ஜெயலலிதா வீட்டருகே புதிய வீடு கட்டும் ரஜினி மருமகன் தனுஷ்

ஜெயலலிதா வீட்டருகே புதிய வீடு கட்டும் ரஜினி மருமகன் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் பிரபலமான இடங்கள் பல இருந்தாலும் போயஸ் கார்டன் பகுதிக்கு தனிச்சிறப்பு உண்டு.

இங்கு தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடுகள் உள்ளன.

தற்போது ஜெயலலிதாவின் வீடு அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷும் இந்த போயஸ் கார்டன் பகுதியில் குடியேறவுள்ளார்.

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இந்த பூஜையில் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அப்போது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Super Star at Dhanush new house Bhoomi pooja in Poes Garden

Rajinikanth images

புகழ்பெற்ற சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்.; பொதுமக்கள் அஞ்சலி!

புகழ்பெற்ற சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்.; பொதுமக்கள் அஞ்சலி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaraj sivakumar (2)சித்த மருத்துவத்தில் பிரபலமானவர்கள் சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பத்தினர்கள் தான்.

இந்த குடும்பம், கடந்த 7 தலைமுறைகளாக கிட்டத்தட்ட 200 வருடங்களாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வந்துள்ளனர்.

இன்றைய ஆண்களை அதிகளவில் பாதிக்கும், ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி மற்றும் இல்லற பிரச்சினைகளுக்கு, சித்த மருத்துவம் மூலம் இவர்கள் தீர்வு அளித்துள்ளனர்.

இவர்களில் டாக்டர் சிவராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார்.

மேலும் மக்களின் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்து வந்தவர்.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததுள்ளார் சிவராஜ் சிவகுமார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிப்ரவரி 10 நள்ளிரவு 1 மணிக்கு உயிரிழந்தார்.

அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீரான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Famous Siddha doctor Sivaraj Sivakumar passed away

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கீர்த்தி சுரேஷின் அடுத்த பாடல்..; வைரலாகும் வீடியோ

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கீர்த்தி சுரேஷின் அடுத்த பாடல்..; வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் வயதிலேயே சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் ஒரு பன்முக திறமை வாய்ந்தவர் என்பது பலருக்கு தெரியாது.

முன்னதாக ஓவியங்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன் பின்னர் தன் சக நடிகர் விஜய் பிறந்தநாளன்று வயலின் வாசித்து வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

தற்போது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவில் ‘ரங் தே’ படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த இசைக்கு ஏற்ப கீர்த்தி பாடுவது போல் உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாமி 2 படத்தில் விக்ரமுடன் கீர்த்தி பாடியிருந்த டூயட் சாங் செம ஹிட்டானது இங்கே கவனிக்கத்தக்கது.

Keerthy and DSP joins for new film

Keerthysuresh

‘வலிமை’ அப்டேட் கேட்டு அப்செட்டான அஜித் ரசிகர்களுக்கு விஜய் பட நடிகை தந்த செம தகவல்

‘வலிமை’ அப்டேட் கேட்டு அப்செட்டான அஜித் ரசிகர்களுக்கு விஜய் பட நடிகை தந்த செம தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’.

போனிகபூர் தயாரிக்க இதில் அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா என பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் அப்டேட்களை கேட்டு கேட்டு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இறுதியாக அவர்களே அப்செட் ஆகிவிட்டனர்.

இந்த நிலையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் மருத்துவராக நடித்த நடிகை சங்கீதா அப்டேட் கொடுத்துள்ளார்.

இவர் , வலிமை படத்திலும் நடித்து வருகிறாராம்.

அவரின் சமீபத்திய பேட்டியில்… ‘வலிமை’ படம் 90% முடிவடைந்து விட்டது.

அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு இல்லை.

ஆனால் வினோத் உடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்.

விரைவில் நிறைய அப்டேட் அடுத்தடுத்து வெளிவரும்.”

என தெரிவித்துள்ளார்.

