டாப் ஹீரோஸ் வரிசையில் சிவா; அவருக்கே இது அதிர்ச்சிதான்.!

டாப் ஹீரோஸ் வரிசையில் சிவா; அவருக்கே இது அதிர்ச்சிதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivas Tamilpadam2 movie has special show at 5am on its release dateஒரு புதுப்படம் ரிலீஸ் என்றால் தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்படும்.

அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகாலை என்பதை விட நள்ளிரவு என்பதே சரியாக இருக்கும். 4 மணிக்கு எல்லாம் முதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் இந்த வரிசையில் அடங்கும்.

இந்நிலையில் முதன்முறையாக மிர்ச்சி சிவா நடித்துள்ள தமிழ்ப்படம் 2 படத்தின் முதல் காட்சி சென்னையில் காலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னை ரோகினி தியேட்டரில் இந்த காட்சி திரையிடப்பட உள்ளது.

சென்னையிலுள்ள ஜிகே. சினிமாஸ் தியேட்டரிலும் 5 மணி காட்சி திரையிடப்பட உள்ளது.

நிச்சயம் இந்த தகவல்கள் நடிகர் சிவாவுக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே கலாய்த்து உருவாகியுள்ள இப்படம் நாளை ஜீலை 12ஆம் தேதி வெளியாகிறது.

Sivas Tamilpadam2 movie has special show at 5am on its release date

ரஜினி-விஜய்க்கு ஆதரவு.? அன்புமணியுடன் விவாதிக்க சிம்பு சவால்!

ரஜினி-விஜய்க்கு ஆதரவு.? அன்புமணியுடன் விவாதிக்க சிம்பு சவால்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu challenge to PMK Anbumani Ramadoss to support Rajini and Vijayவெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார் சிம்பு.

இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

மாநாட்டில் நடிப்பது பற்றி சிம்பு வீடியோ ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது…

வெங்கட்பிரபு உடன் படம் பண்ண வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, அது நிறைவேறியிருக்கிறது. படத்தின் தலைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வருவதற்காக இந்தப்படம் என்று சொல்வது உண்மையல்ல.

படத்தில் ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்று நினைக்கும்போது அதை பேசியே ஆக வேண்டும், அதற்காக பயந்து போக கூடாது.

பொதுவாக சினிமாவிற்கு நிறைய பிரச்னைகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாபா தொடங்கி இப்போது சர்கார் வரை தொடருகின்றன.

சர்கார் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் ஏன் வருகிறது என அன்புமணி ராமதாஸ் கேட்டிருந்தார். இதைப்பற்றி நான் இப்போது எது பேசினாலும் தவறாகிவிடும்.

ஆகவே, விவாத மேடையில் அன்புமணி இதுகுறித்து விவாதிக்க முன்வந்தால் நான் விவாதிக்க தயாராக உள்ளேன். எங்கு, எப்போது என்று அவரே சொல்லட்டும்.

ஒரு நடிகனாக பதில் அளிக்க தயாராக உள்ளேன்.

Simbu challenge to PMK Anbumani Ramadoss to support Rajini and Vijay

மாநாடு படத்தில் சிம்பு ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு மெசேஜ்

மாநாடு படத்தில் சிம்பு ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு மெசேஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabu convey message to Simbu fans in Maanaadu posterஇன்று சிம்புவின் புதிய படமான மாநாடு பட டைட்டில் லுக் வெளியானது.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இப்படத்தை அடுத்த 2019ஆம் ஆண்டு வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில் கீழே உள்ள வாசகம் இடம் பெற்றுள்ளது.

தனியாக நின்றாலும், நியாயத்தின் பக்கம் துணையாக நிற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Venkat Prabu convey message to Simbu fans in Maanaadu poster

இது ரசிகர்களுக்கான மெசேஜ் / அட்வைஸ் ஆக இருக்குமா?

maanadu str vp sk

புது ரூட்டில் பயணத்தைத் தொடங்கும் அஜித்-சிம்பு-தனுஷ்

புது ரூட்டில் பயணத்தைத் தொடங்கும் அஜித்-சிம்பு-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Simbu and Dhanush starting their movie shoot in different styleஒரு படத்தின் சூட்டிங் தொடங்கி அது பாதியை கடந்து செல்லும் போதுதான் அப்படத்தின் தலைப்பையே அறிவிக்கிறார்கள் தமிழ் திரையுலகினர்.

