விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மினிஸ்டர்

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மினிஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

முரளி தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் அளித்து வாழ்த்தினார்.

அப்போது அமைச்சரிடம் உள்ளாட்சி வரியை ரத்து செய்வது, திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிறிய படங்களுக்கு பிரத்யேக காட்சிகளை ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை புதிய நிர்வாகிகள் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு…

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதமே கொரோனா தமிழகத்தை விட்டு விடும்

‘மாஸ்டர்’ படம் வெளியாக வேண்டும் என்பதற்காக திரையரங்குக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேட்டிருக்கிறீர்கள்.

ஆனால் ‘மாஸ்டர்’ படம் வெளிவருவதற்கு முன்பே கொரோனா இல்லாமல் போகும் என அமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

TN minister Kadambur Raju talks about Vijay’s Master release

காலா படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யா

காலா படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார்.

செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைகதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.

படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

படப்படிப்பு ஆரம்பித்த நாளிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இத்திரைப்படத்தின் First Look வெளியாகி சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், மார்ச் இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

Arya – Pa Ranjith new film first look poster is out

Sarpatta Parambarai first look poster (2)

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthதிருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கெளரி ராமையா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி.

இவர் தன் குழந்தையின் கல்வி செலவுக்காக உதவி கேட்டுள்ளார்.

இவரின் மகன் 11வது வகுப்பு & மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் ஆன்லைன் கிளாஸ் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் செல்போன் வாங்குவதற்கு கையில் பணம் இல்லை.

மேலும் இவரது கணவருக்கு ஆஸ்துமா நோய். அவருக்கு மருந்து வாங்க முடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறார்.

ரஜினி முடிவு என்ன? அரசியலுக்கு வருவாரா?.. போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் பேட்டி

இதனால் சென்னைக்கு வந்து அரசியல் தலைவர்களை சந்தித்து உதவி பெற வந்துள்ளார்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து உதவி கேட்க நினைத்துள்ளார்.

இதனையறிந்த ரஜினி தனது உதவியாளர் மூலம் அவருக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

மேலும் குடும்ப விவரங்களை பெற்றுக்கொண்டு அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளாராம்.

Rajinikanth helped differently-abled women and her family

ரஜினி முடிவு என்ன? அரசியலுக்கு வருவாரா?.. போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் பேட்டி

ரஜினி முடிவு என்ன? அரசியலுக்கு வருவாரா?.. போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilaruvi manian rajinikanthகொரோனா ஊரடங்காலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

“அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவில் அறிவிப்பேன்” என ரஜினி பேசினார்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 2ஆம் தேதி ரஜினியை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது…

“தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் நடிகர் ரஜினிகாந்திற்கு எள் அளவும் இல்லை.

அவர் அரசியலுக்கு வருவாரா? என அவருக்குதான் தெரியும்.. உடல் நலத்துக்கு ஊறு இல்லாத வகையில் உங்களுடைய அரசியல் முடிவை அமைத்துக் கொள்ளுங்கள் என ரஜினியிடம் கேட்டுக் கொண்டேன்..”

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

Tamilaruvi Manian meets Rajinikanth at his house

‘பாகுபலி’ பிரபாஸை இயக்கும் KGF டைரக்டர் பிரஷான்த் நீல்..; ஹொம்பாளே பிலிம்ஸின் ‘சலார்’

‘பாகுபலி’ பிரபாஸை இயக்கும் KGF டைரக்டர் பிரஷான்த் நீல்..; ஹொம்பாளே பிலிம்ஸின் ‘சலார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salaarஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.

தற்போது ‘யுவரத்னா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.

ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ‘டார்லிங்’ பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார்.

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது.
தற்போது ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்துவிட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார்.

இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் “ஆம்! அது உண்மைதான்!! ‘டார்லிங்’ பிரபாஸ் மற்றும் பிரஷான்த் நீல் இருவரையும் இந்த மிகப்பெரிய படத்தில் இணைப்பதில் மிகுந்து மகிழ்ச்சியடைகிறேன்,
ஹொம்பாளே பிலிம்ஸ் தங்கள் முதல் படத்தில் இருந்தே சினிமாத் துறையில் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கி வருகிறது.

”சலார்” படத்தை நாடு முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தயாரிப்பின் மூலம் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது ஹொம்பாளே பிலிம்ஸ். இதுவரை இந்தியத் திரையுலகில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும், 2 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட்டதில்லை.

‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் – பிரஷான்த் நீல் படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்திய அளவில் அடுத்ததொரு பிரம்மாண்ட படைப்பு ரசிகர்களின் விருந்துக்காகத் தயாராகவுள்ளது.

Prabhas and KGF director Prashanth Neel joins for Salaar

4 ஹீரோக்களுடன் கன்னிகா இணையும் படம்..; பூஜையுடன் இனிதே துவக்கம்

4 ஹீரோக்களுடன் கன்னிகா இணையும் படம்..; பூஜையுடன் இனிதே துவக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dr.S.கேதார்நாத் அவர்களின் “சிவோம் Productions” தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பெண்களுடைய வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் திரு. முருகானந்தம் அவர்களின் உதவி இயக்குனர் திரு.சந்தோஷ் பிரபாகரன் இயக்கவுள்ளார்.

கதையின் நாயகர்களாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களாக நான்கு நாயகர்கள் களமிறங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கதையின் களம் நாயகன் மற்றும் நாயகியை சார்ந்து இல்லாமல் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மற்றும் மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தியும், பெண்கள் புரியும் சமூக சீர்திருத்ததை மையப்படுத்தியுமே உருவாக்கப்பட்டுள்ளது.

கதையின் நாயகியாக கன்னிகா களமிறங்குகிறார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகான மதுரை மாநகரை சார்ந்த பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தில் பல புதுமுக நடிகர் நடிகைகள் இணைந்துள்ளார்.

நாடோடிகள், தூங்காநகரம், அஞ்சாதே போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த திரு. சுந்தர் சி பாபு அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கணேசபுரம், கல்தா போன்ற படங்களில் பணியாற்றிய திரு. வாசு அவர்கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

மேலும் சீனு ராமசாமி மற்றும் பிரபு சாலமன் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றிய திரு. விஜய் தென்னரசு கலை வடிவமைப்பாளராக தனது பங்கினை அளிக்கவுள்ளார். இந்த படம் பூஜையுடன் இனிதே படபிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Actress Kannika’s next movie updates here

7a517352-7aff-4d0d-9b14-ff7297c2ab87

8d5b0370-07ca-469d-84c9-04fd0dd452a6

More Articles
Follows