தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஓரிரு பாடல்கள் சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக ‘பண்டாரத்தி…’ என்ற பாடல் சர்ச்சையில் சிக்கியதால், அந்த வார்த்தையை ‘மஞ்சனத்தி…’ என மாற்றிவிட்டனர்.
இதில் உரிமைக்காக போராடும் அடித்தட்டு மனிதனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
இப்படம் அடுத்த வாரம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது.
எனவே காலம் குறைவாக இருப்பதாலும் மேலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க நினைப்பதாலும் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
‘கர்ணன்’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான திலீப் சுப்ராயன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…
“காலத்திற்கு பேர் சொல்லும் படமாக கர்ணன் இருக்கும்.. 16 வயதினிலே படத்தை இன்று வரை கொண்டாடுகிறோம்.
அதுபோல தனுஷ் மாரி செல்வராஜுக்கு ‘கர்ணன்’ படம் இருக்கும்.
இடைவேளை காட்சிகளில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்ஸ் காட்சி இடைவேளையை விட 3 மடங்கு வேற லெவலில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
This popular stunt director praises Karnan the movie