Vijay film actress about Valimai update

EtR80UlU4AE_tiZ

கதை எழுதும் போது கயல் ஆனந்தி.; படம் முடியும் போது கமலி.. – இயக்குநர் ராஜசேகர்

கதை எழுதும் போது கயல் ஆனந்தி.; படம் முடியும் போது கமலி.. – இயக்குநர் ராஜசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது :

தயாரிப்பாளர் துரைசாமி பேசும்போது,

ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம்.

இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார்.

குமணன் பேசும்போது,

இப்படத்தை பெற்றோர்கள் பார்க்க வேண்டும். இப்படம் 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,

சேலம் மாவட்டம் சின்னனுர் கிராமத்தில் இருந்து வந்தவன்.

பொருளுக்காக பேசுவது, காரியத்திற்காக பேசுவது குறைந்திருப்பது கிராமப் புறங்களில் தான். நாம் அனைவரும் உலகத்திற்குள் அடங்கிய கிராமம் தான்.

நான் எப்போதும் என்னுடைய அறையில் அமர்ந்துதான் பாடல்கள் எழுதுவேன். ஆனால், இப்படத்திற்கு இயக்குநர் அறையில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

‘நீரில் மின்னல்களாய்’ என்ற வரி எனக்கு மிகவும் பிடித்த வரி. என்னைப் பொறுத்தவரை பாடல்களின் வரிகள் காட்சியிலும், கேட்பதற்கும் அர்த்தம் மிகுந்ததாக ஒரு பாதிப்பு இருக்க வேண்டும் என்றார். மற்ற கவிஞர்கள் யுகபாரதி, மதன் கார்க்கி எழுதிய படல்களும் மிகவும் பிடித்திருந்தது.

நடிகை ஸ்ரீஜா பேசும்போது,

தேனியில் பிறந்து வளர்ந்ததால் இப்படத்தில் என்னை சுலபமாக இணைத்துக் கொள்ள முடிந்தது.

இந்த தருணத்தில் ‘நக்கலைட்ஸ்’ யு-டியூப்- க்கு நன்றி கூற விரும்புகிறேன். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் வள்ளி. அந்த பாத்திரத்தை என்னுடைய தோழியை உதாரணமாக எடுத்துக் கொண்டேன்.

ரேகா சுரேஷ் பேசியது:

என்னுடைய சொந்த ஊரே சென்னை. தாத்தா பாட்டி ஊர் கிருஷ்ணகிரி. இப்படத்தை இயக்குநர் ரசித்து செதுக்கியிருக்கிறார். பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

ஆனால், இப்படத்தில் அம்மா என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தது வரும் வரை விடமாட்டார்.

நடிகை அபிதா பேசும்போது,

இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நேத்ரா. நேர்மறை மற்றும் எதிர்மறை கலந்த கலவையாக இருக்கும் என்னுடைய கதாபாத்திரம்.

படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் பேசும்போது,

இயக்குநர் என்னிடம் முழு கதையை கூறவில்லை. ஒரு வரியைத் தான் கூறினார். சில காட்சிகள் மட்டும் தான் கூறினார்.

அதுவே எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. படத்தொகுப்பு பணியின் போது எந்த அழுத்தமும் இல்லாமல் அமைதியாக செய்ய முடிந்தது.

இப்படத்தின் பள்ளி, மற்றும் கல்லூரி காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். குறிப்பாக காதல் காட்சிகள் வெகுளித்தனமாக இருக்கும்.
கல்லூரி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் அளவிற்கு இருக்கும் என்றார்.

இமான் அண்ணாச்சி பேசும்போது…

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தேன். இப்படத்தின் மூலம் அருமையான கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்து கொடுத்த இயக்குநருக்கு நன்றி.

இப்படத்தில் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்பார்க்கலாம். ‘கயல்’ ஆனந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
இப்போதைக்கு இருக்கும் சூழலில் திரையரங்கைப் பற்றி நாம் நன்கு அறிவோம்.

ஆகையால், இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.
உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் நடிப்பு வரும்வரை விடாமல் வேலை வாங்கியிருக்கிறார்கள்” என்றார்.

இசையமைப்பாளர் தீனதயாளன் பேசும்போது,

இப்படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த அபுண்டு ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குநருக்கும் நன்றி. இப்படத்தின் கதைக் கூறியதில் இருந்து இப்போது வரை விறுவிறுப்பு குறையவில்லை.

