சிந்துஜா மரணம்.: கவச உடைகளுடன் அருண்ராஜா கண்ணீரஞ்சலி..; உதயநிதி & சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி

சிந்துஜா மரணம்.: கவச உடைகளுடன் அருண்ராஜா கண்ணீரஞ்சலி..; உதயநிதி & சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun raja with his wife sindhujaநடிகர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைக் கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

ராஜா ராணி படத்தில் ஆர்யா நண்பராக நடித்திருந்தார்.

ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நெருப்புடா பாடலை பாடியிருந்தார்.

2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியான ‘கனா’ படத்தினை இயக்கியிருந்தார் அருண்ராஜா காமராஜ்.

இந்த நிலையில் அருண்ராஜாக்கும் அவரது மனைவி சிந்துஜாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

எனவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி சிந்துஜா நேற்றிரவு உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடலுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து அருண்ராஜா கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதியும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் ‘ஆர்டிக்கிள் 15’ என்ற ஹிந்தி பட ரீமேக்கில் உதயநிதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wife of Director Arunraja Kamaraj passes away

மோடியை எதிர்த்து போஸ்டர்.. 20 பேர் கைது..; #ArrestMetoo ராகுலை அடுத்து ஓவியா அதிரடி

மோடியை எதிர்த்து போஸ்டர்.. 20 பேர் கைது..; #ArrestMetoo ராகுலை அடுத்து ஓவியா அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviyaஇந்தியா நாடெங்கிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே 18+ வயதுடைய அனைவரும் தடுப்பூசி போட அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்? என பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில், டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

பல காவல் நிலையங்களில் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டன.

அந்த போஸ்டர்களை ஒட்டிய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து #ArrestMetoo “என்னையும் கைது செய்யுங்கள்” என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஓவியாவும் “பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்துள்ளார்.

இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

#ArrestMetoo என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

Arrest me too tweets Rahul Gandhi and Oviya after arrests over posters

ஜான் அலெக்ஸ்சிஸ் இசையில் ‘பிகில்’ புகழ் காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்’

ஜான் அலெக்ஸ்சிஸ் இசையில் ‘பிகில்’ புகழ் காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

John Alexisஇசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் பாடல் ” நீயும் நானும்” .

இதில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி நடித்திருக்கிறார்.

ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார்.

பாடலுக்கு வரிகள் கவிஞர் கபிலன் எழுதியிருக்கிறார்.

திரைப்பட இசையமைப்பாளரான ஜான் A அலெக்ஸ்சிஸ் ” பழகிய நாட்கள் ” எனும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் மேற்கத்திய நாடுகளில் இசை பயின்றவர்,
தமிழ் மீதும், தமிழ் இசைமீதும் பற்றுகொண்டவர் .

தனியிசை பாடல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலம் ஆனதுபோல தமிழ் இசைப்பாடல்களும் தற்பொழுது பிரபலமாகி வருவது வரவேற்கதக்கது.

தமிழ் இசையின் இனிமையும், தமிழகத்தின் பாரம்பரிய வாத்தியக்கருவிகளின் சிறப்பையும் உலகம் மெல்ல உள்வாங்க ஆரம்பித்திருக்கிறது.

விரைவில் தமிழ் இசைப்பாடல்களுக்கு உலக அரங்கில் தனியிடமே உண்டாகியிருக்கும் என்கிறார் இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ்

‘நீயும் நானும் ‘ பாடலை இசையமைத்து தயாரித்து வெளியிட்டிருக்கும் ஜான் A அலெக்ஸ்சிஸ் மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் இசையமைப்பதிலும் கவனம் செலுத்துவேன் என்கிறார்.

Bigil gayathri next film is titled Neeyum Naanum

BREAKING முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கி மக்களுக்கு கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்

BREAKING முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கி மக்களுக்கு கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth (2)இன்று மே 17ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில்
தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது கொரோனா நிவாரண நிதியாக ரூ 50 லட்சம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ரஜினிகாந்த் பேசியதாவது…

“தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் நாம் கொரோனாவை ஒழிக்க முடியும்.

இதை மக்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்”

என்று பேசினார் ரஜினிகாந்த்.

Rajinikanth donated Rs 50 lakhs to Corona Relief Fund

JUST IN ரஜினி & தனுஷ் படங்களில் நடித்த நிதீஷ் வீரா மரணம்..; அவரை பற்றி ஒரு பார்வை..

JUST IN ரஜினி & தனுஷ் படங்களில் நடித்த நிதீஷ் வீரா மரணம்..; அவரை பற்றி ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asuran nitish veeraபுதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிதிஷ் வீரா.

இவரது சொந்த ஊர் மதுரை. அங்கேயே தன் பள்ளி & கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.

பின்னர் சென்னை வந்திருக்கிறார்.

சில கட்ட போராட்டங்களுக்கு பிறகு சினிமா சான்ஸ் வந்துள்ளது.

வெண்ணிலா கபடிக்குழு படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரவே வாய்ப்புகள் கூடியுள்ளது.

ரஜினியின் காலா மற்றும் தனுஷின் அசுரன் படங்கள் இவருக்கு சினிமாவில் மாபெரும் அடையாளத்தை கொடுத்துள்ளது.

நிஜத்தில் பாசிட்டிவ் எண்ணங்களை கொண்ட இவர் அசுரன் படத்தில் நெகவ்டிவ்வான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மே 17 நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் காலமானார். இவருக்கு தற்போது 45 வயதாகிறது.

இவருக்கு 8′ வயதிலும், 7′ வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் புது கார் வாங்கியிருக்கிறார் நிதிஷ்.

தனது நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து தன் காரை காட்டி அவர்களை காரில் ஏற்றி ஒரு ரவுண்ட் அடித்து மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Nithish Veera passed away due to corona

ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் ரெம்டெசிவர் மருந்துக்கு டிமாண்ட் ஏற்ப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் ரெம்டெசிவர் மருந்திற்காக பொதுமக்கள் நீண்ண்ண்ணட வரிசையில் காத்திருக்கும் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையில் ஓரு சில இடங்களில் ரெம்டெசிவருக்காக, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, ரெம்டெசிவரை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரும் 18 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.

அதைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், விற்பனை மையங்களுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Govt decides to sell Remdesivir directly to private hospitals

More Articles
Follows