‘என்னு நிண்டே மொய்தீன்’ பட இயக்குனருடன் இணைந்த இசையமைப்பாளர் கே.பி.

‘என்னு நிண்டே மொய்தீன்’ பட இயக்குனருடன் இணைந்த இசையமைப்பாளர் கே.பி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director KBஇசை இயக்குனர் கே.பி. அவர்களின் இசையமைப்பில் வெளியான ஆல்பம் தற்போது மொழியியல் தடைகளை தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு வி கிரியேஷன்ஸ், ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் மற்றும் பல புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் உடன் இணைந்த உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம் அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது பி.ஜி.எம், அவரின் மற்ற பன்முகப்படுத்தப்பட்ட ஆல்பங்கள் மற்றும் அவரது தனித்துவமான இசை பாணி அவரை இசை பிரியர்களின் விருப்பமான நட்சத்திரமாக மாற்றுகிறது.

இத்தகைய பாராட்டத்தக்க படைப்புகளின் தொடர்ச்சியாக இப்போது அவருக்கு ஒரு மகத்தான வாய்ப்பை ஏற்படுத்தியது தான் ‘சூரியபுத்ரா மகாவீர் கர்ணன்’ திரைப்படம்.

பல மொழிகளில் பெரிய பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டு பான்-இந்தியன் திரைப்படம் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜாக்கி பூஜா என்டர்டெயின்மென்ட்டின் ஜாக்கி பகானி என்பவரால் தயாரிக்கப்பட உள்ளது.

பிரபல இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கியுள்ளார்.

(இவர் பிருத்விராஜ் மற்றும் பார்வதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியுள்ளார்).

மேலும் கே.பி மலையாளத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அதே போன்று தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கும் இசையமைக்கிறார்.

இவை அனைத்தும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு
இயக்கப்படுகின்றன.

Suryaputre Mahavir Karna’s Music Director KP.

அபிசரவணன் & பிரியங்கா இணையும் ‘தராதிபன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சக்தி வேலன்

அபிசரவணன் & பிரியங்கா இணையும் ‘தராதிபன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சக்தி வேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல சக்தி ஃபிலிம் பேக்டரி டிஸ்டிபியூட்டர் சக்தி வேலன் R.S.K. எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள *தராதிபன்* படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

R.S.K.எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் *H.சையத்* இயக்கத்தில், *அபி சரவணன்* வழங்கும் *தராதிபன்* படம் ஒரு திரில்லர் கலந்த காதல் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே H.சையத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் *யாமா* படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.

மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது.

இந்த முக்கிய அறிவிப்பை மக்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என அப்படத்தின் இயக்குனர் *H.சையத்* அவர்கள் தெரிவித்துள்ளார்.

Cast & crew
கதாநாயகன் – அபிசரவணன்
கதாநாயகி – பிரியங்கா
இயக்கம் – H.சையத்
ஒளிப்பதிவு – S.சக்திவேல்
இசை – L.V.முத்து கணேஷ்
படத்தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின்
கலை – C.S.சாய்மணி
பாடல்கள் – கவிஞர் பிறைசூடன், மதுரா
நடனம் – I.ராதிகா, தஸ்தா
ஸ்டண்ட் – ராக்கி ராஜேஷ்
ஸ்டில்ஸ் – தேனி சீனு
ஒப்பனை – ராவ்
ஒலி – A.M.ரஹ்மதுல்லா
DI – ஷேட் 69 ஸ்டுடியோஸ்
Sfx – சவுண்ட் ஹோலிக் சினிமா
VFX Design – N.டாக்கீஸ்
மீடியா பார்ட்னர் – லைட்சன் மீடியா
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்
தயாரிப்பாளர் – அபிசரவணன்
மக்கள் தொடர்பாளர் – பிரியா

Abi Saravanan and Priyanka joins for Tharathipan

IMG-20210604-WA0080

BIG NEWS ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின்

BIG NEWS ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK-Stalin-5தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜூன் 14ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது

11 மாவட்டங்கள் தவிர, எஞ்சிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்த ஜூன் 14 வரை ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன?

