தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதில் ஒரு காட்சியில் பாகுபலி பட நாயகன் போல தமிழ் மன்னராக வேடம் ஏற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.
இது அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் நடிகர் அருண்விஜய், இரவு நேரத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ” யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்ற வாசகங்களை பதிவிட்டு இருந்தார்.
இது சிவகார்த்திகேயனின் சீமராஜா வை குறிப்பிடும் வகையில் உள்ளதாக பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
நீங்கள் 20 வருடமாக சினிமாவில் இருக்கிறீர்கள். ஆனால் முன்னணி நடிகராக வரவில்லை. அதான் பொறாமை என ரசிகர்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜய்க்கு எதிராக பதிவிட்டனர்.
யாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன்
ஒரு 6 மணி நேரத்திற்கு பிறகு இன்னொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டார் அருண்விஜய்.
அதில் எனது டுவிட்டர் அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டது என பதிவிட்டார்.
இதன் பின்னர் தனது அடுத்த பதிவில்…
இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் சில நேரம் ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முன்னதாக சீமராஜா விழாவில், நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. பொறாமையும் இல்லை. யாரை பார்த்தும் பயப்படுவதும் இல்லை. என சிவகார்த்திகேயன் பரபரப்பாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan fans reaction to Arun Vijays controversial tweet