மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..: சிவசங்கர் பாபாவை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..: சிவசங்கர் பாபாவை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Siva Shankar Babaகடவுள் இருக்கிறாரா? இல்லையா? என பல விவாதங்கள் ஆங்காங்கே நடைப்பெற்று வந்தாலும் இந்த உலகத்தில் தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

அப்படி தன்னை அறிவித்துக் கொண்டவர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.

இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரமாக காட்டிக் கொள்வார். மேலும் தனது பக்தர்களிடையே ஆனந்த நடனம் ஆடுவார்.

மற்ற சாமியார்கள் எல்லாம் துறவிகள் போல தன்னை காட்டிக் கொண்டாலும் இவர் கூலிங் கிளாஸ், பேன்ட் சர்ட், சொகுசு கார், கண்ணாடி மாளிகை வீடு என பந்தாவாக வலம் வருபவர் இவர்.

செங்கல்பட்டு அருகே கேளம்பாக்கம் பகுதியில் 18 ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் நிறுவனர் தான் இந்த சிவசங்கர் பாபா.

இவரின் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவிகள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் கூறிய புகார்கள் சமூகவலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்தது.

எனவே சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார்.

மேலும் குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தியது.

இதற்கு பள்ளி நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு மருத்துவமனையில் நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது தரப்பில் கூறப்பட்டது.

சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவர் மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையில் வெளிமாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

பாபாவுக்கு சொந்தமாக உத்தரகாண்ட், டெல்லி ஆகிய பகுதிகளிலும் ஆசிரமங்கள் இருக்கின்றன. எனவே, அங்கு தப்பிச் சென்றாரா? என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், டெல்லி மாநில காவல்துறை உதவியுடன் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.

எனவே இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை அழைத்து வரப்படுவார் என சொல்லப்படுகின்றன.

Siva Sankar baba arrested for sexual abuse case

அஜித்தால் டார்ச்சர்.. தற்கொலை செய்ய போறேன்..; பிரதமர்-முதல்வருக்கு மீரா மிதுன் ட்வீட்

அஜித்தால் டார்ச்சர்.. தற்கொலை செய்ய போறேன்..; பிரதமர்-முதல்வருக்கு மீரா மிதுன் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithun (2)மாடலிங் செய்துக் கொண்டே நடிகையானவர் மீரா மிதுன்.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார்.

கமல் நடத்திய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டவர் இவர்.

விஜய் – சங்கீதா, சூர்யா – ஜோதிகாவை பற்றி அசிங்கமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி பாரதிராஜாவை ஆவேசப்பட வைத்தவர்.

இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

மாடலிங் செய்த போது தான் பணிபுரிந்த அஜித் ரவியின் நிறுவனம் தற்போது தன்னை துன்புறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தன் ட்விட்டரில் மீரா மிதுன்…

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன். அங்கே இருந்த போது, அழகிப் பட்டம் வென்றேன்.

அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகினேன்.

தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்சனைகள் கொடுத்து வருகிறார்.

என் படங்கள் & ப்ராஜெக்டுகள் ரிலீஸாவதை தடுக்கிறார், என் குடும்பத்திலும் பிரச்சனை செய்கிறார்.

இவை அனைத்துக்கும் ஆதாரங்கள் கொடுத்தும் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.

மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்கு வாழ வழியில்லை. தற்கொலை தான் ஒரே வழி.

என் தற்கொலைக்கு அஜித் ரவி மட்டும் தான் காரணம். இது தற்கொலை அல்ல கொலை.

சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். ” என மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.

தான் தற்கொலை செய்யப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்த கடிதம் எழுதியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Meera mithun writes suicide letter to CM and PM

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இணையும் சீனு ராமசாமி – விஜய்சேதுபதி

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இணையும் சீனு ராமசாமி – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and seenu ramasamy‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்மில் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி.

அந்த படம் ரிலீசுக்கு முன்னரே விஜய்சேதுபதியை புகழ்ந்து பேசியிருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அப்போதே ரசிகர்கள் விஜய்சேதுபதி என்பவர் யார்? என கேட்டார்கள்.

சின்ன சின்ன வேடங்களில் நடித்த போதே தன் மீது நம்பிக்கை வைத்தவர்கள் சீனு ராமசாமி & கார்த்திக் சுப்புராஜ் என்பதனால் அவர்கள் அழைத்தால் கதை கூட கேட்காமல் நடிப்பார் விஜய்சேதுபதி.

