குளோபல் பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்த ‘மாஸ்டர்’..; இந்திய சினிமாவிற்கு விஜய் தந்த பெருமை.!

குளோபல் பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்த ‘மாஸ்டர்’..; இந்திய சினிமாவிற்கு விஜய் தந்த பெருமை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘மாஸ்டர்’.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் வெளியான ஒரே நாளில் ரூ. 25 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் மாஸ்டர் மூன்றே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாம்.

சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய படம் குளோபல் பாக்ஸ் ஆபீஸில் ‘மாஸ்டர்’ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay’s Master becomes the number one film at the worldwide box office!

ஷாரூக்கானை அடுத்து டாக்டர் பட்டம் பெற்ற பாலா..; பினராயி விஜயன் தலைமையில் பாராட்டு் விழா

ஷாரூக்கானை அடுத்து டாக்டர் பட்டம் பெற்ற பாலா..; பினராயி விஜயன் தலைமையில் பாராட்டு் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bala veeram actor தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வரும் சிவாவின் தம்பி ஆவார் இவர்.

மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். அப்படியே இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம்’ நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளையும் சேவைகளையும் மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்..

ஆனால் நடிகர் பாலா கலைத்துறையை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது..

அதிலும் இந்த கவுரவ டாக்டர் பட்டம் இதற்கு முன்பு வட இந்தியாவில் ஷாருக்கானுக்கும், தற்போது தென்னிந்தியாவில் நடிகர் பாலாவுக்கும் என இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

தென்னிந்தியாவிலேயே மனிதாபிமானத்திற்காக டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரான நடிகர் பாலாவை, வரும் ஜன-24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் மாண்புமிகு. பினராயி விஜயன் கவுரவிக்க இருக்கிறார்.

இந்த கவுரவ டாக்டர் பட்டம் என்னவோ போகிற போக்கில் பாலாவுக்கு கொடுக்கப்பட்டுவிடவில்லை.. அவர் தொடர்ந்து மனிதாபிமானத்துடன் மேற்கொண்டு வரும் சமூக சேவை செயல்பாடுகளை எல்லாம் கடந்த ஐந்து வருடங்களாக கவனித்து, அவற்றை கணக்கில் கொண்டே, இந்த டாக்டர் பட்டத்திற்காக அவரைத் தேர்வு செய்துள்ளது ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம்.

ஆம்.. பாலாவை பொருத்தவரை பலருக்கும் ஒரு நடிகராகத்தான் தெரியும்.. ஆனால் கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலா, தனது ‘நடிகர் பாலா தொண்டு நிறுவனம்’ மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார்..

அதிலும் குறிப்பாக இந்த கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைத் தத்தெடுத்துக்கொண்ட பாலா, அந்த குடும்பங்களின் ஒவ்வொரு தேவையையையும் பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்து வருகிறார்.

அடித்தட்டு மாணவர்களுக்கான கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுதல், வீடு கட்டிக் கொடுத்தல், மருத்துவ உதவிகள் மற்றும் தேவைப்படுவோருக்கு மிக உயர்ந்த கட்டண செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்வது என நடிகர் பாலா செய்துவரும் உதவிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது..

இந்த டாக்டர் பட்டம் கிடைத்தது பற்றி நடிகர் பாலா கூறும்போது, “யாருமே நூறு வயது வரை வாழப்போவது கிடையாது.. இந்த வயதில் நாலு பேருக்கு நம்மால் நல்லது பண்ண முடியும் என்பதற்கு எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.. இப்போது என் பொறுப்பு இன்னும் கூடுதலாகி இருப்பதாக நினைக்கிறேன்..

முன்னைவிட இன்னும் முழு வீச்சில் எனது சமூக சேவைகள் தொடரும்.. மேலும் இதை பார்க்கும்போது இதுபோன்று மனிதாபிமானத்துடன் உதவி செய்ய நினைக்கும் பலருக்கும் இது உத்வேகம் தருவதாக இருக்கும்” என்கிறார் தன்னடக்கத்துடன்.

