சிம்பு படம் ஓடிடியில் ரிலீஸ்..; மஹா அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிம்பு படம் ஓடிடியில் ரிலீஸ்..; மஹா அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu mahaaவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் படம் ரிலீசாகவுள்ளது.

ஆனால் சிம்புவின் மற்றொரு படமான ’மஹா’ படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன.

ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’வின் இயக்குனர் ஜமீல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

இப்படத்தின் எடிட்டிங் பணிகள் தனக்கு தெரியாமலேயே முடிந்துவிட்டதும் என்றும், தனக்கு சம்பள பாக்கி இருப்பதால் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனால் பட ரிலீசுக்கு கோர்ட் தடை விதித்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி ’மஹா’ படத்தை திரையிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் இயக்குனருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து ’மஹா’ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

STR – Hansika’s Mahaa to release in OTT

புதுச்சேரி சபாநாயகராக பாஜக செல்வம் பதவியேற்றார்.; திமுகவில் இருந்தால் அப்படியேதான் இருந்துருக்கனும் என நாஜிமுக்கு பதிலடி கொடுத்தார்.!

புதுச்சேரி சபாநாயகராக பாஜக செல்வம் பதவியேற்றார்.; திமுகவில் இருந்தால் அப்படியேதான் இருந்துருக்கனும் என நாஜிமுக்கு பதிலடி கொடுத்தார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP Selvam2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

இவர்களின் உட்கட்சி பிரச்சினையால் அமைச்சரவை இன்னும் அமையவில்லை.

தற்போது தான் பதவி பேரம் நாற்காலி பஞ்சாயத்து எல்லாம் முடிந்துள்ளது.

வெற்றி பெற்று 2 மாதங்களை நெருங்கும் வேளையில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ. செல்வம் சபாநாயகர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

எதிர்கட்சிகளின் சார்பில் வேட்புமனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சபாநாயகராக செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சபாநாயகர் தேர்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க சட்டசபை இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கூடியது.

தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் செல்வத்தை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகரை வாழ்த்தி பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது திமுக காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம் பேசும்போது…

“சபாநாயகர் செல்வம் திமுகவின் தொகுதி செயலாளராக இருந்ததை தற்காலிக சபாநாயகர் சொல்ல மறந்து விட்டார் என குறிப்பிட்டு பேசினார்.

அப்போது பேசிய செல்வம்..”திமுக-வில் இருந்தால் அப்படியே தான் இருந்து இருப்பேன். 36 ஆண்டுகளாய் திமுகவில் தொகுதி செயலாளராக மட்டுமே இருந்தேன்.

ஆனால் பாஜகவிற்கு வந்த பிறகு இந்த பெரிய பதவி கொடுத்து இந்த இயக்கம் பாஜக” எனக் கூறினார்.

BJP’s R Selvam elected Speaker of Puducherry Assembly

கௌதம் ஷிவத்மிகா வெண்பா இணையும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’..; நெகிழ்ந்து பாராட்டும் ஒளிப்பதிவாளர்

கௌதம் ஷிவத்மிகா வெண்பா இணையும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’..; நெகிழ்ந்து பாராட்டும் ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bala Baraniநடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.

40 க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திர கூட்டத்துடன், குடும்ப சித்திரமாக உருவாகி வரும் இப்படத்தை ‘மிக மிக அவசரம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படங்களின் ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

குடும்ப படங்களை தனித்துவமான ஒளியமைப்புடன், வடிவமைப்பதில் புகழ்பெற்ற அவர் இப்படம் அனைவர் நெஞ்சங்களையும் ஈர்க்கும் படைப்பாக இருக்குமன்று பாராட்டியுள்ளார்.

படம் குறித்து ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி கூறியதாவது…

மிக மிக சந்தோஷமான தருணம் என்னெவெனில் நான் வளர்ந்த இடத்தில் நான் புழங்கிய தெருக்களில் படப்பிடிப்பு நடத்துவதுதான்.

திண்டுக்கல் எனது சொந்த ஊர் இப்போது “ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு முழுதும் அங்கே தான் திட்டமிட்டு நடத்திவருகிறோம்.

நான் வளர்ந்த இடத்தில் எனக்கு தெரிந்த வாழ்க்கையை படமாக்குவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இதற்கு முன் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கு நடத்தினோம்.

ஆனால் இப்போது முழுப்படமும் இங்கே படப்பிடிப்பு நடத்துகிறோம்.

இயக்குநர் நந்தா பெரியசாமி பல வருடங்களாக எனது நெருங்கிய நண்பர். இந்தக்கதை குறித்து பல முறை என்னிடம் விவாதித்துள்ளார். மிக அழகான குடும்பக்கதை.

படமாக்கும்போதே கண்களில் கண்ணீர் தேங்கும், பல ஆழமான, நெகிழ்வான தருணங்கள் படத்தில் இருந்தது. கண்டிப்பாக குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் வெற்றிப்படமாக இப்படம் இருக்கும்.

40 க்கும் மேற்பட்ட நட்டத்திர நடிகர்களுடன் 50 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை முடிக்க, படக்குழுவுடன் இணைந்து திட்ட்டமிட்டோம்.

இந்த கடினமான சூழலில் படப்பிடிப்பு மிக சவாலானாதா இருந்தது. இதற்கு முன் பெரும் நட்சத்திர கூட்டத்துடன் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் படங்கள் செய்த அனுபவம் உதவியாக இருந்தது.

மேலும் நான் ஒளிப்பதிவாளர் MS பிரபு அவர்களிடம் உதவியாளராக மகாநதி முதல் ரமணா வரை பெரிய படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தது மிக சிறந்த அனுபவ பாடங்களை கற்றுதந்திருந்தது.

