கீர்த்தி சுரேஷுக்காக இத்தனை ஹீரோஸ் வெயிட்டிங்..?

கீர்த்தி சுரேஷுக்காக இத்தனை ஹீரோஸ் வெயிட்டிங்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshஇன்றைய முன்னணி ஹீரோக்களின் முதல் சாய்ஸ் கீர்த்தி சுரேஷ்தான்.

ஒருவேளை இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால்தான் மற்ற ஹீரோயின்களை தேடுகிறார்களாம் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள்.

இவரது நடிப்பில் ரெமோ, பைரவா, பாம்பு சட்டை ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் இவர் நடிக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருக்கிறதாம்.

இதனையடுத்து, லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜீனுடன் ஒரு படம், மற்றும் விஷாலுடன் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறாராம்.

இவை தவிர்த்து, ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கும் விஜய் சேதுபதி படத்திலும் கீர்த்தி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விட்டா கீர்த்தியை புக் பண்ணிட்டுதான் ஹீரோவை புக் பன்னுவாங்க போலவே…!??!

பார்த்திபனுக்காக கோடிட்ட இடங்களை நிரப்ப வந்த சிம்ரன்

பார்த்திபனுக்காக கோடிட்ட இடங்களை நிரப்ப வந்த சிம்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban and simranநீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.

இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்நிலையில் கெளரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்ரன்.

இதுகுறித்து சிம்ரன் கூறும்போது… “எனக்கு பிடித்த கேரக்டராக இருக்கும்போது ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மற்றபடி என்னை நடிக்கும்படி யாரும் வற்புறுத்த முடியாது” என்றார்.

‘அவார்ட் வாங்கத்தான் கெட்டப் சேஞ்ச்…’ சதீஷ் சரவெடி

‘அவார்ட் வாங்கத்தான் கெட்டப் சேஞ்ச்…’ சதீஷ் சரவெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathish prabu devaதமிழ் சினிமாவில் வளரும் காமெடி நடிகர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் சதீஷ்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய்சேதுபதியின் றெக்க, பிரபுதேவாவின் தேவி ஆகிய இந்த மூன்று படங்களும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.

பெரும்பாலும் சதீஷ், ஒரே மாதிரியான தோற்றத்துடனே எல்லாம் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆனால் முதன்முறையாக தலையே சீவாமல், காரக்குழம்பு கலரில் தலை முடிக்கு கலர் அடித்து, தேவி படத்தில் கெட்டப் சேஞ்ச் செய்துள்ளார்.

இதுகுறித்து அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது..

ஆமா. நான் கெட்டப் சேஞ்ச் பண்ணிட்டேன். இனிமே அவார்ட்டு வாங்க தயாராகனும். அப்போ என்ன பேசனும் என்பதை வேற ரெடி செய்யனும்.

அதுக்கு மேடையில ரிசக்ஷன் வேற குடுக்கனும். (அது நமக்கு வராது) எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Sathish ‏@actorsathish 1m21 minutes ago
Yes of course my maximum getup change. (Awards ku Vera speech lam ready pannanum, reactions Vera kudukkanum (oh Namakku dhan adhu varadhe)

நம்ம டாப் ஹீரோஸ் செஞ்சதை இப்போதான் மோகன்லால் பண்றாரு

நம்ம டாப் ஹீரோஸ் செஞ்சதை இப்போதான் மோகன்லால் பண்றாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

puli murugan mohanlalகேரளாவில் மலையாள சினிமா நட்சத்திரங்களுக்கு மவுசு இருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு வந்தால் எளிதாக ஜெயிப்பதில்லை.

அதற்கு காரணம் அங்குள்ள ரசிகர்கள், சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கின்றனர்.

ஆனால் நம்ம தமிழ்நாட்டுல சினிமா ஸ்டார்ஸ்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் மதிப்பு இந்திய சினிமாவுக்கே தெரியும்.

இதனால் இங்குள்ள மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாளன்று கிட்டதட்ட 7 முதல் 8 காட்சிகள் வரை திரையிடப்படும்.

லிங்கா, கபாலி படக்காட்சிகள் எல்லாம் நள்ளிரவு 2 மணிக்கே தொடங்கியது.

இதனையடுத்து, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் படங்களும் அதிகாலையில் தொடங்கியது.

ஆனால் இந்த அதிகாலை ஸ்டார் தரிசன வழக்கம் என்றைக்கும் கேரளாவில் இருந்தது இல்லை.

இந்நிலையில் முதன்முறையாக இந்த மரபுகளை மோகன்லால் உடைத்தெறிகிறார்.

இவர் நடிப்பில் மிகப்பிரம்மாண்டாக உருவாகியுள்ள ‘புலி முருகன்’ அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படம் கேரளாவில் சுமார் 220 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகவுள்ளது.

இதில் 150 தியேட்டர்களில் சிறப்புக்காட்சி வேண்டுமென்று அடம்பிடித்து அனுமதி வாங்கிவிட்டார்களாம் ரசிகர்கள்.

இதனால் சிறப்பு காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாகி விட்டதாம்.

இதன் மூலம் மலையாள சினிமாவில் ‘புலி முருகன்’ மோகன்லால் ஒரு புதிய ட்ரெண்டை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-செல்வராகவன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பிரபல நடிகர்

விஜய்-செல்வராகவன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and selvaraghavan stillsபைரவா படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள 61வது படத்தை அட்லி இயக்குவார் என்றும், இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்ற தகவல்கள் சில நாட்களாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் சந்திக்க ஏற்பாடு செய்த அந்த நபர் யார் தெரியுமா? நடிகர் பிரபுதானாம்.

அவர்தான் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இவர்கள் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

விநாயகர் சதுர்த்தியன்று இவர்கள் இருவரையும் தன் அன்னை இல்லத்திற்கு அழைத்துள்ளார்.

அப்போது செல்வா ஒரு அருமையான கதை வைத்திருக்கிறார். விஜய் தம்பி கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். கேட்டு பாருங்க.. என்று தொடங்கி வைத்திருக்கிறார்.

கதையை முழுவதுமாக கேட்ட விஜய், தன்னுடைய சில அபிப்ராயங்களை சொல்லி, இயக்குனரிடம் கொஞ்சம் மாற்றம் செய்ய சொல்லி இருக்கிறாராம்.

கதையில் இந்த மாற்றங்கள் உறுதியாகும் பட்சத்தில், இவர்களின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹன்சிகா?

மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹன்சிகா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surya hanshikaஹரி இயக்கும் எஸ் 3 படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம் என்ற பெயரிடப்பட்ட இப்படத்தில் சூர்யாவுடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவருடன் மற்றொரு நாயகியும் நடிக்கிறாராம்.

சூர்யாவுடன் சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows