தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.
கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.
மாஸ்டர் ரிலீஸ்… விஜய் வேண்டுகோள்.; முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் பேட்டி
எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.
இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.
இந்த நிலையில் 2021 பொங்கலுக்கு ரிலீசாகும் மாஸ்டர், ஈஸ்வரன் படத்திற்காக 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க விஜய், சிம்பு ஆகியோர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்
இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்து இன்று ஜனவரி 4 அரசாணை வெளியிட்டுள்ளது.
TN govt allowing 100% occupancy in theatres