நியூ இயர் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ விஜய் தரும் சூப்பர் ட்ரீட்

நியூ இயர் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ விஜய் தரும் சூப்பர் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Trailerவிஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, கௌரி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவான இப்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்த்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் பட டீசர் தீபாவளி தினத்தில் வெளியானது.

இந்த நிலையில் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2021 பிறக்கும் புத்தாண்டு அன்று டிரைலர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Thalapathy Vijay’s Master trailer on New year?

மோடி பெயரில் ஆடு.. ரூ 72 லட்சத்திற்கு ஏலம் கேட்டும் கொடுக்க மறுத்த உரிமையாளர்..; அப்படியென்ன ஸ்பெஷல்?

மோடி பெயரில் ஆடு.. ரூ 72 லட்சத்திற்கு ஏலம் கேட்டும் கொடுக்க மறுத்த உரிமையாளர்..; அப்படியென்ன ஸ்பெஷல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

goat auction modi nameமகாராஷ்டிரா மாநிலத்தில் அட்பாடி என்ற மிகப்பெரிய ஆட்டு சந்தை உள்ளது.

இந்த சந்தையில் வழக்கம்போல கால்நடை வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்க கூடினர்.

அப்போது பாபுராவ் மெட்காரி என்பவர் ஒரு ஆட்டுடன் வந்துள்ளார். அவரின் ஆட்டின் பெயர் மோடி.

இந்த ஆட்டை, 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்துக்கு விட்டுள்ளார்.

ஆனால், அங்கிருந்தவர்கள் 72 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டுள்ளனர்.

ஆனாலும் 1.5 கோடி ரூபாய் கொடுத்தால்தான் விற்பேன். ஒரு பைசா குறைக்க முடியாது என தெரிவித்துள்ளார் பாபுராவ் மெட்காரி.

அப்படி என்ன ஸ்பெஷலோ..??

Here’s an interesting thing in goat auction in north india

ரஜினியும் நானும் போட்டியாளர்கள்தான்.. பொறாமைகாரர்கள் அல்ல.. அவரின் ஆதரவை கேட்பேன்.. – கமல்ஹாசன்

ரஜினியும் நானும் போட்டியாளர்கள்தான்.. பொறாமைகாரர்கள் அல்ல.. அவரின் ஆதரவை கேட்பேன்.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalசென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தன்னை கட்சியில் இணைந்து கொண்டார்.

இவர் கிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றி உள்ளார்.

இவரது பதவிக்காலம் முடிய இன்னும் 8 ஆண்டுகள் இருந்தும் பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் விருப்ப ஒய்வு பெற்றார்.

தற்போது மநீம கட்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபுவிற்கு தலைமை கழக பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களிடம் பேசினார் கமல்ஹாசன்.

அப்போது…

“டெல்லி சலோ விவசாயிகள் போராட்டத்தை அஜாக்கிரதையாக விடக்கூடாது. இது கோரிக்கை அல்ல. குரல்.

விவசாயிகளின் போராட்டத்தில் மோடியின் நடவடிக்கை எப்படி? என்ற கேள்விக்கு… ’ரோம் எரியும்போது வயலின் வாசிக்கக்கூடாது’ என்றார்.

பின்னர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது…

“ரஜினி அரசியல் பிரவேசத்தை விட அவரது ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம்.

ரஜினியும், நானும் திரைத்துறையில் போட்டியாளர்கள் மட்டுமே. ஆனால் எப்போதும் பொறாமைக்காரர்களாக இருந்தது இல்லை.

வருங்காலத்தில் ரஜினியும், நானும் போட்டியாளராக இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்பேன்.

எனக்கு தொழிலைவிட அரசியலில் தான் ஆர்வம் அதிகம்..”

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

I Seek Rajinikanth’s support says Kamal Haasan

டெல்லி சலோ : 6 நாட்களாக 6 மாநில விவசாயிகள் போராட்டம்..; மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே கண்டனம்

டெல்லி சலோ : 6 நாட்களாக 6 மாநில விவசாயிகள் போராட்டம்..; மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anna Hazareமத்தியில் ஆளும் பாஜக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் ‘டெல்லி சலோ’/போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுடன், அந்த போராட்டம் 6 வது நாள்.

இதனால், இந்தியாவின் தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து உள்ளது.