காய்கறி, பழங்கள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

மீன்சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்

சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கன்ககள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

Tamilnadu extended Covid19 lockdown till 14th June with relaxation

Lockdown extended till 14 June – 6 am. Major points mentioned below

Existing conditions shall continue apart from certain relaxation’s

1. Groceries, Vegetable stores can work from morning 6 am to 5 pm

2. Similar road side vendors selling vegetable and flowers can work from morning 6 am to 5 pm

3. Fish market & Slaughter house will be allowed only wholesale meantime they work on finding alternative for retail sales

4. Government offices are allowed to work with 30% workforce

5. Private security agencies and house keeping services are all allowed with E pass registration.

6. Self employed electrician, plumbers, motor technicians are allowed to work from morning 6 am to 5 pm with E pass

7. Electrical goods stores shall be open from 6 am to 5 pm

8. Service centres of automobile will be allowed to operate from 6 am to 5 pm

9. Taxi / Cab / Auto shall be allowed to operate with E pass. Car : 3 Pax, Auto 2 Pax

10. Tourism places such as Ooty, Yelagiri can travel only on emergency purpose with E Pass.

ரஜினி விஜய் சூர்யாவுக்கு பிறகு தனுஷுக்கு கிடைத்த கௌரவம்..; ரசிகர்கள் ரகிட.. ரகிட… ஆட்டம்

ரஜினி விஜய் சூர்யாவுக்கு பிறகு தனுஷுக்கு கிடைத்த கௌரவம்..; ரசிகர்கள் ரகிட.. ரகிட… ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது..

இந்த நிலையில் ட்விட்டர் எமோஜியை வெளியிட்டுள்ளது படக்குழு.

ட்விட்டர் தளத்தில் #JagameThandhiram, #JagameThandhiramOnNetflix, #LetsRakita, #Rakita மற்றும் #Suruli ஆகிய ஹேஷ்டேக்குகளை வைத்து ட்வீட் செய்தால் எமோஜி வருவது போன்று படக்குழு வடிவமைத்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், ட்விட்டர் எமோஜி கொண்ட முதல் படமாக ‘ஜகமே தந்திரம்’ அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘காலா’, ‘2.0’, ‘என்.ஜி.கே’, ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களுக்கு ட்விட்டர் எமோஜி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Dhanush in Jagame Thanthiram gets twitter emoji

இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் ஜிப்ரான் இசை..; ஊரடங்கில் இசைக்கலைஞர்களுக்கு உதவி.!

இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் ஜிப்ரான் இசை..; ஊரடங்கில் இசைக்கலைஞர்களுக்கு உதவி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghibran music directorஇசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர்.

பல்வேறு புதுவித இசைமுயற்சிகளால், ரசிகர்களிடம் பெரும் புகழை குவித்துள்ளார்.

அவரது பாடல்கள் மட்டுமல்லாமல் அவரது பின்னணி இசையும் பரவலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

“சாஹோ” படத்தின் இசையால் இந்திய அளவில் கவனம் குவித்த அவர், தற்போது அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT Non Fungible Token எனும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார்.

இம்முறையில் மிக உயரிய விலைக்கு இந்த இசைத்தொகுப்பினை எவர் வேண்டுமானாலும் வாங்க முடியும். அந்த வகையில் இதன் மூலம் கிடைக்கும் நிதி, நமது தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நிவாரண நிதி அமைப்பிற்கும், இக்காலகட்டத்தில் பணியின்றி தவிக்கும் இசைத்துறை சார்ந்தோருக்கும் பிரித்து அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…

படத்தில் இடம்பெறாத “சாஹோ” பட ஹீரோ தீம் இசையை, NFT ( Non-Fungible Token ) முறையில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த முறையில் வரும் தொகையில் 50% தமிழ்நாடு முதலமைச்சர் M.K. ஸ்டாலின் அவர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கும், அடுத்த 50% , கொரோனா தொற்றின் காரணமாக வேலையில்லாமல் அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படும்.

