தியேட்டர்களில் 50% சீட் அனுமதியென்றால் ‘மாஸ்டர்’ மட்டுமே ரிலீஸ்.; சிக்கலில் ‘ஈஸ்வரன்’.? யார் சொன்னாங்க தெரியுமா?

தியேட்டர்களில் 50% சீட் அனுமதியென்றால் ‘மாஸ்டர்’ மட்டுமே ரிலீஸ்.; சிக்கலில் ‘ஈஸ்வரன்’.? யார் சொன்னாங்க தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு தீபாவளி சமயத்தில் நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.

அப்போது 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்பே மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர்.

தியேட்டர்கள் மூடிய அரங்கு என்பதால் இது ஆபத்தானது. அங்கு கொரோனா எளிதில் பரவும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

தமிழக அரசின் உத்தரவை மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் கண்டித்துள்ளது.

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்.?

கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்… ” 100% ரசிகர்கள் அனுமதி என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றால் ‘மாஸ்டர்’ படம் மட்டுமே வெளியிடப்படும்.

ஒருவேளை விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தள்ளிப் போனால் மட்டுமே சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் தியேட்டர்களில் வெளியிட முடியும்” இவ்வாறு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu theatre owners’ association head Tiruppur Subramaniam has said they will give first preference for Thalapathy in Master

tirupur subramaniam

‘கயல்’ ஆனந்திக்கு திடீர் கல்யாணம்..; உதவி இயக்குனரை மணந்தார்!

‘கயல்’ ஆனந்திக்கு திடீர் கல்யாணம்..; உதவி இயக்குனரை மணந்தார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kayal Anandhi marriageதெலுங்கு சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆனந்தி.

இவர் தமிழில் ‘பொறியாளன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் ‘கயல்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானதால் இவர் பெயருடன் கயல் ஒட்டிக் கொண்டது.

இதன் பின்னர் சண்டிவீரன், த்ரிஷா இல்லேன்னான நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, என் ஆளோட செருப்ப காணோம். விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஜனவரி 7ஆம் தேதி வாரங்கல்லில் ஆனந்திக்கு திருமணம் நடக்கிறது.

மாப்பிள்ளையின் பெயர் சாக்ரட்டீஸ் என தெரிய வந்துள்ளது.

மணமகன் சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனராம்.

‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக சாக்ரடீஸ் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பெற்றோர்கள் பார்த்த வரன் என கூறப்பட்டாலும் இந்த திடீர் திருமணத்திற்கான காரணம் தெரியவில்லை.

ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள முடித்துள்ள… “டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, ஏஞ்சல், ராவணகூட்டம்” ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்யாணத்திற்கு பிறகு கயல் ஆனந்தி நடிப்பாரா? எனத் தெரியவில்லை.

ஆனந்தியின் இல்லற வாழ்க்கை ஆனந்தமாக அமைய வாழ்த்துவோம்…

Kayal Anandhi getting married today in Andhra

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் பிரியா பவானி சங்கர் & மனுஷ்யபுத்திரன் & டிஜே

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் பிரியா பவானி சங்கர் & மனுஷ்யபுத்திரன் & டிஜே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pathu Thalaசிம்பு @ எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வரும் கோடை காலத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், படத்தில் இணைந்து வரும் நடிகர் பட்டாளம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச்செய்கிறது.

சமீபத்தில் ப்ரியா பவானி சங்கர் படத்தில் நாயகியாக இணைந்த நிலையில் தற்போது தமிழக இலக்கிய ஆளுமை, கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பாடகர் அசுரன் படப்புகழ் டிஜே இப்படத்தின் நடிகர் குழுவில் இணைந்துள்ளனர்.

இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா கூறியதாவது…

தமிழக இலக்கிய ஆளுமை, கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பாடகர் டிஜே அவர்களை எங்கள் படத்திற்கு, வரவேற்பதில் மகிழ்சியடைகிறோம்.

மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவித்திறமையும், இலக்கிய திறமையும் பிரசித்தி பெற்றது. இப்படத்தில் சமூக சேவகர் உதயமூர்த்தி எனும் கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நிறைய நேர்மறைதன்மை கொண்ட, படத்தின் கதையில் அழுத்தம் தரும் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரம் அது.