டெல்லி போலீசார் தண்ணீரைப் பீச்சி அடித்தும், புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர்.

இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நம் நாட்டில் 500 க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் இருக்கின்றன. ஆனால், பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது.

அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில், நாங்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்.. இது வரை அமைதி காத்து வந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, மத்திய அரசை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தேர்தல் சமயத்தில் விவசாயிகளிடம் வாக்கு கேட்கும் பாஜக அரசு, விவசாயிகளின் போராட்டம் நடந்தும் ஏன் விவாதிக்கக்கூடாது.

போராட்டம் நடத்தும் விவசாயிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா?”

இந்தப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் ஆனாலும் விவசாயிகள் பொறுமையுடன் நிதானத்துடன் போராடுகின்றனர்.

விவசாயப் போராட்டத்தில் வன்முறை வெடித்தால் அது யார் பொறுப்பு?

“டெல்லி சலோ” போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

Social activist Anna Hazare condemns Central govt

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு..; பாமக-வினர் வன்முறை.. இதான் மாற்றம்.. முன்னேற்றமா? பதில் சொல்ல மறுத்த அன்புமணி

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு..; பாமக-வினர் வன்முறை.. இதான் மாற்றம்.. முன்னேற்றமா? பதில் சொல்ல மறுத்த அன்புமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இது தொடர்பான கோரிக்கையை முதல்வரிடம் வைத்தார் அன்புமணி.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியதாவது…

” 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் அன்புமணியிடம் செய்தியாளர்கள்… “பாமகவினர் ரயிலில் கல்லெறிந்து வன்முறையில் செய்தது குறித்தும் மாற்றம் முன்னேற்றம் பற்றி கேள்வி கேட்டனர்.

இதை யாரோ செய்ததாக தெரிவித்தார்.

பின்னர் ஆனால் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் பாமகவினரின் கொடி டிசர்ட் அணிந்து இருந்தது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதனால் அன்புமணி கோவமாக பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்றார்.

இதனையடுத்து அன்புமணி உடன் வந்த தொண்டர் ஒருவர்… “இனிமேல் இப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாது” என மிரட்டினார்.

Netizens slams PMK for their violence in today’s protest

கெட்டவன்னு சொல்றவன நம்பலாம். நல்லவன்னு சொல்றவன கூட நம்பலாம். ஆனால் நான் மட்டும் நல்லவன்னு சொல்றவன நம்பவே கூடாது…; பிக்பாஸ் பாலாஜி பன்ச்

கெட்டவன்னு சொல்றவன நம்பலாம். நல்லவன்னு சொல்றவன கூட நம்பலாம். ஆனால் நான் மட்டும் நல்லவன்னு சொல்றவன நம்பவே கூடாது…; பிக்பாஸ் பாலாஜி பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balaji MurugaDoss‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கி 2 மாதங்களை நெருங்கும் வேளையில் அந்த வீட்டில் கால் சென்டர் டாஸ்க் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கில் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஊழியர் ஒருவருக்கு கால் செய்து பேச வேண்டும்.

மேலும் அவரை பேசி பேசியே டென்ஷன் செய்து அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு செல்வார்கள்.

இதுவரை சோம் – கேபி, ரியோ – ஆஜித் , அர்ச்சனா – பாலாஜி, சனம் – சம்யுக்தா, ரம்யா – ரமேஷ் ஆகியோர் கால் சென்டர் டாஸ்கை நிறைவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் தொடங்கியிருக்கும் கால் சென்டர் டாஸ்க்கில், பாலாஜி – ஆரிக்கு கால் செய்து பேசுவதாக உள்ளது.

அவர் பேசும்போது… “கெட்டவன்னு சொல்றவன நம்பலாம். நல்லவன்னு சொல்றவன கூட நம்பலாம். ஆனால் நான் மட்டும் நல்லவன்னு சொல்றவன நம்பவே கூடாது என பாலாஜி சொல்வதாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வாரம் வீட்டின் தலைவராக ஜித்தன் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 9-வது வாரத்தின் நாமினேஷனும் நடைபெற்றுள்ளது.

அதில் ஆஜித், அனிதா, ரம்யா, ஷிவானி, சனம், நிஷா மற்றும் ஆரி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் பார்வையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.

Balaji Murugadoss punch in today bigg boss episode

More Articles
Follows