை மாலை இவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

ஏழை மாணவர்களுக்காக மராத்தான் ஓடிய ‘சிங்கம்’ சூர்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறந்த நடிகராகவும் நல்ல மனிதராகவும் வெற்றி வாகை சூடி வருகிறார் சூர்யா.

தன் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் இயற்கை பசுமையை போற்றும் வகையில் மாத இதழையும் நடத்தி வருகிறார்.

தற்போது ஹரி இயக்கி வரும் சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சென்னை தீவுக்கடலில் நடைபெற்ற இரவு நேர மராத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இதில் கிட்டதட்ட 5 கிலோ மீட்டர் வரை சூர்யா ஓடியுள்ளார்.

ஏழை குழந்தைகளின் படிப்பு செலவுக்காக இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி விளம்பரங்களில் ஏன் ரித்விகா இல்லை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி ரிலீஸ் தேதியை நெருங்கி வருவதால், விளம்பரப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது படக்குழு.

இதுவரை விளம்பரம் மற்றும் இதர போஸ்டர்களில் ரஜினியுடன் வில்லன்கள், ராதிகா ஆப்தே, ஜான் விஜய், நாசர், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்று இருந்தன.

ஆனால் இப்படத்தில் முக்கியமான கேரக்டர் ஏற்றுள்ளதாக கூறப்படும் ரித்விகாவின் படங்களே இடம் பெறவில்லை.

இதுகுறித்து படக்குழு தெரிவித்துள்ளதாவது…

“கபாலியை திரையில் பார்க்கும் போது ரித்விகா கேரக்டர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும்.

படப்பிடிப்பின் போதே ரஞ்சித்திடம் “என்னப்பா.. இந்தப் பொண்ணு இந்தளவு சூப்பரா பெர்மான்ஸ் பன்னுது” என்று ரஜினியே ஆச்சர்யப்பட்டாராம்.

அந்த சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம் என்பதால்தான் விளம்பரங்களில் ரித்விகாவின் படங்கள் இடம் பெறவில்லையாம்.

More Articles
Follows