டிஜே வின் புகழும் “அசுரன்” போன்ற படத்தில் அவர் காட்டிய நடிப்பு திறமையும் அனைவரும் அறிந்ததே. மிக அழுத்தமான நெகட்டிவ் தன்மை கொண்ட பாத்திரத்தை அப்படத்தில் அவர் செய்திருந்தார். இப்படத்திற்கான கதாப்பாத்திரத்திற்காக, அவரை அணுகிய போது அவர் லண்டனில் இருந்தார். எங்கள் முழு உரையாடலும் zoom calls ல் தான் நடந்தது.

அவருக்கு லுக் டெஸ்ட் எடுப்பது என்பது இயலாது என்றே நாங்கள் நினைத்தோம் ஆனால் அவரே ப்ரத்யேகமாக கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை தயார்செய்து கொண்டு லண்டனில் இருந்து கொண்டே லுக் டெஸ்ட் செய்தார். அவரது லுக் டெஸ்ட் புகைப்படம் மிக அட்டகாசமாக கதாப்பாத்திரத்துடன் பொருந்தியிருந்தது. அதனை படத்தின் விளம்பரங்களுக்கான போஸ்டரில் பயன்படுத்தவுள்ளோம்.

இப்படத்தின் மிகச்சிறந்த திறமையாளர்களுடன், பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

“பத்து தல” படத்தினை “சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை” படப்புகழ் இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இயக்குகிறார். தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார்…

STR in Pathu Thala movie updates

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வேண்டும்..; கொரோனா வந்தா தான் சிம்புக்கு தெரியும்.. – கருணாஸ்

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வேண்டும்..; கொரோனா வந்தா தான் சிம்புக்கு தெரியும்.. – கருணாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karunasஇன்று காலை தமிழக காவல்துறை டிஜிபியை சந்தித்தார் நடிகரும் திருவாடனை எம்எல்ஏவுமான கருணாஸ்.

அப்போது தேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் சென்னை நந்தனம் தேவர் சிலை தொடங்கி பசும்பொன் வரை நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி மனு அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது… “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.

1994-ம் ஆண்டு தேவர் சிலையை நந்தனத்தில் திறந்து வைத்தார் ஜெயலலிதா. அப்போது கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் இனம் என அறிவித்தார்.

அந்த அரசாணையை உடனடியாக நடைமுறைபடுத்தனும்.

தற்போது திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாகபோய் விடக்கூடாது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

கொரோனாவை வெல்வோம், கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை உள்ளது?

நடிகர் சிம்பு அது போல் பேசியது தவறு.. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி?

அவருக்கு கொரோனா வந்தால் தான் தெரியும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளேன்” என பேசினார் கருணாஸ்.

MLA Karunaas reply to Silambarasan TR

தனுஷ் படத்தில் ‘மாஸ்டர்’ நாயகியுடன் ‘தடம்’ நாயகியும் இணைந்தார்

தனுஷ் படத்தில் ‘மாஸ்டர்’ நாயகியுடன் ‘தடம்’ நாயகியும் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ்பாலிவுட்டில் ‘அத்ரங்கி ரே’, கோலிவுட்டில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

மேலும் தாணு தயாரிப்பில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை யுவன்.

இதனையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இதில் நாயகியாக ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்த நிலையில் மற்றொரு நாயகியாக ஸ்மிருதி வெங்கட் இணைந்துள்ளதை படக்குழு சற்றுமுன் அறிவித்துள்ளது.

தடம், மூக்குத்தி அம்மன் படங்களில் ஸ்மிருதி நடித்துள்ளார்.

மேலும் தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்னி நட்சத்திரம், பற்ற வைத்த நெருப்பொன்று ஆகிய படங்களிலும் ஷ்மிருதி வெங்கட் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thadam girl Smruthi Venkar is part of D43

பொங்கல் முடிந்தவுடன் தமிழக பள்ளிகள் திறப்பு..; முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்

பொங்கல் முடிந்தவுடன் தமிழக பள்ளிகள் திறப்பு..; முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

School reopen 2021கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தீபாவளி சமயத்தில் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதன் முடிவில் பள்ளிகள் திறக்க அதிகப்படியான பெற்றோர்கள் & மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்க இரண்டாம் கட்ட பெற்றோர்கள் கருத்து கேட்பு இன்று ஜனவரி 6 முதல் வருகிற 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற கருத்து கேட்பின் படி தமிழகத்தில் 10,11, மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் வருகிற ஜனவரி 18-ஆம் தேதி திறக்கப்படும் எனவும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை முதல்வர் விரைவில் வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

TN Schools likely to reopen after Pongal

More Articles
Follows