JUST IN: +2 Public Exam Time Table.. மே 3 முதல் ஆரம்பம்..; தேர்வு அட்டவணை வெளியீடு

JUST IN: +2 Public Exam Time Table.. மே 3 முதல் ஆரம்பம்..; தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

+2 students (2)கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் இயங்காமல் இருக்கின்றன.

எனவே பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுத்தேர்வை கணக்கில் கொண்டு 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்காக பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 30-40% வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, வகுப்பு நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி அந்த மாத இறுதியில் முடிவடையும்.

தற்போது கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெறவுள்ளன.

அதாவது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு பிற்பகல் 1. 15 மணிக்கு முடிவடையும்.

மாணவர்களுக்கு கேள்வித்தாள்களை படிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

+2 பொதுத் தேர்வு அட்டவணை இதோ…

Tamilnadu 12th Time Table 2021 Out

+2 Time Table

துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கம்..; தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கம்..; தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் கடந்த சில வருடங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

தங்கள் அரசு பணிகளை செய்யவிடாமல் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பிரச்னை செய்வதாக முதல்வர் நாராணயணசாமி தெரிவித்து வந்தார்.

எனவே கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் மனுவை புதுச்சேரி முதல்வர் கொடுத்திருந்தார்.

இதனிடையே புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம் ஏற்ப்பட்டது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மொத்தம் 33 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம், சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் சேர்த்து 14 ஆக குறைந்துள்ளது.

இவை தவிர 3 நியமன எம்.எல்.ஏக்கள் உடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்தது.

எனவே காங்கிரசின் ஆட்சி புதுச்சேரியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. சபாநாயகரும் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

கிரண் பேடி விடுவிப்புக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Kiran Bedi removed as Puducherry LG and Tamilisai Soundararajan given additional charge

தெலுங்கு ரசிகர்களையும் வியக்க வைத்த விஜய் சேதுபதி..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

தெலுங்கு ரசிகர்களையும் வியக்க வைத்த விஜய் சேதுபதி..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi uppena (1)புஜ்ஜி பாபுவின் இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி் நடித்த தெலுங்கு படம் ‘உப்பெனா’.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் விஜய்சேதுபதியின் நடிப்பு வியக்க வைத்துள்ளது.

அவரின் நடிப்பை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படம் வெளியான மூன்று நாட்களிலேயே சுமார் 45 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

தமிழை போலவே தெலுங்கிலும் மாஸ் காட்ட தொடங்கி விட்டார் மக்கள் செல்வன்.

Massive response for Vijay Sethupathi acting in telugu movie

மும்பை தொழிலதிபரை 2வது திருமணம் செய்த நடிகை தியா

மும்பை தொழிலதிபரை 2வது திருமணம் செய்த நடிகை தியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dia Mirzaபாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தியா மிர்சா.

தமிழில் ‘என் சுவாச காற்றே’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

பாலிவுட்டில் சில படங்களையும. தயாரித்துள்ளார்.

தற்போது நாகர்ஜுனா உடன் வைல்டு டாக் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் தியா.

இவர் 2014ல் சாஹில் சங்கா என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார். 5 ஆண்டுகளில் அவரை விவாகரத்தும் செய்தார்.

தற்போது மும்பை தொழிலதிபர் வைபவ் ரேகி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Actress Dia Mirza married at 40

சூர்யா – சத்யராஜ் இணையும் படத்தில் வடிவேலு..; 12 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி

சூர்யா – சத்யராஜ் இணையும் படத்தில் வடிவேலு..; 12 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இப்படம் தற்காலிகமாக ‘சூர்யா 40’ என் அழைக்கப்பட்டு வருகிறது.

பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்க சத்யராஜ் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார்.

கிராமப்புற கதையை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்குகின்றனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இதில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘ஆதவன்’ படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தார் வடிவேலு.

தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணையும் படம் இதுவாக அமைய வாய்ப்புள்ளது.

Vagai Puyal Vadivelu to join Suriya 40 ?

suriya 40

இளையராஜா ஸ்டூடியோவை ரசித்த ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? (வீடியோ)

இளையராஜா ஸ்டூடியோவை ரசித்த ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை தி நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ (பழைய எம்எம் தியேட்டர்) கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை இளையராஜா தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் , அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.

பின்னர் இளையராஜா சொந்த ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த்.

ஸ்டூடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார்.

பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

சமீபகாலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Rajinikanth At Isaignani ilayaraja new studio

More Articles
Follows