டெல்லியை டார்கெட் செய்யும் சூர்யா; ஜூலையில் ஆரம்பம்.!

டெல்லியை டார்கெட் செய்யும் சூர்யா; ஜூலையில் ஆரம்பம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya targeting Delhi for his 37th movie Shooting Starts in Julyசெல்வராகவன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. இது சூர்யாவின் 36வது படமாகும்.

இதனையடுத்து சூர்யாவின் 37-வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதவுள்ளார்.

கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்ய, கலை பணிகளை கிரண் மேற்கொள்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் சூட்டிங்கை பெரும்பாலும் டெல்லியில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இதன் சூட்டிங் வருகிற ஜூலை மாத இறுதியில் துவங்கவுள்ளது.

Suriya targeting Delhi for his 37th movie Shooting Starts in July

அபரந்தியை ஆர்யா திருமணம் செய்யனும்; ஷாம்-பரத்-கலையரசன் சிபாரிசு

அபரந்தியை ஆர்யா திருமணம் செய்யனும்; ஷாம்-பரத்-கலையரசன் சிபாரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abaranthiதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிவி கலர்ஸ் டிவி.

இதில் ஒளிப்பரப்பாகும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் ஒரு பெண்ணை நடிகர் ஆர்யா திருமணம் செய்யவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி கடந்த சில நாட்களாகவே டிவியில் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

ஆர்யாவின் ஜோடி யார்யா? என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ஆர்யாவின் நண்பர்களும், நடிகர்களுமான ஷாம், பரத், கலையரசன் மூவரும் போட்டியாளர்களில் ஒருவரான அபரந்தி என்ற பெண்தான் ஆர்யாவுக்கு பொருத்தமானவராக இருப்பார் எனத் தெரிவித்துள்ளனர்.

அந்த அதிர்ஷ்டசாலி பெண் யார்? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Abaranthi will be perfect match for Actor Arya

லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையும் மிஷ்கின்-சாந்தனு

லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையும் மிஷ்கின்-சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanthanu and mysskinதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். இவர் அவ்வப்போது படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் படங்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் இயக்கிய விஷாலின் துப்பறிவாளன், இவர் நடித்த சவரக்கத்தி ஆகிய படங்கள் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் இவர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை ஒரு படத்தில் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, லிப்ரா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த தகவல்களை நடிகர் சாந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிரியா மக்களுக்காக ஓவியர் A.P.ஸ்ரீதர் வரைந்த கோட்டோவியத் தொடர்

சிரியா மக்களுக்காக ஓவியர் A.P.ஸ்ரீதர் வரைந்த கோட்டோவியத் தொடர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AP Shreethar Paintings About Syria (5)ஒரு தாய்நாடானது இரக்கம் மற்றும் ஏற்புத்தன்மையுடன் இருப்பதாய் விளங்க வேண்டும். குறிப்பாக, அது கலவரங்கள் ஏற்படுகிற வேளையில் ஓர் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பினைத் தரும் ஓர் இடமாக இருத்தல் வேண்டும்.

ஆனால் அந்தத் தாய்நாடே உங்களை முழுதாக விழுங்கக் காத்திருக்கும் ஒரு யுத்தக் களமாக மாறினால் என்னாகும்?. கால்கள் சோர்ந்துபோகும் வரையில் ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.

நாம் முன்னெடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், அமளியில் இருந்து தள்ளி வைக்கும் ஓரடியாக மாறுகிறது. இதுதான் சிரியாவின் இன்றைய நிலைமை, அங்கே சுதந்திரம் என்பதைத் தாண்டி உயிர்வாழ்வதற்கான போராட்டமே மேலோங்கி இருக்கிறது.

அத்தகைய சிரியாவின் தற்போதைய நிலையினை பிரதானப்படுத்தும் வகையில் ஒவியர் A.P.ஸ்ரீதர் ஒரு கோட்டோவியத் தொடரை வரைந்திருக்கிறார்.

அந்தத் தொடரானது, சிரியா மக்களுக்கான உதவிக் கரங்களுக்கு ஓர் அழைப்பை விடுத்துள்ளது.

இந்த சமூகத்தின் ஒரு பகுதி தொலைத்துவிட்ட மனிதாமானம் மற்றும் இரக்ககுணம் போன்றவற்றிற்கான கவன ஈர்ப்பை கேட்டுள்ளது. இவரது ஓவியங்கள் துயரத்தைப் பேசுவதுடன், உடைந்து கிடக்கும் தேசமொன்றினைக் குணப்படுத்தும் முயற்சியில் உதவிக்கான அவசரத் தேவையை அறிவுறுத்துகிறது.

