தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி.
இவர் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
இவர் தற்போது ‘தங்கம்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் கலந்து கொண்டார்.
அப்போது சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் அபர்ணாவுக்கு பூங்கொடுத்து கொடுத்தார்.
அதனை பெற்றுக் கொள்ளும் போது திடீரென அந்த மாணவர் அபர்ணாவின் தோல் மீது கை வைத்தார்.. இதனால் தட்டி விட்டு விலகிச் சென்றார் அபர்ணா.
இதனையடுத்து அங்கு சலசலப்பு உண்டானது.
இதனால் மேடை ஏறி அந்த மாணவன் தான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும், அபர்ணாவின் தீவிர ரசிகன் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்தாகவும் விளக்கமளித்தார்.
ஆனாலும் மீண்டும் அபர்ணாவிடம் கை கொடுக்க வந்தார். ஆனால் நடிகையோ, கையைக் கொடுக்காமல் வேண்டாம் என சிரித்துக் கொண்டே பின்வாங்கினார்.
இதனால் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பதிவு செய்து நடிகை மஞ்சிமா மோகன் ‘Unbelievable and disgusting’ என கோபத்துடன் கூறியுள்ளார்.
Student misbehaves with Aparna Balamurali; Manjima Mohan reacts