தினமும் 10 மணிநேரம் சைக்கிள் ஓட்டிய வருண் – அனுஷ்கா ஷர்மா

தினமும் 10 மணிநேரம் சைக்கிள் ஓட்டிய வருண் – அனுஷ்கா ஷர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varun Anushka cycled for 10 hours daily in summer heatவருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடுத்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா .

“மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான் .எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான் .கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம் .சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள் ,தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்” என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.

‘வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும்.வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது “என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.

Varun Anushka cycled for 10 hours daily in summer heat

நான் பொறுக்கி; எனக்கு தேவை மூணு தல; விக்ரம் புதுபன்ச் டயலாக்

நான் பொறுக்கி; எனக்கு தேவை மூணு தல; விக்ரம் புதுபன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikramஇவர்களுடன் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மாபெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் 2ஆம் பாகமாக இது உருவாகுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

இதனிடையில் இதன் ட்ரைலர் வெளியானது.

அதில்… ‘நான் தாய் வயத்தில பொறக்கல… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல… பூதம்’ போன்ற வசனங்கள் இடம் பெற்றது.

இது அனைவராலும் கிண்டலுக்கு உள்ளானது. இதனால் சாமி 2 படக்குழுனிர் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இதன் 2ஆம் ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் விக்ரம் புது பன்ச் டயலாக்குகள் பேசியுள்ளார்.

எனக்கு தேவை மூணு தல, நான் போலீஸ் இல்ல… பொறுக்கி… என்ற வசனங்களை பேசியுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

காமெடி பீஸ் நான்; ஹீரோ வேஷம் செட்டாகாது..; யோகிபாபு பீலிங்ஸ்

காமெடி பீஸ் நான்; ஹீரோ வேஷம் செட்டாகாது..; யோகிபாபு பீலிங்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuகவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய காமெடி நடிகர்கள் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து காமெடியன் யோகி பாபுவும் ஒரு படத்தில் நாயகனாக நடிப்பதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முக்கிய கேரக்டருக்கு யோகி பாபு பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், யோகி பாபு இதை மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்…

வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் நாய்க்கும் இடையிலான கதைதான் அந்தப் படம். தான் அதில் கூர்க்கா வேடத்தில் நடிப்பதாகவே தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்தில் தான் ஒரு காமெடியனாக மட்டுமே நடிக்கிறார் என்றும் தனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது காமெடி மூஞ்சி. ஹீரோவுக்கு எல்லாம் செட்டாகாது” என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சீமராஜா பூர்த்தி செய்வார் – பொன்ராம்

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சீமராஜா பூர்த்தி செய்வார் – பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanh and ponramஒரு சாதாரண வெற்றியே நம் தோள்களில் மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்றி விடும். அப்படி இருக்கையில் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் பொன்ராம் தோள்களில் தவிர்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய பொறுப்புகள் வந்து சேர்ந்திருக்கின்றன.

சீமராஜாவும் வெற்றி தான் என்ற உறுதியில் இருக்கும் பொன்ராம், அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பை காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார்.

“ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்” என சிரிக்கிறார் பொன்ராம்.

முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது என்கிறார்.

சீமராஜா பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது,

“சீமராஜா மூலம் எங்கள் முந்தைய படங்களில் இருந்து நாங்கள் சிறிது சிறிதாக மேம்பட்டிருக்கிறோம். அதற்காக எங்கள் வழக்கமான பொழுதுபோக்கு விஷயங்களை ஒதுக்கி விடவில்லை.

பொழுதுபோக்கு தான் பின்னணியாக இருக்கும், ஆனால் சில மாற்றங்களை கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது” என்றார்.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி பேசும்போது, “படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக, முழு முயற்சியில் ஈடுபட்டார். அ

வர் சிலம்பம் பயிற்சி பெற்று, கேமராவின் முன்பு அதை நேர்த்தியாக செய்து காட்டினார். சூரி நிச்சயமாக எங்கள் குழுவில் மிகப்பெரிய பலம். உங்களை விலா நோக சிரிக்க வைப்பார்.

“அனைவரும் சீமராஜா ஒரு திருவிழா உணர்வை தருவதாக சொல்வதை கேட்பதில் மகிழ்ச்சி. அதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்த நண்பர்கள் தான் என்று நான் கூறுவேன்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குனர் முத்துராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் இல்லாமல் இது நடந்திருக்காது. சீமராஜா திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

சிம்ரன், நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருப்பதோடு, தனது தனித்துவமான விளம்பரங்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆர்.டி.ராஜா.

விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று அதிக திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

டிரீம் வாரியார் தயாரிப்பில் இணையும் ஜோதிகா & எஸ். ராஜ்

டிரீம் வாரியார் தயாரிப்பில் இணையும் ஜோதிகா & எஸ். ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress jyothikaதமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு ஸ்டுடியோவான டிரீம் வாரியார் பிக்ச்சர்ஸ், தனது அடுத்த படம் தயாரிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலில், தனது அடுத்த தயாரிப்பில், ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ் ராஜ் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டைட்டில் மற்றும் நடிப்பவர்கள் குறித்த முழு விபரம் விரைவில் வெளியாகும் என்றும், இந்த படத்திற்கான சூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோரால் தொடங்கப்பட்ட டிரீம் வாரியார் பிக்ச்சர்ஸ், தேசிய விருது வென்ற ஜோக்கர், காஸ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி ஆகிய படங்களை தயாரித்த்து.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

*செக்கச் சிவந்த வானம்* பட ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

*செக்கச் சிவந்த வானம்* பட ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

There will be change in release date of Chekka Chivantha Vaanamஅரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் நாயகிகளாக ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 27ல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு வெளியிட உள்ளனர்.

There will be change in release date of Chekka Chivantha Vaanam

More Articles
Follows