அரசியலில் குதிக்கிறாரா பாலிவுட் கிங் ஷாரூக்கான்?

அரசியலில் குதிக்கிறாரா பாலிவுட் கிங் ஷாரூக்கான்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raees Shahrukh khanபாலிவுட் கிங் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் ஷாரூக்கான்.

இவர் நடிப்பில் உருவான ரயிஸ் (RAEES) என்ற படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

இதன் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ஷாரூக்கான் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது…

“ரயிஸ் படத்தில் அரசியல் காட்சிகள் இருந்தன.

அவை வெறும் காட்சிகள் மட்டுமே. எனக்கு அரசியல் ஆசை இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன்” என பேசினார்.

Shahrukh khan reaction to Raees Movie and Politics entry

மோகன்லால்-மம்மூட்டி சாதனைகளை நெருங்கும் சூர்யா

மோகன்லால்-மம்மூட்டி சாதனைகளை நெருங்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mammootty-mohanlal-movies-10அண்மைகாலமாக தமிழ் சினிமாவில் வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவருகிறது.

நிறைய படங்கள் வெளியானாலும் அதில் ஒரு சில படங்களில் மட்டுமே முதல் பாகத்தின் தொடர்ச்சி இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது.

அதில் மிகமுக்கியமான படம் சிங்கம் 3.

இதுபோல் மலையாள சினிமாவிலும் சில படங்கள் வெளியாகியுள்ளதாம்.

மோகன்லால் நடித்த நாடோடிகள் படம் 3 பாகங்கள் வெளியாகியுள்ளதாம்.

அதுபோல் மம்மூட்டி நடிப்பில் உருவான ஒரு சிபிஐயின் டைரி குறிப்பு என்ற படமும் நான்கு பாகங்களாக உருவாகியுள்ளதாம்.

தற்போது சூர்யாவின் சிங்கம் படமும் அதே வரிசையில் பயணிப்பதால் மோகன்லால் மற்றும் மம்மூட்டியின் சாதனைகளை நெருங்கியுள்ளார்.

இவரின் சி3 படமும் வெற்றிப் பெற்று இதன் நான்காம் பாகம், ஐந்தாம் பாகம் வெளியானால் சூர்யா இந்திய அளவில் சாதனை படைப்பார் என் கூறப்படுகிறது.

Suriya nearing Mohanlal and Mammootty sequel movies record

விஜய்-அஜித்-சூர்யா பற்றி ஒரே வார்த்தையில் சொன்ன க்ரிஷ்

விஜய்-அஜித்-சூர்யா பற்றி ஒரே வார்த்தையில் சொன்ன க்ரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer krishபிரபல பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் வெளிவரவிருக்கும் சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார்.

அப்போது வழக்கம்போல், விஜய், அஜித், சூர்யா பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என ரசிகர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியதாவது…

  • அஜித் என்றால் அன்பு
  • விஜய் என்றால் மாணிக்கம்
  • சூர்யா என்றால் டார்லிங்

என்று ஒரே சொல்லில் பதிலளித்தார்.

Singer Krish about Vijay Ajith Suriya

நிவின்பாலி–நட்ராஜ்-பிரகாஷ்ராஜ் இணையும் ‘ரிச்சி’

நிவின்பாலி–நட்ராஜ்-பிரகாஷ்ராஜ் இணையும் ‘ரிச்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Richie movie teamகவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நிவின் பாலி – நட்ராஜ் சுப்ரமணியம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பிடபட்டிருக்கிறது.

ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் இந்த ‘ரிச்சி’ படத்தில் பிரகாஷ் ராஜ், ‘யு டர்ன்’ படப்புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ராஜ் பரத் மற்றும் ‘சுட்டக்கதை’ புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த ‘ரிச்சி’ படத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் எங்களின் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும். பல எண்ணற்ற யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பிட்டுள்ளோம்.

‘ரிச்சி’ என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்.

தமிழில் முதல்முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கும் நிவின் பாலி, ஏறக்குறைய 75 சதவீத படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்து இருக்கிறார்.

வருகின்ற கோடை விடுமுறை நாட்களில் நாங்கள் ‘ரிச்சி’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

படத்தின் முதல் காட்சி போஸ்டரையும், டைட்டில் டிசைனையும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.

Nivin Pauly Natraj and Prakash starring Richie

வருணுக்கு வாத்தியராக மாறிய ஜெயம் ரவி-அர்விந்த் சாமி

வருணுக்கு வாத்தியராக மாறிய ஜெயம் ரவி-அர்விந்த் சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bogan team‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி இணைந்துள்ள ‘போகன்’ வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகிறது.

நாயகியாக ஹன்சிகா நடிக்க, ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கியிருக்கிறார்.

இவர்களுடன் வருண் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

இது குறித்து நடிகர் வருண் கூறியதாவது…

வளர்ந்து வரும் நடிகருக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? ஆரம்பத்தில் ஜெயம் ரவி சார் மற்றும் அரவிந்த் சுவாமி சார் ஆகியோரோடு இணைந்து நடிப்பது சற்று பதட்டமாக தான் இருந்தது.

