ராகுல் காந்தியுடன் ரஞ்சித்-கலையரசன் சந்திப்பு; பின்னணி இதுதானா.?

ராகுல் காந்தியுடன் ரஞ்சித்-கலையரசன் சந்திப்பு; பின்னணி இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The reason behind Rahul Gandhi Director Ranjith and Kalaiyarasan meetingஇந்தியாவே விரும்பிய இளைய பிரதமர் ராஜீவ்காந்தி 30 வருடங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களின் தண்டனை காலங்கள் முடிந்தபிறகும் விடுதலை செய்யப்படாததை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், காலா இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இது தொடர்பாக சந்தித்து பேசியுள்னர்.

மேலும் அரசியல் மற்றும் திரைத்துறை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினி நடித்த காலா படத்தை தான் பார்த்ததாகவும் அப்படம் தன்னை கவர்ந்ததாகவும் ரஞ்சித்திடம் தெரிவித்தாராம் ராகுல் காந்தி.

இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தியும் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

The reason behind Rahul Gandhi Director Ranjith and Kalaiyarasan meeting

rahul gandhi ranjith meet

Exclusive : ரஜினியின் 2.0 பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஷங்கர்

Exclusive : ரஜினியின் 2.0 பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 release date confirmedஇந்திய சினிமாவையே மிரள வைக்கும் அளவுக்கு மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 2.0.

சுமார் ரூ. 500 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையைமைத்துள்ளார்.

கிட்டதட்ட ஒரு வருடமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளே.

இது எப்போது முடியும்? என்பது ஷங்கருக்கே தெரியாத நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வழியாக கிராபிக்ஸ் பணிகளை சீக்கிரம் முடித்து தருவதாக அந்த குழு தெரிவித்துள்ளதால், இப்பட ரிலீஸ் தேதியை ஷங்கர் உறுதி செய்து ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

2.0 படத்தை இந்தாண்டு 2018 நவம்பர் 29ல் ரிலீஸ் செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இது ரஜினி மற்றும் அக்சய்குமார் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என உறுதியாக நம்பலாம்.

Finally Director Shankar announced his 2poing0 movie release date

2point0 release date

டாப் ஹீரோஸ் வரிசையில் சிவா; அவருக்கே இது அதிர்ச்சிதான்.!

டாப் ஹீரோஸ் வரிசையில் சிவா; அவருக்கே இது அதிர்ச்சிதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivas Tamilpadam2 movie has special show at 5am on its release dateஒரு புதுப்படம் ரிலீஸ் என்றால் தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்படும்.

அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகாலை என்பதை விட நள்ளிரவு என்பதே சரியாக இருக்கும். 4 மணிக்கு எல்லாம் முதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் இந்த வரிசையில் அடங்கும்.

இந்நிலையில் முதன்முறையாக மிர்ச்சி சிவா நடித்துள்ள தமிழ்ப்படம் 2 படத்தின் முதல் காட்சி சென்னையில் காலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னை ரோகினி தியேட்டரில் இந்த காட்சி திரையிடப்பட உள்ளது.

சென்னையிலுள்ள ஜிகே. சினிமாஸ் தியேட்டரிலும் 5 மணி காட்சி திரையிடப்பட உள்ளது.

நிச்சயம் இந்த தகவல்கள் நடிகர் சிவாவுக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே கலாய்த்து உருவாகியுள்ள இப்படம் நாளை ஜீலை 12ஆம் தேதி வெளியாகிறது.

Sivas Tamilpadam2 movie has special show at 5am on its release date

ரஜினி-விஜய்க்கு ஆதரவு.? அன்புமணியுடன் விவாதிக்க சிம்பு சவால்!

ரஜினி-விஜய்க்கு ஆதரவு.? அன்புமணியுடன் விவாதிக்க சிம்பு சவால்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu challenge to PMK Anbumani Ramadoss to support Rajini and Vijayவெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார் சிம்பு.

இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

மாநாட்டில் நடிப்பது பற்றி சிம்பு வீடியோ ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது…

வெங்கட்பிரபு உடன் படம் பண்ண வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, அது நிறைவேறியிருக்கிறது. படத்தின் தலைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வருவதற்காக இந்தப்படம் என்று சொல்வது உண்மையல்ல.

படத்தில் ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்று நினைக்கும்போது அதை பேசியே ஆக வேண்டும், அதற்காக பயந்து போக கூடாது.

பொதுவாக சினிமாவிற்கு நிறைய பிரச்னைகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாபா தொடங்கி இப்போது சர்கார் வரை தொடருகின்றன.

சர்கார் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் ஏன் வருகிறது என அன்புமணி ராமதாஸ் கேட்டிருந்தார். இதைப்பற்றி நான் இப்போது எது பேசினாலும் தவறாகிவிடும்.

ஆகவே, விவாத மேடையில் அன்புமணி இதுகுறித்து விவாதிக்க முன்வந்தால் நான் விவாதிக்க தயாராக உள்ளேன். எங்கு, எப்போது என்று அவரே சொல்லட்டும்.

ஒரு நடிகனாக பதில் அளிக்க தயாராக உள்ளேன்.

Simbu challenge to PMK Anbumani Ramadoss to support Rajini and Vijay

மாநாடு படத்தில் சிம்பு ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு மெசேஜ்

மாநாடு படத்தில் சிம்பு ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு மெசேஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabu convey message to Simbu fans in Maanaadu posterஇன்று சிம்புவின் புதிய படமான மாநாடு பட டைட்டில் லுக் வெளியானது.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இப்படத்தை அடுத்த 2019ஆம் ஆண்டு வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில் கீழே உள்ள வாசகம் இடம் பெற்றுள்ளது.

தனியாக நின்றாலும், நியாயத்தின் பக்கம் துணையாக நிற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Venkat Prabu convey message to Simbu fans in Maanaadu poster

இது ரசிகர்களுக்கான மெசேஜ் / அட்வைஸ் ஆக இருக்குமா?

maanadu str vp sk

புது ரூட்டில் பயணத்தைத் தொடங்கும் அஜித்-சிம்பு-தனுஷ்

புது ரூட்டில் பயணத்தைத் தொடங்கும் அஜித்-சிம்பு-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Simbu and Dhanush starting their movie shoot in different styleஒரு படத்தின் சூட்டிங் தொடங்கி அது பாதியை கடந்து செல்லும் போதுதான் அப்படத்தின் தலைப்பையே அறிவிக்கிறார்கள் தமிழ் திரையுலகினர்.

இதையே ஒரு டிரெண்டாக வைத்து கொண்டாடியும் வருகின்றனர்.

விஜய்யின் சர்கார், சூர்யாவின் என்ஜிகே, சிவகார்த்திகேயனின் சீமராஜா உள்ளிட்ட பல படங்கள் இந்த வரிசையில் தான் வந்தன.

ஆனால் இதில் இருந்து மாறுபட்டு ரஜினி தன் காலா படத்தலைப்பை அறிவித்தே பின்பே தன் பட சூட்டிங்கை தொடங்கினார்.

ஆனால் தற்போது கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பை அவர் அறிவிக்கவில்லை என்பது வேறுக்கதை. இதன் சூட்டிங் நடந்து வருகிறது.

அதுபோல் சபாஷ் நாயுடு படத்தலைப்பை அறிவித்துவிட்டே தன் பட சூட்டிங்கை தொடங்கினார் கமல்ஹாசன்.

இந்நிலையில் அஜித் தன் விஸ்வாசம் படத்தலைப்பை அறிவித்து விட்டுதான் சூட்டிங்கை தொடங்கினார்.

அதுபோல் சிம்பு தன் மாநாடு படத்தை இன்று அறிவித்துவிட்டார். விரைவில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

அதுபோல் தனுஷ் அவர்களும் தன் மாரி 2, வடசென்னை படத்தலைப்புகளை அறிவித்துவிட்டே தன் பட சூட்டிங்கை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித். சிம்பு, தனுஷ் ஆகியோர் புது ரூட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Ajith Simbu and Dhanush starting their movie shoot in different style

More Articles
Follows