IMG-20210119-WA0020

Veeram actor Bala gets this prestigious award

தல அஜித்தை அடுத்து தளபதி விஜய்க்கும் வில்லனாகும் பிரபல ஹீரோ.!?

தல அஜித்தை அடுத்து தளபதி விஜய்க்கும் வில்லனாகும் பிரபல ஹீரோ.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay ajithநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ’தளபதி 65’ (தற்காலிக பெயர்) படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இப்பட முதற்கட்ட பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹெக்டே நடிப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் நாயகி யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் தளபதி 65 படத்தில், விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து அருண் விஜய் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Team Thalapathy 65 approached this actor for Villain role

‘நவரசா’ ஆந்தாலஜி மூலம் 10000 திரையுலகத்தினருக்கு உதவும் மணிரத்னம் & ஜெயேந்திர பஞ்சபகேசன்

‘நவரசா’ ஆந்தாலஜி மூலம் 10000 திரையுலகத்தினருக்கு உதவும் மணிரத்னம் & ஜெயேந்திர பஞ்சபகேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Navarasaகொரோனா அச்சுறுத்தலால் தமிழ் திரையுலகானது கடுமையான பாதிப்பினால் திணறி வருகிறது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் இருவரின் முயற்சியால் தமிழ் திரையுலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் ஆதரவையும் மறுவாழ்வையும் பெற்றிருக்கிறார்கள்.

இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, கடந்த 2020 அக்டோபரில் இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் ஆகியோர்கள், தமிழ் சினிமாவின் படைப்பாளர்களை ஒன்றிணைத்து, தனித்துவமான ஒரு திட்டத்தை அறிவித்தனர்.

முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கான ஒன்பது திரைப்படங்கள் கொண்ட ஆந்தாலஜியாக ‘நவரசா’ உருவாகி வருகிறது.

இந்த ஆந்தாலஜி மூலம் திரையுலகை உயிர்ப்பிக்க தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள்.

அதோடு, தமிழ் திரையுலகில் தேவைப்படுபவர்களுக்கு உதவ பல கோடி நிதி திரட்டப்படுகிறது.

இந்த புதுமுயற்சிக் குறித்து இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் இருவரும் குறிப்பிடும்போது,…

“ எதிர்பாராத இச்சூழலின் போது ஆதரவை வழங்குவதற்காக தொழில்துறையை ஒன்றிணைத்ததால் ‘நவரசா’ ஆந்தாலஜியானது உண்மையிலேயே ஒற்றுமையின் ஒரு பிரதிபலிப்பு என்றே கூறலாம்.

இத்திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் தொகையானது தகுதியுடைய 10,000-க்கும் மேற்பட்ட திரையுலக கலைஞர்களுக்கு ஆதரவாகவும், உதவியாகவும் சென்றடைய இருப்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இப்பணியானது வருகிற 2021 பிப்ரவரி மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் திறம்பட அடையாளம் காணவும், அடையவும், தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் உதவியை நாடினோம்.

இந்த நிவாரணத்தை ஒவ்வொரு தொழிலாளி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் வழங்குவதற்காக உதவித் திட்டத்திற்காக, பேரழிவு நிவாரணத்தில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள பூமிகா டிரஸ்டுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்.

அதோடு, இந்த நிவாரணம் மூலம் தொழில் மீண்டும் வலுவாக வளரும் என நம்புகிறோம். மேலும், எல்லா இடங்களிலும் ரசிகர்கள் விரும்பப்படும் படைப்புகள் தொடர்ச்சியாக உருவாக உதவும் என்றும் நம்புகிறோம் ” என்றனர்.

Over 10000 people from the Tamil film industry will receive support from the initiative helmed by Directors Mani Ratnam and Jayendra Panchapakesan

அடையார் கேன்சர் ஹாஸ்பிட்டல் தலைவி மருத்துவ தேவதை சாந்தா மரணம்.!