இதுதான் இந்தியாவின் முதல் முறையாக இசைத்துறையிக் செய்யப்பட்ட NFT ( Non-Fungible Token ) முயற்சி ஆகும்.

இந்த இசை தொகுப்பினை, பட இயக்குநரை தவிர வேறு யாரும் கேட்டதே இல்லை, இந்த இசை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் அப்போது காட்சியின் தன்மை கருதி, வேறு வகையிலான இசைத்துணுக்கை செய்தோம். அதனால் இந்த இசையினை எங்குமே வெளியிடவில்லை.

இந்த NFT ( Non-Fungible Token ) வெளியீட்டு முறையின் சிறப்பம்சம் என்னவென கேட்ட போது, இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…

இந்த ஏலத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள், இந்த இசைத்தொகுப்பினை உயரிய விலை ஒன்றை அளித்து வாங்கலாம்.

இந்த இசைத்தொகுப்பு ஒரே ஒரு நகல் மட்டுமே இருக்கும். அதிக தொகையில் ஏலம் எடுப்பவருக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும் எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் 2021 ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்றார்.

Music director Ghibran’s new initiative in covid 19

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன்

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VR Nagendranபல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின் ‘காவல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகரும் இயக்குனருமான V.R.நாகேந்திரன்.

சில தினங்களாக இவர் தான் வசிக்கும் பகுதியில் பசியால் வாடுவோருக்கு உணவளிப்பது பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி பலரும் இவருடன் இணைந்து இந்த சேவையில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

V.R.நாகேந்திரன் அவர்கள் கூறுகையில், “ஒரு நாள் என் வீட்டு வாசலில் இரண்டு நபர்கள் வந்து உணவு கிடைக்குமா என்று கேட்டனர், கொடுத்தேன். இந்த ஊரடங்கு காலத்தில் சிலர் உணவை கேட்டு பெறுகின்றனர் ஆனால் பலர் யாரிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் பசியால் வாடுகின்றனர்.

தினமும் என்னால் முடிந்த அளவு பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

யாரிடமும் உதவியை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் துவங்க நினைத்தேன். என் மகளின் பள்ளி செலவுகாக வைத்திருந்த தொகையை வைத்து சென்னை அசோக் நகரில் நான் வசிக்கும் இடத்தில் ’பசித்தவர்கள் எடுத்து கொள்ளலாம்’ என்ற பலகை போட்டு உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு தினமும் காலை 8 முதல் 8.30 வரை, மதியம் 1 முதல் 1.30 வரை கொடுத்து வந்தேன்.

இந்த விஷயத்தை அறிந்து என் இயக்குனர் சுசி கணேசன், மற்ற இயக்குனர்கள் லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ், என் நண்பர்கள், என் அடுக்கு மாடி குடியிருப்பின் செயலாளர் உள்ளிட்ட பலர் அவர்களது பங்களிப்பு இந்த நற்செயலில் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு நிதியுதவி அளித்தனர். இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் என்னை ஊக்குவித்தனர்.

50 உணவு பொட்டலங்களாக ஆரம்பித்த இந்த செயல் தற்போது 400 பொட்டலங்களை எட்டியுள்ளது. தூய்மை பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள், துணை இயக்குனர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் என பலரும் இந்த உணவு பொட்டலங்களை தினம் எடுத்து செல்வதை பார்க்கையில் உள்ளத்தில் ஒரு ஆனந்த பூரிப்பு ஏற்படுகிறது” என்றார்.

“தமிழக அரசு அனைத்து தேவையான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் நாமும் நம்மால் இயன்ற உதவிகளை இல்லாதவருக்கு செய்வோம்.

கொரோனா என்னும் சங்கிலியை உடைத்தெறிவோம். உதவி என்னும் சங்கிலியை தொடர்வோம்” என்று V.R.நாகேந்திரன் கூறினார்.

Director VR Nagendran provides food to poor people

More Articles
Follows