அது மட்டுமல்லாமல் , இந்த உலகத்தில் இருத்தலுக்கான மனித இனத்தின் போராட்டத்தினைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

Artist AP Shreethars latest mixed media series to help Syria

AP Shreethar Paintings About Syria (16)

முதலில் கட்சி பெயர்-கொள்கையை அவர் சொல்லட்டும்; ரஜினியை சீண்டும் கமல்.?

முதலில் கட்சி பெயர்-கொள்கையை அவர் சொல்லட்டும்; ரஜினியை சீண்டும் கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Let Rajini announce his political party then i will say my opinion says Kamalஒரு தனியார் டிவி சார்பாக “உழவன் விருதுகள்” வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி பேசினார் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.

அந்த நிகழ்வில் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர்.

அப்போது தற்போது உள்ள தமிழக அரசும் பற்றியும் ரஜினியை பற்றியும் கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தாவது…

‘இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன்;

இந்த ஆட்சி அகற்றப்பட்டால் அது நான் செய்தது அல்ல; மக்கள் செய்தது… மக்கள் நீதி மய்யம் செய்ததாகவே இருக்கும். இதுதான் மக்கள் நீதி மய்யத்தின் குறிக்கோள்.

மக்கள் நலன் என்பதே எங்கள் கொள்கை. என்றார்.

அதன்பின்னர்… ரஜினி உங்கள் நீண்டகால நண்பர். அவரை விமர்சிப்பதில்லை என்ற நிலைபாட்டை எடுத்துள்ளீர்கள். அரசியல் களத்தில் நீங்கள் ஒரு கட்சியின் தலைவர்… அவர் ஒரு கட்சியின் தலைவர் என்று கேள்வி கேட்கும்போதே…

அவர் எந்தக் கட்சியின் தலைவர்? என கேட்டார் கமல்.

அவர் ஆன்மிக அரசியலை முன்வைத்துத் தொடங்கப்போகும் ஒரு கட்சியின் தலைவர் என்றனர்.

அதற்கு கமல் பதிலளிக்கும்போது…

அவர் வரட்டும்; கட்சி தொடங்கட்டும். அதற்குப் பெயர் வைக்கட்டும்.

நான் ‘மக்கள் நலன்’ என்று ஒரு வார்த்தையில் எங்கள் கொள்கையை சொல்லியிருக்கிறேன். இதைப்போல அவரும் அவருடைய கொள்கையைச் சொல்லட்டும்.

அதன்பிறகு இரண்டும் பொருந்துகிறதா என்று பார்ப்போம். அப்படி பொருந்தவில்லை என்றால், அப்பொழுதும் ரஜினியை விமர்சிக்க மாட்டேன்.

அவருடைய கட்சியின் கொள்கைகளை விமர்சிப்பேன். இது எங்கள் அரசியல் மாண்பு.

தனி நபரை விமர்சிக்க மாட்டோம் என்றுதான் சொல்கிறேன். அப்படி விமர்சிக்கும் கட்சிகள் இங்கே நிறைய இருக்கின்றன.

ரஜினி அவர்கள் கட்சித் தொடங்கிய பின்னர், அவருடைய கொள்கைகளை அறிந்தபின்னர் அதில் எங்களுக்கு விமர்சனம் இருந்தால் அது கடுமையானதாக இருக்கும்.

பாராட்டுக்கள் இருந்தால் அது திறந்த மனதுடன் இருக்கும்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Let Rajini announce his political party then i will say my opinion says Kamal

எல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால்

எல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film Producers Council requested to stop everything related to Cinema

டிஜிட்டல் புரொஜக்டர் சம்பந்தப்பட்ட VPF கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் ஏற்க மாட்டோம் என தயாரிப்பாளர்கள் திடீரென அறிவித்தனர்.

புதிய தமிழ் சினிமா எதுவும் ரிலீஸ் ஆக கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக விஷால் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையொட்டி கடந்த 2 வாரங்களாக எந்த புது படமும் வெளியாகவில்லை.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட உள்ளன.

மேலும் மார்ச் 16ஆம் தேதி உள்நாட்டில் நடைபெற்று வரும் எந்த படத்தின் சூட்டிங்கையும் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 23ஆம் தேதி முதல் வெளிநாட்டிலும் சூட்டிங் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

இவையில்லாமல் சினிமா சம்பந்தமான இசை வெளியீடு, டீசர் வெளியீடு போன்ற எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது.

புதிய படங்கள் சம்பந்தமாக எந்த ஒரு விளம்பரமும் பத்திரிகைகளுக்கு தரப்படாது எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் கலந்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Tamil film Producers Council requested to stop everything related to Cinema

cinema strike

More Articles
Follows