அடையார் கேன்சர் ஹாஸ்பிட்டல் தலைவி மருத்துவ தேவதை சாந்தா மரணம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dr V Santhaசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகியுமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93.

65 ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சைக்காக ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறார்.

மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

தனக்கென தனியாக சமைக்காமல் அவர்களுக்கு சமைக்கப்படும் உணவைத் தான் டாக்டர் சாந்தாவும் உண்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் நோயாளிகளுக்காக வாழ்ந்து தன் வாழ்வுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவரின் மறைவுக்கு பிரமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

*சாந்தா பற்றிய தகவல்கள் இதோ…*

மெட்ராஸ்ல் (1927) பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர் ஆவார்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் அவர்கள் சாந்தாவின் தாய்மாமன்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் 1955-ல் எம்.டி. பட்டம் பெற்றார்.

நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், எம்.டி. பட்டம் பெற்ற உடனேயே மருத்துவர் பணியில் இணைந்தார்.

இவரின் மருத்துவ சேவையால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பல சாதனைகளை இந்திய வரலாற்றில் படைத்துள்ளது.

தனக்கு வழங்கப்படும் விருதுகள் மூலம் கிடைக்கும் தொகையை கூட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்து வந்தார்.

புற்றுநோய்காக உலகில் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை உடனடியாக இந்த மருத்துவமனையில் அறிமுகம் செய்வார்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

புற்றுநோய் தொடர்பாக சர்வதேச இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

Adyar Cancer Institute chair person Dr V Santha passes away due to illness

சிபிராஜை விட ஜெயபிரகாஷுடன் நல்ல பெமிஸ்டரி..; தனஞ்செயன் போல தயாரிப்பாளரை பார்த்ததில்லை… – நந்நிதா

சிபிராஜை விட ஜெயபிரகாஷுடன் நல்ல பெமிஸ்டரி..; தனஞ்செயன் போல தயாரிப்பாளரை பார்த்ததில்லை… – நந்நிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nandita Swethaகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து
தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று ஜனவரி 18 சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், .எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

சிறப்பு
விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

நடிகை நந்திதா ஸ்வேதா பேசுகையில்…

“எனக்கு முன்பு பேசிய அனைவரும் அனைத்தும் சொல்லிவிட்டார்கள். நான் பொதுவாக நடிக்க கூடிய கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் விரும்புவேன்.

அப்படி ஒரு கதாப்பாத்திரம் தான் இந்த கதாப்பாத்திரம். தனஞ்செயன் சார் பற்றி
அனைவரும் சொல்வது உண்மை தான். அவரைப்போன்ற தயாரிப்பாளரை நான் பார்த்ததில்லை. அவர் ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பதோடு, திரைக்கதையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். இப்படி ஒரு தயாரிப்பாளர் சினிமா இண்டஸ்ட்ரிக்கும் முக்கியம்.

இந்த படத்தை நான் கன்னடத்தில் பார்த்துவிட்டேன். ரொம்ப சிறப்பான படம்.
இயக்குநர் பிரதீப்பிடம் எமோஷ்னல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும், என்பதை கற்றுக்கொண்டேன்.

இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். படத்தில் எனக்கும் சிபிக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட ஜெயப்பிரகாஷ் சாருக்கும், எனக்கும் இடையே தான் நல்ல கெமிஸ்ட்ரி. அவருடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.

எனக்கு அப்பாவாக அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த பந்தம் இப்போதும் தொடர்கிறது. அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது.

சிபி ஜாலியான மனிதர். சீரியசான படமாக இருந்தாலும் சிபி இருந்ததால் செட் எப்போதும் ஜாலியாக இருக்கும். எனக்கு இந்த பட வாய்ப்பு கொடுத்ததற்கு லலிதா மேடமுக்கு நன்றி. படத்தின் இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளருக்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

Actress Nandita Swetha speech at Kabadadaari audio launch

More Articles
Follows