எம்ஜிஆர்-சிவாஜி-ரஜினி-கமல் ஆகியோர் இருந்ததால் உயிரோடு இருக்கிறோம்.: மிஷ்கின் பேச்சு

எம்ஜிஆர்-சிவாஜி-ரஜினி-கமல் ஆகியோர் இருந்ததால் உயிரோடு இருக்கிறோம்.: மிஷ்கின் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Without MGR Sivaji Rajini Kamal movies we cant live sasy Mysskinசவரகத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சவரகத்தி படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, இயக்குநர் ராம் , நடிகை பூர்ணா, இயக்குநர் மிஷ்கின், கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட கலந்து கொண்டனர்.

இயக்குநர் மிஷ்கின் பேசியது :-

அரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். படத்தில் ஓர் இடத்தில் அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி ஒரு இசை ஒன்றை கொடுத்துள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்த இசை. அவர் சிறப்பான இசையமைப்பாளர்.

இயக்குநர் ராம் இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். தன்னுடைய காலில் அடிபட்ட பின்னரும் அவர் படபிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

அவருடைய படமான பேரன்பு சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்தை உலக திரைப்பட விழா ஒன்றில் அடுத்த வாரம் திரையிடவுள்ளனர். கண்டிப்பாக அவர் அந்த படத்துக்காக பல விருதுகளை வாங்குவார் என்று நம்புகிறேன்.

முதன்முறையாக மலையாள நடிகை ஒருவர் தமிழ் படத்தில் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அது நடிகை பூர்ணா. இந்த படத்துக்காக அவர் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.

இந்த படத்தை 9௦% வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன். 1௦% வெற்றியை நான் இயக்குநர் ராமுக்கு சமர்பிக்கிறேன்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார்கள்.

அவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்கு சென்று கண்டுள்ளேன். அப்படங்கள் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை அளித்துள்ளது. திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூக கடமை.

திரையரங்கில் படம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்றார் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் ராம் பேசியது :-
இந்த உலகில் குடிக்க, அன்பை பற்றி பேச, படிக்க, கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம் தான்.

எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதை படிப்பாரா என்று கேட்பார்கள் ? அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம் தேவைப்படுகிறதோ அதிலிருந்து ஒரு பக்கத்தை படிப்பார். என்னுடைய படத்திலும், மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது.

ஆனால் இந்த படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும். என்னை பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச்சிறந்த கதை சவரகத்தி தான். சவரகத்தி படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது என்றார் இயக்குநர் ராம்.

Without MGR Sivaji Rajini Kamal movies we cant live sasy Mysskin

 

தன் மனைவிக்காக ஹீரோ ஆசையை கைவிட்ட இசையமைப்பாளர் இமான்

தன் மனைவிக்காக ஹீரோ ஆசையை கைவிட்ட இசையமைப்பாளர் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Music composer DImman not willing to act in moviesவிஜய் நடித்த தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான்.

தன் மெலோடி இசையால் தென்னிந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளவர் இவர்.

தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் படத்தின் மூலம் தன் 100வது படத்தை நிறைவு செய்துள்ளார்.

இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது…

பொதுவாக எந்தவொரு நிகழ்ச்சின்னாலும் நான் சாதாரண டிசர்ட் போட்டுக் கொண்டு வந்துடுவேன்.

தற்போது 100 படங்களை கடந்துவிட்டேன். உங்கள சந்திக்க, என்னிடம் இருந்த பழைய கோட் சூட்டை துசி தட்டி போட்டு வந்துள்ளேன்.

எனக்கு இன்றுவரை ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி.

என் ரசிகர்களை நான் ரசிகர்கள் என்றே சொல்ல மாட்டேன். அவர்களை இசை காதலர்கள் என்றே சொல்வேன்.

தமிழன் படத்திற்கு முன்பே ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளேன்.

ஆனால் அந்த படம் வரவில்லை. அதற்கு முன்பே முன்பே பல விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளேன்.

தற்போது கூட அந்த விளம்பரங்களை டிவிக்களில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

மாப்ள வர்றான் மாப்ள வர்றான் தங்க வண்டியில என்ற பாடல் குமரன் தங்க மாளிகை விளம்பரத்தில் ஒலிக்குதே அது என் பாடல்தான்.

என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நான் அழைத்தால் எனக்காக வந்து பாடிக் கொடுக்கும் ஸ்ரேயா கோஷலுக்கு நன்றி. அவர் என் தங்கை போன்றவர்.

நான் ஹீரோவாக நடிப்பேனா? என்று பலரும் கேட்கிறார்கள்.

என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தபோது பெண் வீட்டாரிடம் நான் ஒரு இசையமைப்பாளர் என்றுதான் அறிமுகம் செய்துக் கொண்டேன்.

எனவே அதை அடையாளத்துடன் இப்போதும் இருக்க விரும்புகிறேன். இசையமைப்பாளர் என்பதே போதும்” என பேசினார் டி. இமான்.

Why Music composer DImman not willing to act in movies

ரஜினி-கமலுக்கு நடுவில் நான்… தேவி ஸ்ரீபிரசாத்தின் நெகிழ்ச்சி அனுபவம்

ரஜினி-கமலுக்கு நடுவில் நான்… தேவி ஸ்ரீபிரசாத்தின் நெகிழ்ச்சி அனுபவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Devi Sri Prasadமலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார் தேவி ஸ்ரீபிரசாத்.

தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திரக் கலை விழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன்.

விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்துத் திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்துக் கேட்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமர வைத்துக் கொண்டனர்.

புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இது வரை கிடைக்காத சந்தோஷம். அது கிடைத்தபோது பரவசமானேன்.

இந்த இரண்டு பேருடைய பாராட்டும் ஒரே நேரத்தில் கிடைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத விசயமாகிவிட்டது” என்றார் இன்ப வெள்ளத்தில் மிதக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டில் தெலுங்கில் கைதி நம்பர் 150, நேனு லோக்கல், ராரண்டோய் வேடுக சூதம், துவ்வாட ஜெகந்நாதம், ஜெய ஜானகி நாயகா, ஜெய் லவ குசா, உந்நாதி ஒகட்ட ஜிந்தகி, மிடில் கிளாஸ் அப்பாயி என எட்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த எட்டுப் படங்களும், அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. ‘ஒரே ஆண்டில் எட்டுப் படங்களுக்கு இசையமைத்து எட்டுப் படங்களின் பாடல்களையும் ஹிட்டாகிய ஒரே இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்” என்று தெலுங்ககு ஊடகங்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளன.

அதே போல் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பட வெளியீட்டிற்கு முன் வாரந்தோறும் சிங்கிள் சிங்கிள் ட்ராக்காக வெளியிடும் உத்தியைத் தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ மூலம் தொடங்கி வைத்ததும் இவர் தான்.

இன்று அது அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமாகிவிட்டது. லிரிக் வீடியோஸில் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் புகைப்படத்தையும், கான்செப்ட்டையும், கிராஃபிக்ஸையும் இணைத்து வெளியிடுவதையும் தேவிஸ்ரீபிரசாத் தான் அறிமுகப்படுத்தினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தற்போது இவர் தமிழில் ‘சாமி ஸ்கொயர்’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்கள் அனைத்து மிக நன்றாக வந்திருக்கின்றன.

படப்பிடிப்புத் தளத்தில் படத்தின் பாடலைக் கேட்ட படக்குழுவினர், இந்த ஆண்டின் ஹிட் ஆல்பங்களில், ‘சாமி ஸ்கொயர்’ கண்டிப்பாக இடம்பெறுமென்ற மகிழ்ச்சியில் உள்ளனர்

அரசியல் அப்டேட்ஸ்; ரசிகர்களை நற்பணி நாயகர்களாக மாற்றிய கமல்

அரசியல் அப்டேட்ஸ்; ரசிகர்களை நற்பணி நாயகர்களாக மாற்றிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஇன்று சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை, ‌திண்டுக்கல், சிவ‌கங்கை,‌ ராமநாதபு‌ரம் ஆகி‌ய 4 மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு வடசென்னை மற்றும் தென்சென்னை ரசிகர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது அவர் பேசியதாவது…

35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள்;

இனி நீங்கள் நற்பணி நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல தேவையான நேரம், தேவை ஏற்பட்டுள்ளது.

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” என்று பேசினார்.

நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்தலைப்புக்கு சிக்கல்..?

விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்தலைப்புக்கு சிக்கல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seethakathiவிஜய்சேதுபதி நடிப்பில் 25-வது படமாக உருவாகி வருகிறது’சீதக்காதி’.

பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படதை தயாரித்து வருகிறது.

இப்படம் மேடைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பயணமாக இக்கதை அமைந்திருக்கும் எனச் சொல்லப்பட்டது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, மெளலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்நிலையில் இப்பட தலைப்பு குறித்து சேதுபதி-சீதக்காதி உறவின்முறை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் தீன் கூறியதாவது:

”ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகர் சேகு அப்துல் காதர் என்பவரின் பெயர்தான் சீதக்காதியாய் மருவியது.

ராமநாதபுரத்தை ஆண்ட மன்னன் கிழவன் சேதுபதி, சீதக்காதிக்கு விஜயரகுநாத என்ற பட்டத்தையும், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற்கரைகளில் முத்து குளிப்பதற்கான வரி வசூலிக்கும் அதிகாரத்தையும் வழங்கியதோடு மட்டுமின்றி தனது ஆலோசகராகவும் பணியமர்த்திக் கொண்டார்.

உமறுப் புலவர் சீறாப்புராணத்தை இயற்றுவதற்கும் நிதி அளித்தவர் சீதக்காதி,.

கர்ணனைப் போல கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் சீதக்காதி என்று சைவப் புலவர் பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடியுள்ளார்.

சீதக்காதி என்றால் தமிழர்கள் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வள்ளல் சீதக்காதிதான்.

வள்ளல் சீதக்காதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் காட்சிகளை அமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் அஜ்மல் தீன்.

வெற்றிமாறன்-சமுத்திரக்கனி கூட்டணியில் ஜவுளித்துறை கதை படமாகிறது

வெற்றிமாறன்-சமுத்திரக்கனி கூட்டணியில் ஜவுளித்துறை கதை படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vetri maaran and samuthirakaniஜவுளித்துறையை சார்ந்து தறியில் நடக்கும் அவலநிலையை மையமாக ‘தறி’ என்ற நாவலை பாரதிநாதன் என்பவர் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இதை மையப்படுத்தை ஒரு திரைப்படம் உருவாகிறது.

‘உதயம் NH4’, ‘புகழ்’ ஆகிய படங்களை இயக்கிய மணிமாறன் ‘சங்கத் தலைவன்’ என்ற பெயரில் உருவாகவுள்ள படத்தை இயக்குகிறார்.

வெற்றிமாறனின் ‘கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம்’ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது.

சமுத்திரக்கனி, கருணாஸ், ஆகியோர் இதில் நடிக்கவுள்ளனர்.

மேலும் அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் TV தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இம்மாதம் 22 ந்தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

More Articles
Follows