தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் முக ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்து உத்தரவிட்டார்.
அந்த விவரம் வருமாறு…
சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு
11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள்
11 மாவட்டங்களில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ.பதிவுடன் அனுமதிக்கப்படும்
எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது நீக்குவோர், இயந்திரங்கள் பழுது நீக்குவோர் செயல்பட அனுமதி.
எலக்ட்ரீசியின், பிளம்பர், தச்சர் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி
11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்கள், இ.பதிவுடன் செயல்பட அனுமதி
ஓட்டுநர் தவிர டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோவில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி
வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.
கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி
மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
11 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 25% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.
*27 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள்*
சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்.
சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை ஏசி இன்றி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி
அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் நடைபயிற்சிக்கு அனுமதி
பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி.
உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களிலும் காலை 9 மணி வரை நடைபயிற்சி அனுமதி
செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.
வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி
மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள் பழுது நீக்கும் கடைகள், சர்வீஸ் சென்டர்கள் இயங்கலாம்
வீட்டு உபயோக பொருள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி
வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.
மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி
பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி
27 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
ஏற்றுமதி நிறுவனங்கள் தவிர, இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மோட்டார் சைக்கிளில் செல்ல விரும்பினால், இ.பதிவு பெறுவது கட்டாயம்
ஐ.டி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20% பணியாளர்கள், அல்லது 10 நபர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி
வீட்டுவசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்
வணிக நிறுவனங்கள் & கடைகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
கடைகளில் நுழைவு வாயிலில் சானிடைசர் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை கட்டாயம்
கடைகளுக்கு வருவோர், பணிபுரிவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
அனுமதிக்கப்பட்ட கடைகள் ஏசி வசதி இன்றி செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
ஒரே நேரத்தில் கடைகளில், அதிகப்படியான வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது.
*27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறப்பு*
தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்புக்கு அனுமதி
டாஸ்மாக் மதுக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி.
பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் மாஸ்க் அணிவது கட்டாயம்
பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்
பொதுஇடங்கள், வீடுகளின் அருகாமையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்
பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
வெளியில் சென்று திரும்புவோர், கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கைகழுவுவது அவசியம்.
TN extends lock down until June 21st