தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த மாதம் செப்டம்பர் மாத முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.
நேற்று செப். 24ல் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து சென்றார்.
நாலு தலைமுறை குரலாக ஒலித்தவர்.. ஏழு தலைமுறை புகழ் பாடும்…; SPB மறைவுக்கு கமல் இரங்கல்
அப்போது அவர் கூறும்போது… எஸ்பிபி நலமாக இல்லை. கவலைக்கிடமாக உள்ளார்.
அவர்களது உறவினர்கள் அவர்கள் நம்பும் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் என சொன்னார்.
இந்த நிலையில் எஸ். பி. பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் சரியாக 1.04PM மணிக்கு இறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
உலகை மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்…; SPB மறைவுக்கு STR இரங்கல்
ஆனால் இன்னும் மருத்துவனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகவில்லை.
இதனையடுத்து எஸ்..பி.பி. சரண் அவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
Singer Actor SP Balasubramanyam passed away