‘மோகன் தாஸ்’ படத்திற்காக இணையும் விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா ராஜேஷ்

‘மோகன் தாஸ்’ படத்திற்காக இணையும் விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் நடிப்பில் ‘காடன்’ மற்றும் ‘எப்ஐஆர்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதனை முடித்து விட்டு ‘மோகன் தாஸ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து தயாரித்தும் வருகிறார்.

உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறதாம்.

இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார்.

இந்நிலையில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.

மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறதாம்.

Vishnu Vishal and Aishwarya Rajesh joins for Mohan Das

vishnu aishwarya rajesh

அரக்கோணம் அதிரடி..; அதிமுகவை தோற்கடிக்க களம் இறங்கிய வக்கீல்கள் படை

அரக்கோணம் அதிரடி..; அதிமுகவை தோற்கடிக்க களம் இறங்கிய வக்கீல்கள் படை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DMKதிமுக தலைவர் ஸ்டாலின் எப்போது அரக்கோணம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., ரவியை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினாரோ அன்றில் இருந்தே அரக்கோணம் தொகுதி தமிழக சட்டசபை தேர்தலில் தனி கவனம் பெற்ற தொகுதியாக மாறியது.

அதோடு, அசைக்க முடியாத திமுக கோட்டையாக ஒரு காலத்தில் இருந்த அரக்கோணம் தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆளுமையில் இருக்கிறது.

சிட்டிங் எம்.எல்.ஏ. ரவி 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்றாலும் தொகுதியில் பெரும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறார்.

மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாததால் அவர் சார்ந்த ஆளும் கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர்.

அதே நேரம் திமுக தரப்பில் தொகுதி முழுதும் கட்சியினரிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

10 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாமல் இருப்பதால் இந்த முறை எப்படியும் தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என முழு வேகத்தில் கட்சியினருக்கு உத்தரவு போட்டிருக்கிறார் மாவட்ட செயலாளர் காந்தி.

அதோடு, தேர்தலில் பணபலமும், அதிகார பலமும் அதிமுக தரப்பில் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதால் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் தீவிரமான தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், தொகுதியில் எங்கு ஆளும் கட்சியால் இடையூறுகள் ஏற்பட்டாலும் உடனடியாக அதை எதிர் கொள்ளும் வகையில் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம்.

இது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள திமுக வக்கீல்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் போட மாவட்ட செயலாளர் காந்தி முடிவு செய்து இருக்கிறாராம்.

இது தவிர அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் ரேசில் இருந்த பவானி வடிவேலுவுக்கு “கலப்பு திருமண சிக்கல்” காரணத்தால் வாய்ப்பு ஏற்கனவே பறிபோய்விட்டது.

கடந்த முறை தேர்தலில் நின்று தோற்ற ராஜ்குமாரும் ” அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஏலக்காய் மாலை போட்ட” விவகாரத்தால் வேட்பாளர் ரேசில் இருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தொகுதியில் சர்வே எடுத்த ஐ பேக் டீமும், முன்னாள் அமைச்சரின் தனி டீமும் கொடுத்த ரிப்போர்ட் படி புதிய வேட்பாளர் களம் இறக்கப்பட்டால் திமுக வெற்றியை தவிர்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்களாம்.

அந்த வகையில் திமுக சார்பில் புதிய வேட்பாளாராக வழக்கறிஞர் எழில் இனியன் களம் இறங்க வாய்ப்புகள் அதிகமாம்.

காரணம், ஏற்கனவே தொகுதி முழுதும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் கோரிக்கை புதிய வேட்பாளர்.

அதே நேரம் ஆளும் கட்சி செய்யும் தாறுமாறான செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செலவு செய்யும் பலமும் எழில் இனியனிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

எல்லாவற்றிற்க்கும் மேலாக கோஷ்டி பூசலில் எப்போதும் நிறைந்து காணப்படும் அரக்கோணம் திமுகவில் எந்த கோஷ்டியிலும் சிக்காதவர் என்பதும் வக்கீல் எழில் இனியனுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறதாம்.

இதன் காரணமாக மாவட்டத்தின் கரிசன பார்வையும் இவர் மீதே திரும்பி உள்ளதாம்.

அதோடு வக்கீல்கள் பலத்தை அதிகரிக்க அதிமுக உட்பட பல கட்சிகளில் இருந்து பல வக்கில்களை மாவட்டம் முன்னிலையில் திமுகவில் சேர்த்த நிகழ்வும் சமீபத்தில் நடந்ததாம்.

அதில் சேர்ந்த வக்கீல் ஒருவர் இப்போது உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. ரவிக்கு மிக நெருக்கமான நண்பராம் என்பது கூடுதல் தகவல்.

இந்த தகவல்களால் அரக்கோணம் தொகுதியில் உள்ள திமுக வக்கீல்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறதாம்..

Arakkonam DMK Lawyers campaign to win assembly election

‘கைதி’ & ‘மாஸ்டர்’ பட வில்லனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் வசந்தபாலன்

‘கைதி’ & ‘மாஸ்டர்’ பட வில்லனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் வசந்தபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெயில்’, ‘அங்காடி தெரு’, காவியத் தலைவன், ‘ஜெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்தபாலன்.