அந்த அளவிற்கு கதைக் கூறும்போதே இயக்குநர் விறுவிறுப்பை ஏற்படுத்தி விட்டார் என்றார்.

நடிகர் பிரதாப் போத்தன் பேசும்போது,

இப்படத்திற்காக இயக்குநர் ராஜசேகர் அழைக்கும்போது நோபல் காதல் கதையாக தோன்றியது. இக்கதையை மிகவும் பிடித்துதான் நடிக்க வந்தேன் என்றார்.

இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது….

“நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரம்.
என்னுடைய வாழ்க்கையில் அனைத்துப் பக்கங்களிலும் தூணாக இருந்தவர்கள் என்னுடைய அண்ணன் மற்றும் அண்ணி தான்.

நான் தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம் தான் கமலி கதாபாத்திரம். அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அந்த இடம் தான் இப்படத்தின் கருவாக தோன்றியது.

நாயகி படமாக எடுத்தால் தான் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இப்படத்தில் கமலி காதல் செய்யும் போது எப்படி இருப்பாள்? மகளாக எப்படி இருப்பாள்? என்று ஒவ்வொரு கட்சியை நான் எப்படி எதிர்பார்க்கிறேனோ அப்படியே நடித்துக் கொடுத்தார்.

அபுண்டு ஸ்டூடியோஸ்-ன் துரைசாமி என்னுடைய கதையைக் கேட்டதும் என் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார்கள்.

இந்த கதை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும்தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை.

நீங்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் வருகிறோம். கதை கேளுங்கள் பிடித்தால் பணியாற்றுங்கள் என்று கூறினோம். உடனே, வாரங்கல் சென்று கதை கூறினோம்.

கதை கேட்ட அடுத்த நிமிடம் இப்படத்தை எப்போது எடுக்கலாம். நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முறையிலேயே நடித்துக் கொடுத்தார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கமலியாகவே வாழ்ந்தார். அவருக்கு மிக்க நன்றி.

பிரதாப் போத்தனிடம் கதை கூறியதும் மிகவும் ஆர்வமாக பணியாற்றினார். பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன்.

இப்படத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள்.
இசையமைப்பாளர் தனக்கென்று இசையமைக்காமல், படத்திற்கு என்ன தேவையோ அதை செய்தார் என்றார்.

நன்றி கூரிய நிர்வாக தயாரிப்பாளர் ஜெய் சம்பத்:

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

‘கயல்’ ஆனந்தி பேசும்போது,

என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்.

அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது.

ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.
இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும் என்றார்.

Director Raja Sekar talks about Anandhi role in her next film

ஆங்கில படத்திற்காக 50 நாட்கள்..; அமெரிக்கா பறக்கும் ஹாலிவுட் நடிகர் தனுஷ்

ஆங்கில படத்திற்காக 50 நாட்கள்..; அமெரிக்கா பறக்கும் ஹாலிவுட் நடிகர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ என்ற ஆங்கில படத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடித்திருந்தார் தனுஷ்.

கென் ஸ்காட் இயக்கிய இந்த படத்தில் தனுசுடன் பெர்னிக் பிஜோ, பர்கத் அப்டி, எரின் மொராரிட்டி உள்பட பலர் நடித்து இருந்தனர்.

அதே படம் அதன் பின்னர் ‘பக்கிரி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது.

இதனையடுத்து ஹாலிவுட்டில் அவரின் 2வது படமாக ‘தி க்ரே மேன்’ உருவாகவுள்ளது.

ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ராயன் காஸ்லிங் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், இப்பட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் பங்கேற்க தனுஷ் நாளை (பிப்ரவரி 10) அமெரிக்கா செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘தி க்ரே மேன்’ பட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ‘தனுஷ் 43’ படக்குழுவினரோடு மே மாதத்தில் இணைவார் தனுஷ் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் திரும்பி இந்தியா வருவதற்குள் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ & கர்ணன் படங்கள் ரிலீசானாலும் ஆச்சரியமில்லை.

Exclusive updates on Dhanush’s Hollywood movie

More Articles
Follows