ஆனால் நாளடைவில் அவர்கள் எனக்கு அளித்த சுதந்திரமும், உற்சாகமும் என்னை பதட்ட நிலையில் இருந்து வெளி கொண்டு வந்துவிட்டது.

நான் நடித்த காட்சிகள் சிறப்பாக அமைய, அவர்கள் இருவரும் என்னோடு உடன் இருந்து வழி நடத்தியது மட்டுமில்லாமல் எனக்கு சிறந்ததொரு ஆசானாகவும் இருந்து என்னை ஊக்குவித்தனர்

இயக்குநர் லக்ஷ்மன் சார் என்னுடைய கதாபாத்திரத்திற்காக, ஒரு தனித்துவமான நடை பழக்கத்தை எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார்.

அதற்கான காரணத்தை ‘போகன்’ திரைப்படத்தை பார்த்த பின்பு ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். தொடர்ந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் படங்களில் பணியாற்றி வருவதை நான் பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

Jayam Ravi Arvind Swamy helped me to improvise my acting skills says BOGAN actor Varun

bogan varun

 

தனியார் பள்ளிகளின் தவறுகளை தட்டிக் கேட்க வருகிறாள் ‘சாயா’

தனியார் பள்ளிகளின் தவறுகளை தட்டிக் கேட்க வருகிறாள் ‘சாயா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saaya movie stillsபைரவா படம் வெளியான ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருந்த படம் சாயா.

ஆனால் அன்று தியேட்டர்கள் கிடைக்காமல் போனதால் தற்போது பிப்ரவரி 3ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது.

இப்படம் குறித்தும் வெளியீடும் குறித்தும் பேசுகிறார் இயக்குனர்.

கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் பலியாகிறாள். பின் நடப்பதெல்லாம் ஆத்மாவின் விளையாட்டு.

பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது ’சாயா.’

பைரவா படத்துடன் வந்துவிடலாம் என்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை.

போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், ”எங்கள் தளபதி படம் வெளியாகும்போது நீங்கள் எப்படி வெளியிடலாம்” என ஒரே தகராறு. வீட்டிலேயே எதிர்ப்பிருந்தா எப்படி வெளியிடுறது? தள்ளிப்போட வேண்டியதாயிற்று.

மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த நாடே களமிறங்கி நிற்கும்போது நான் எப்படி படத்தை வெளியிடுவேன்? தள்ளி வைத்தேன். இப்போதும் போகன் வருகிறது என்கிறார்கள்.

வரட்டும். ஆனால் இது சமூகத்திற்கு சொல்லவேண்டிய கருத்துள்ள படம். மக்களுக்கான படம். தைரியமாக வெளியிடுகிறேன் என்கிறார் இயக்குநர் வி எஸ் பழனிவேல்.

படத்தில் புதுமுகம் சந்தோஷ் கண்ணா, டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி ஹீரோயின்.

சோனியா அகர்வால் அதிரடி நாயகியாக நடித்துள்ளார். ஆர்.சுந்தர்ராஜன், கொட்டாச்சி, Y.G.மகேந்திரன், பாய்ஸ் ராஜன், பயில்வான், நெல்லை சிவா, மனோகர், பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நாயகன் வெளியூரிலிருந்து வருவார்.

அப்போது நாயகி அவரை வரவேற்று திருஷ்டி சுத்திப்போடுவார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகையான திருஷ்டியை மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார்.

இன்னொரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் என கேட்க, நாயகி காயத்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆண்டது யார் யார் என மூச்சுவிடாமல் பேசி நடித்து யூனிட்டின் கைத்தட்டலை வாங்கியுள்ளார்.

நாயகி காயத்ரி கூறும்போது, நீண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடிக்கவேண்டும் என்று இயக்குநர் பழனிவேல் கூறியபோது, பயந்தேன். ஆனால் இயக்குநர் பழனிவேல் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார்.

தமிழ் தெரிந்த நாயகி என்பதால் புரிந்து பேசி ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது. இன்னும் இதுபோன்ற சவாலான வேடங்களும் சமூக அக்கறையுள்ள படங்களாக கிடைத்தால் நடிப்பின் மூலம் சமூகத்திற்கும் பயனுள்ள செய்திகளை சொல்ல முடியும். இந்த கேரக்டரை எனக்குத் தந்த இயக்குநருக்கு என் நன்றிகள் என்றார்.

தனியார் பள்ளிகளில் நடக்கும் தவறுகளை ஆணித்தரமாக பேசுவதோடு, இன்றைய கல்வி நிலையங்களின் உண்மையான முகத்தை தோலுரித்துக்காட்டும் படமாகவும் சாயா படம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆசிரியர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பாடம் சொல்லிக்கொடுக்கும் படமாக உருவாகியுள்ளது சாயா.

ஜான் பீட்டர் இசையமைத்துள்ள இப்படத்தை அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வெளியிடுகிறார் V.S. சசிகலா பழனிவேல்.

saaya movie stills

More Articles
Follows