தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தை விஷால் தயாரித்து நடித்துள்ளார்.
இப்படத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளின் விநியோக உரிமை தர்மபுரியை சேர்ந்த டி.என்.சி. சினி ஸ்கிரின்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இதன்பின்னர் இந்த படத்தின் முழுமையான விநியோக உரிமையை நடிகர் விஷாலின், விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி பெற்றது.
இதனால் தாங்கள் கொடுத்த 55 லட்ச ரூபாயை திருப்பி தரக்கோரி டி.என்.சி நிறுவனம் கேட்டது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து படத்தை வெளியிட தடைகோரி டி.என்.சி. சார்பில் சென்னை 5 வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.என்.சி. நிறுவனத்துக்கு உடனடியாக 25 லட்ச ரூபாயை தரத் தயாராக இருப்பதாகவும், 18 திரையரங்குகளில் மட்டும் வெளியிடும் உரிமையை தருவதாகவும் விஷால் பட நிறுவனம் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, உத்தரவாதம் அளித்தபடி பணம் கொடுக்கப்படாவிட்டால், படத்தை இன்று வெளியிடக்கூடாது என தெரிவித்த நீதிபதி வழக்கை வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
எனவே துப்பறிவாளன் ரிலீஸில் இழுபறி நீடித்து வருகிறது.
Vishal movie Thupparivaalan release issue Court stay order