தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
முரளி தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் அளித்து வாழ்த்தினார்.
அப்போது அமைச்சரிடம் உள்ளாட்சி வரியை ரத்து செய்வது, திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிறிய படங்களுக்கு பிரத்யேக காட்சிகளை ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை புதிய நிர்வாகிகள் முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு…
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதமே கொரோனா தமிழகத்தை விட்டு விடும்
‘மாஸ்டர்’ படம் வெளியாக வேண்டும் என்பதற்காக திரையரங்குக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேட்டிருக்கிறீர்கள்.
ஆனால் ‘மாஸ்டர்’ படம் வெளிவருவதற்கு முன்பே கொரோனா இல்லாமல் போகும் என அமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
TN minister Kadambur Raju talks about Vijay’s Master release