இதையே ஒரு டிரெண்டாக வைத்து கொண்டாடியும் வருகின்றனர்.

விஜய்யின் சர்கார், சூர்யாவின் என்ஜிகே, சிவகார்த்திகேயனின் சீமராஜா உள்ளிட்ட பல படங்கள் இந்த வரிசையில் தான் வந்தன.

ஆனால் இதில் இருந்து மாறுபட்டு ரஜினி தன் காலா படத்தலைப்பை அறிவித்தே பின்பே தன் பட சூட்டிங்கை தொடங்கினார்.

ஆனால் தற்போது கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பை அவர் அறிவிக்கவில்லை என்பது வேறுக்கதை. இதன் சூட்டிங் நடந்து வருகிறது.

அதுபோல் சபாஷ் நாயுடு படத்தலைப்பை அறிவித்துவிட்டே தன் பட சூட்டிங்கை தொடங்கினார் கமல்ஹாசன்.

இந்நிலையில் அஜித் தன் விஸ்வாசம் படத்தலைப்பை அறிவித்து விட்டுதான் சூட்டிங்கை தொடங்கினார்.

அதுபோல் சிம்பு தன் மாநாடு படத்தை இன்று அறிவித்துவிட்டார். விரைவில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

அதுபோல் தனுஷ் அவர்களும் தன் மாரி 2, வடசென்னை படத்தலைப்புகளை அறிவித்துவிட்டே தன் பட சூட்டிங்கை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித். சிம்பு, தனுஷ் ஆகியோர் புது ரூட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Ajith Simbu and Dhanush starting their movie shoot in different style

கண்ணா 1 பத்தாது; 2 வேணும்.. காவலர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

கண்ணா 1 பத்தாது; 2 வேணும்.. காவலர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini request his fans to add 2 crore members in Rajini Makkal Mandramகடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.

தற்போது 6 மாதங்கள் ஆகிவிட்டாலும் அவர் இதுவரை கட்சி தொடங்கவில்லை.

ஆனால் அரசியல் கட்சிக்கு தேவையான அனைத்து வேலைகளையும் அவர் தீவிரமாக பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சிக்கு வலுவான கட்டமைப்பு வேண்டும் என்பதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்.

கடந்த ஜனவரி முதல் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனால் ரஜினி தரப்பு மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாம்.

மேலும் உறுப்பினர் சேர்க்கைகளை அதிகரித்து இரண்டு கோடியாக உயர்த்திட மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி வேண்டுகோள் வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தலைவரின் கட்டளையை காவலர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் தானே

Rajini request his fans to add 2 crore members in Rajini Makkal Mandram

இன்று 2 அதிரடி; அப்பா டிஆருக்கு காதல்; மகன் எஸ்டிஆருக்கு அரசியல்

இன்று 2 அதிரடி; அப்பா டிஆருக்கு காதல்; மகன் எஸ்டிஆருக்கு அரசியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Today 10th July T Rajendar and STR announced 2 movie titlesஇன்று ஜீலை 10ஆம் தேதி நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தன் புதிய படத்தை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நமீதான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு இன்றையக் காதல் டா என தலைப்பிட்டுள்ளார்.

வழக்கம் போல அவரே அந்த படத்தின் அனைத்தை வேலைகளையும் செய்கிறார்.

இப்படம் முழுக்க காதல் திரைப்படமாக உருவாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதே நாளில் அவரின் மகன் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு என்ற படத்தின் டைட்டில் லுக் வெளியானது.

இப்படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார்.

அப்பாவுக்கு இந்த வயதிலும் காதல் படம். மகனுக்கு இந்த வயதிலேயே அரசியல் படம்.. அசத்துங்க… மக்களே…

Today 10th July T Rajendar and STR announced 2 movie titles

More Articles
Follows