விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா; அஜித்தை பாலோ செய்கிறாரா.?

விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா; அஜித்தை பாலோ செய்கிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya gifted toyota for his TSK director Vignesh Sivanபாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் தயாரித்து நடித்திருந்தார் சூர்யா.

இப்படம் வெற்றிப் பெறவே தன் இயக்குனருக்கு ஒரு புதிய காரை அன்பளிப்பாக கொடுத்தார் சூர்யா.

இதனையடுத்து ஹரி இயக்கிய சிங்கம் 3 படம் வெளியானது. இப்படம் முதல் இரண்டு பாகங்களை போல பேசப்படவில்லை என்றாலும் அந்த இயக்குனருக்கு காரை பரிசளித்தார் சூர்யா.

இந்நிலையில் இந்தாண்டு 2018 பொங்கலுக்கு வெளியானது தானா சேர்ந்த கூட்டம்.

இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு புதிய காரை பரிசளித்துள்ளார் சூர்யா.

கிட்டதட்ட 13 வருடங்களுக்கு முன் தன்னை இயக்கி சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த டைரக்டர்களுக்கு கார் பரிசளிப்பதை வாடிக்கையாகி கொண்டிருந்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் வழியில் சூர்யாவும் செல்கிறாரோ? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.

Suriya gifted toyota for his TSK director Vignesh Sivan

pandiraj car

ஏஆர்.ரஹ்மானுக்காக விஜய்யுடன் கைகோர்க்கும் விபின் அனேஜா

ஏஆர்.ரஹ்மானுக்காக விஜய்யுடன் கைகோர்க்கும் விபின் அனேஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jazbaa singer Vipin Aneja collaborates with AR Rahman for Vijay 62துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து 3வது முறையாக விஜய்யும் ஏஆர். முருகதாஸ் அவர்களும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இப்டபத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடகர் விபின் அனேஜா இப்படத்தில் ஒர பாடலை பாடவிருக்கிறாராம்.

இதுகுறித்து விபின் கூறும்போது,..

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவது என் கனவாக இருந்தது. இந்தி பாடல்களை பாடி வந்த என்னிடம், தமிழில் பாட விருப்பமா? என கேட்டார். நான் உடனடியாக ஓகே என்று கூறிவிட்டேன்.

இவர் ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரிகளில் பாடியிருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Jazbaa singer Vipin Aneja collaborates with AR Rahman for Vijay 62

நீங்க ஸ்டிரைக் நடத்துங்க; நாங்க படத்த போடுறோம்… அபிராமி ராமநாதன்

நீங்க ஸ்டிரைக் நடத்துங்க; நாங்க படத்த போடுறோம்… அபிராமி ராமநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abhirami Ramanathanடிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டணங்களை எதிர்த்து கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யக்கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

இதனால் தியேட்டர்களில் வசூல் குறைய ஆரம்பித்தது.

இதனிடையில் நாளை மார்ச் 16ஆம் தேதி உள்நாட்டில் நடைபெறும் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களும் 8 சதவீத கேளிக்கை வரிவிதிப்பு, திரையரங்கு உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் நிறைய கிட்டதட்ட 147 மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து அபிராமி ராமநாதன் கூறியதாவது…

‘சென்னையில் உள்ள தியேட்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நாளை வழக்கம்போல் சென்னையில் உள்ள தியேட்டர்கள் இயங்கும்.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கும். 147 தியேட்டர்களில் படங்கள் ஓடும். இந்த தியேட்டர்களில் வழக்கம்போல் 4 காட்சிகள் திரையிடப்படும்’ என்று தெரிவித்தார்.

இவை அனைத்திலும் பழைய ஹிட் படங்களே திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

அவர்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்களோ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினி-கமலை அடுத்து விக்ரமுடன் இணையும் ஷங்கர்

ரஜினி-கமலை அடுத்து விக்ரமுடன் இணையும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Rajini Kamal movies Shankar likely to join with Vikram for 3rd timeரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.ஓ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து லைகா தயாரிப்பில் கமல் நடிக்க, இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் கமல் படத்தை அடுத்து விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை ஷங்கர் இயக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

அப்படம் அந்நியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் என சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே அந்நியன் மற்றும் ஐ படங்களில் ஷங்கரும் விக்ரமும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

After Rajini Kamal movies Shankar likely to join with Vikram for 3rd time

சமுத்திரக்கனியின் ஆண் தேவதை பட டிரெய்லரை வெளியிடும் 11 பிரபலங்கள்

சமுத்திரக்கனியின் ஆண் தேவதை பட டிரெய்லரை வெளியிடும் 11 பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AAN DEVATHAI TEAMதாமிரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

இவருக்கு ஜோடியாக ஜோக்கர் பட புகழ் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

பஃக்ருதீன் முஸ்தபா குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனித்து வருகிறார்.

மறைந்த பாலசந்தரின் மீது கொண்ட மதிப்பின் அடையாளமாக ‘சிகரம் சினிமாஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி இப்படத்தை ஃபக்ருதீனுடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறார் தாமிரா. மேலும், இப்படத்தை தன் குருநாதர் பாலசந்தருக்கு சமர்ப்பணம் செய்யவும் உள்ளார்.

இந்நிலையில் இன்று மார்ச் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

இந்த டிரைலரை ஒரே நேரத்தில் 10 சினிமா பிரபலங்கள் வெளியிடுகின்றனர்.

இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், பா. ரஞ்சித், வெற்றிமாறன், சீனுராமசாமி, ஏஆர். முருகதாஸ் ஆகிய இயக்குனர்களும், நடிகர்கள் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஜெயம் ரவி, உதயநிதி ஆகிய நடிகர்களும் இதனை வெளியிட உள்ளனர்.

ஒரு படத்தின் டிரைலரை இவ்வளவு பிரபலங்கள் வெளியிடுவது இதுவே முதன்முறையாகும் என கூறப்படுகிறது.

11 Celebrities releasing Aan Devathai Trailer 15th March 2018

aan devathai 11 stars

 

உளிரி-யில் கிராமத்து வாழ்வியலை சொல்ல வரும் சுரேஷ்-சயனி

உளிரி-யில் கிராமத்து வாழ்வியலை சொல்ல வரும் சுரேஷ்-சயனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Uliri movie stills (19)

ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் “உளிரி“.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த “உளிரி“ எனும் மீன் இனமே இன்று அழிக்கப்பட்டு விட்டது.

அதுமட்டுமல்லாமல் எனது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப் பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவுற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.

நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த உளிரியை.

படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் R.ஜெயகாந்தன்.

இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வெங்கட்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
கலை – சாமி கலைக்குமார்
ஸ்டன்ட் – மெட்ரோ மகேஷ்
நடனம் – மது மாலிக்
தயாரிப்பு மேற்பார்வை : A நாகராஜ்
தயாரிப்பு – எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்
எழுத்து, இயக்கம், பாடல்கள், இசை – R.ஜெயகாந்தன்

Uliri movie is about Village life style

Uliri movie stills (10)

 

More Articles
Follows