தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1984-ஆம் ஆண்டில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்தார்.
சில வருடங்களுக்கு பின் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் தன் மகனை ஹீரோவாக்கினார்.
இதனையடுத்து மாண்புமிகு மாணவன், செந்தூரப் பாண்டியன், தேவா, ரசிகன் என மசாலா படங்களில் நடித்து வந்தார் விஜய்.
இதன்பின்னர் விக்ரமன் இயக்கிய ‘பூவே உனக்காக’ படம் விஜய்க்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இதன்பின்னர் சில வருடங்களுக்கு பிறகு வெளியான ‘திருமலை’ விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது.
அவருக்கான ரசிகர்கள் கூட்டமும் பெருகியது.
கடந்த 10 வருடங்களில் மட்டும் திருப்பாச்சி, கத்தி, துப்பாக்கி, ஜில்லா, தெறி, சர்கார் என தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.
பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் விஜய் 1992-ஆம் ஆண்டு முதன்முறையாக ஹீரோவாக நடிக்க தொடங்கிய நாளான டிசம்பர் 4ல் 28 ஆண்டுகள் நிறைவு செய்கிறார்.
இதனையொட்டி அவரது ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
காஞ்சிபுரம், தேனி, திருச்சி, நாமக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்களில் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Vijay fans are engaged in special prayers on Vijay completing 28 years in the industry