இதில் ஜெயில் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

தற்போது தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரிப்பாளராக மாறியுள்ளார் வசந்தபாலன்.

இவர்கள் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்திற்கு யூ பாய்ஸ் ஸ்டூடியோஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிறுவன புதிய படத்தில் ‘கைதி’ ‘மாஸ்டர்’, உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸ் தான் ஹீரோவாகிறார்.

இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்..

Arjun Das turns hero in Vasantha Balan’s next

Vasanthabalan Arjun Das

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்..; தயாரிப்பாளர் இவரா.?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்..; தயாரிப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர்.

‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும்.

இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம்.

இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து…

“இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.

இது ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் அவர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு தொடக்க விவரம், ராம் சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Ram Charan and director Shankar collaborate for a new film

Shankar Ram Charan

சினிமாவுக்கு வந்த கவர்ச்சி பாம் ‘டிக் டாக்’ இலக்கியா..; அந்த படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?

சினிமாவுக்கு வந்த கவர்ச்சி பாம் ‘டிக் டாக்’ இலக்கியா..; அந்த படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tik Tok Elakkiya (2)டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் ‘நீ சுடத்தான் வந்தியா?’

காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது.

இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ்.

இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர்.

அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவுசெய்கிறார்.

துரைராஜன் இசையமைக்கிறார்.படத்தில் ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன.

‘டிக் டாக் இலக்கியா’வை நடிக்க வைத்த அனுபவம் பற்றி இயக்குநர் க.துரைராஜ் கூறும்போது…

“டிக் டாக்கிற்காக வீடியோவில் தோன்றி நடிப்பது வேறு .படத்தில் காட்சிகளில் நடிப்பது வேறு.

ஆரம்பத்தில் சில நாட்களில் காட்சிகளில் நடிப்பதற்கு அவருக்குச் சிரமமாக இருந்தது. போகப் போக சரியாகி விட்டது.

சில நாட்களில் நான் சொல்வதைப் புரிந்துகொண்டு சரியாக நடித்தார். இந்தப்பட அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாக இலக்கியா கூறினார்.

டிக் டிக் போல மிகையாக இல்லாமல் அவர் படத்தில் நாகரிகமான அளவான கவர்ச்சித் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.” என்றார்.

கதை பற்றிக் கூறும்போது…

“தனது மகளுக்குத் திருமணப் பரிசாக ஒரு பங்களாவை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் தந்தை.

வாங்குவதற்கு முன் அதை போய்ப் பார்த்து விட்டு வருமாறு மகளை வருங்காலக் கணவருடன் அனுப்பி வைக்கிறார்.

அந்த பங்களா காட்டுப் பகுதியில் உள்ளது. பார்க்கப் போனபோது உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குள் ஓர் அமானுஷ்ய சக்தி புகுந்து கொண்டு அவர்களை ஆட்டிவைக்கிறது .

அது மட்டுமல்ல அவர்கள் மூலம் தனது எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

கதையின் பெரும்பகுதி காடுகளில் நடக்கிறது. பல்வேறு காடுகளில் சிரமப்பட்டுப் படம்பிடித்தோம். சிறு பகுதி மட்டும் சென்னையில் படமானது.” என்கிறார்.

பரபரப்பு சஸ்பென்ஸ் கவர்ச்சி என வணிகக் கலவையில் உருவாகியுள்ளது
‘நீ சுடத்தான் வந்தியா?’படம். விரைவில் வெள்ளித்திரையில்…

Tik Tok elakkiya turns heroine in new Tamil film

பிப்ரவரி 19ல் ‘செம திமிரு’ காட்ட வரும் ‘சுல்தான்’ பட நாயகி ராஷ்மிகா மந்தனா

பிப்ரவரி 19ல் ‘செம திமிரு’ காட்ட வரும் ‘சுல்தான்’ பட நாயகி ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sema thimiru (2)ஒரு படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட்.

மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ மற்றும் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

தற்போது ‘செம திமிரு’ என்ற படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யவுள்ளது ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துருவா சர்ஜா. இவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினர்.

இவர் நாயகனாக நடித்துள்ள படம் தான் ‘செம திமிரு’.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்தப் படத்தைத் தான் பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்தில் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படத்தை பி.கே.கங்காதர், எஸ்.சிவா அர்ஜூன் தயாரிக்க நந்தகிஷோர் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்துக்குத் தன் ஒளிப்பதிவால் அழகூட்டியுள்ளார் விஜய் மில்டன்.

‘செம திமிரு’ படத்தில் சந்தன் ஷெட்டி இசையில் உருவான ‘காராபோ’ பாடல் நீண்ட நாட்களாக சமூக வலைதளத்தில் பேசப்படும் பாடலாக இருந்தது நினைவு கூரத்தக்கது.

இந்தப் படம் தவிர்த்து டீஸர், ட்ரெய்லர் ஆகியவற்றால் சமூக வலைதளத்தில் இப்போதும் பேசப்படும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தையும் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் மார்ச் 5-ம் தேதி வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் பேசப்படும் படங்களைக் குறிவைத்து வெளியிட்டு ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றிக் கொடி நாட்டி வருகிறது.

Rashmika’s Sema Thimiru will release on February 19th

More Articles
Follows