அதன் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். இந்த பட தயாரிப்பாளர் லிங்குசாமியின் கடன் பிரச்சனையால் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

எனவே சீனு ராமசாமியின் ‘தர்மதுரை’ படத்துக்கு கால்ஷீட் தந்தார் விஜய்சேதுபதி.

இப்பட வெற்றியைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சேதுபதி.

இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்குவதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை அசுரன் படத்தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

இந்த படம் படம் முற்றிலும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi and Seenu Ramasamy joins for thriller movie

வந்துட்டார்ய்யா.. வந்துட்டார்ய்யா.. வடிவேலு மீண்டும் வந்துட்டார்ய்யா..

வந்துட்டார்ய்யா.. வந்துட்டார்ய்யா.. வடிவேலு மீண்டும் வந்துட்டார்ய்யா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadiveluதமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் சென்றாலும் வடிவேலு இடம் தனி இடம் தான்.

அவர் சினிமாவில் நடிக்காத காலம் தமிழ் ரசிகர்களுக்கு கஷ்டகாலம் தான்.

சினிமாவில் அவர் உச்சத்தில் இருந்த போதே 2011ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது தேமுதிக & அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்தார்.

திமுக-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றதால் வடிவேலுக்கு திரைப்பட வாய்ப்புகளை வழங்க எவரும் தயாராகவில்லை.

சில ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்க “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படத்தின் 2வது பாகம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாகவுள்ளதாக அறிவித்தனர்.

இந்த படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்ய வடிவேலு கோரியதால் படக்குழுவுக்குள் பிரச்சினை உருவானது துவங்கியது.

இதனால் படப்பிடிப்பில் பங்கேற்காமல் நாட்களை வடிவேலு வீணடிக்க தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

எனவே வடிவேலு இனி திரைப்படங்களில் நடிக்காத வண்ணம் ரெட் கார்டு வழங்கப்பட்டது.

இந்த பிரச்சினையே 3 வருடங்களாக பேசப்பட்டாலும் ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் களமிறங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இதன் காரணமாக ஷங்கர் வடிவேலு இடையே உடன்பாடு ஏற்படும் எனவும் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

வந்துட்டார்ய்யா.. வந்துட்டார்ய்யா.. வடிவேலு மீண்டும் வந்துட்டார்ய்யா.. என ரசிகர்கள் நிச்சயம் சொல்வார்கள்.

Vagai Puyal Vadivelu re entry in kollywood ?

தமிழ்நாட்டுல அனுமதியில்ல.. ஹைதராபாத் பறந்தார் விஷால்

தமிழ்நாட்டுல அனுமதியில்ல.. ஹைதராபாத் பறந்தார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal actorகொரோனா ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்த போதும் சினிமா படப்பிடிப்பு மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு இதுவரை அனுமதியில்லை.

அடுத்த மாத ஜூலை மாத இறுதியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது தெலங்கானா மாநிலத்தில் சினிமா சூட்டிங்குக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் & படக்குழுவினர் தங்கள் பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்கின்றனர்.

இந்த நிலையில் விஷால் நடிப்பில் து.பா.ஆ சரவணன் இயக்கத்தில் உருவாகும் பட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

இது விஷாலின் 31வது படமாகும்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்க யுவன் இசையமைப்பை கவனிக்க பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vishal 31 shoot resumes in hyderabad

லெஜண்ட் சரவணன் பட நடிகை ஊர்வசி ரெளடாலாவின் சேறு குளியல்

லெஜண்ட் சரவணன் பட நடிகை ஊர்வசி ரெளடாலாவின் சேறு குளியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சரவணா ஸ்டோர்ஸ்’ நிறுவனர் பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படம்.

இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்.

மறைந்த நடிகர் விவேக் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கரும் நடித்திருக்கிறார்.

ரூ 210 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக கீத்திகா திவாரி மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊர்வசி ரெளடாலா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.. சேறு பூசிக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

சேறுக்குளியல் என்பது தனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கிளியோபாட்ரோ இதே சேறுக்குளியலை மிகவும் விரும்புவார். சருமத்திற்கு இந்த குளியல் மிகவும் நல்லது.

என ஊர்வசி ரெளடாலா தெரிவித்துள்ளார்.

Legend Saravanan’s heroine latest pic goes viral

1623764604311

More Articles
Follows