இப்படத்தை தயாரிப்பாளரை மகிழ்விக்கும் வகையில், திட்டமிட்ட பொருட்செலவில், இயக்குநரின் விருப்பப்படி மிக அழகாக படமாக்கியிருக்கிறேன்.

இது வரையிலும் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் பணியாற்றியுள்ளேன். “ஆனந்தம் விளையாடும் வீடு” அதில் தனித்துவமான படமாக இருக்கும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, பொர்ரா பால பரணி ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது.

Cinematographer Bala Barani about his current work in Anandham Vilayadum Veedu

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..: சிவசங்கர் பாபாவை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..: சிவசங்கர் பாபாவை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Siva Shankar Babaகடவுள் இருக்கிறாரா? இல்லையா? என பல விவாதங்கள் ஆங்காங்கே நடைப்பெற்று வந்தாலும் இந்த உலகத்தில் தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

அப்படி தன்னை அறிவித்துக் கொண்டவர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.

இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரமாக காட்டிக் கொள்வார். மேலும் தனது பக்தர்களிடையே ஆனந்த நடனம் ஆடுவார்.

மற்ற சாமியார்கள் எல்லாம் துறவிகள் போல தன்னை காட்டிக் கொண்டாலும் இவர் கூலிங் கிளாஸ், பேன்ட் சர்ட், சொகுசு கார், கண்ணாடி மாளிகை வீடு என பந்தாவாக வலம் வருபவர் இவர்.

செங்கல்பட்டு அருகே கேளம்பாக்கம் பகுதியில் 18 ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் நிறுவனர் தான் இந்த சிவசங்கர் பாபா.

இவரின் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவிகள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் கூறிய புகார்கள் சமூகவலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்தது.

எனவே சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார்.

மேலும் குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தியது.

இதற்கு பள்ளி நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு மருத்துவமனையில் நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது தரப்பில் கூறப்பட்டது.

சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவர் மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையில் வெளிமாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

பாபாவுக்கு சொந்தமாக உத்தரகாண்ட், டெல்லி ஆகிய பகுதிகளிலும் ஆசிரமங்கள் இருக்கின்றன. எனவே, அங்கு தப்பிச் சென்றாரா? என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், டெல்லி மாநில காவல்துறை உதவியுடன் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.

எனவே இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை அழைத்து வரப்படுவார் என சொல்லப்படுகின்றன.

Siva Sankar baba arrested for sexual abuse case

அஜித்தால் டார்ச்சர்.. தற்கொலை செய்ய போறேன்..; பிரதமர்-முதல்வருக்கு மீரா மிதுன் ட்வீட்

அஜித்தால் டார்ச்சர்.. தற்கொலை செய்ய போறேன்..; பிரதமர்-முதல்வருக்கு மீரா மிதுன் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithun (2)மாடலிங் செய்துக் கொண்டே நடிகையானவர் மீரா மிதுன்.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார்.

கமல் நடத்திய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டவர் இவர்.

விஜய் – சங்கீதா, சூர்யா – ஜோதிகாவை பற்றி அசிங்கமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி பாரதிராஜாவை ஆவேசப்பட வைத்தவர்.

இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

மாடலிங் செய்த போது தான் பணிபுரிந்த அஜித் ரவியின் நிறுவனம் தற்போது தன்னை துன்புறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தன் ட்விட்டரில் மீரா மிதுன்…

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன். அங்கே இருந்த போது, அழகிப் பட்டம் வென்றேன்.

அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகினேன்.

தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்சனைகள் கொடுத்து வருகிறார்.

என் படங்கள் & ப்ராஜெக்டுகள் ரிலீஸாவதை தடுக்கிறார், என் குடும்பத்திலும் பிரச்சனை செய்கிறார்.

இவை அனைத்துக்கும் ஆதாரங்கள் கொடுத்தும் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.

மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்கு வாழ வழியில்லை. தற்கொலை தான் ஒரே வழி.

என் தற்கொலைக்கு அஜித் ரவி மட்டும் தான் காரணம். இது தற்கொலை அல்ல கொலை.

சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். ” என மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.

தான் தற்கொலை செய்யப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்த கடிதம் எழுதியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Meera mithun writes suicide letter to CM and PM

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இணையும் சீனு ராமசாமி – விஜய்சேதுபதி

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இணையும் சீனு ராமசாமி – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and seenu ramasamy‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்மில் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி.

அந்த படம் ரிலீசுக்கு முன்னரே விஜய்சேதுபதியை புகழ்ந்து பேசியிருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அப்போதே ரசிகர்கள் விஜய்சேதுபதி என்பவர் யார்? என கேட்டார்கள்.

சின்ன சின்ன வேடங்களில் நடித்த போதே தன் மீது நம்பிக்கை வைத்தவர்கள் சீனு ராமசாமி & கார்த்திக் சுப்புராஜ் என்பதனால் அவர்கள் அழைத்தால் கதை கூட கேட்காமல் நடிப்பார் விஜய்சேதுபதி.

அதன் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். இந்த பட தயாரிப்பாளர் லிங்குசாமியின் கடன் பிரச்சனையால் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

எனவே சீனு ராமசாமியின் ‘தர்மதுரை’ படத்துக்கு கால்ஷீட் தந்தார் விஜய்சேதுபதி.

இப்பட வெற்றியைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சேதுபதி.

இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்குவதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை அசுரன் படத்தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

இந்த படம் படம் முற்றிலும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi and Seenu Ramasamy joins for thriller movie

More Articles
Follows