தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நயன்தாரா நடிப்பில் சக்ரி டுலெட்டி இயக்கியுள்ள படம் கொலையுதிர் காலம்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் வழக்கம்போல நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை. மேலும் இயக்குனர் சக்ரி டுலெட்டியும் கலந்துக் கொள்ளவில்லை. படத்தயாரிப்பாளர் மதியழகன் கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் ராதாரவி பேசும்போது…
முன்னணி நடிகர்களுடன் நயன்தாராவை கம்பேர் செய்ய கூடாது. அவர் சிறந்த நடிகைதான். ஒரு பக்கம் பேயாகவும் இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார்.
முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களை பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கிறார்கள்.
ராதாரவியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தன் கண்டனத்தை கடுமையாக தெரிவித்துள்ளார்.
‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்.
இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது.
இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.
Vignesh ShivanVerified account @VigneshShivN
Clueless and helpless cos no one will support or do anything or take any action against that filthy piece of shit coming from a legendary family .. he keeps doing this to seek attention! Brainless ! Sad to see audience laughing& clapping for his filthy comments! None of us
None of us had any idea that this event was going to take place for an incomplete film .. the actual producers or directors left the film few years back I guess! Inappropriate event wit unnecessary people sitting and knowing not what to speak ! If this is called promoting a movie
In 2017, Mr.Radha Ravi made a crass insensitive comment about children with disabilities. It is men like Mr.Radha Ravi who perpetuate & glorify the violence against women & children.
In 2018, there was a sexual harassment complaint against Mr.Radha Ravi by a distressed actress, who feared to reveal her identity. He walked scotfree. A little later Mr.Radha Ravi scandalously & insensitively mocked at the #MeToo movement.
Vignesh Shivan condemns Radharavis speech at Kolaiyuthir Kaalam Press Meet