சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டும் *சீமராஜா*

சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டும் *சீமராஜா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seemaraja will take Sivakarthikeyan to next level says Ponramபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பெரும் எண்ணிக்கையில் இந்த இசை விழாவில் குவிந்திருந்தனர்.

சிவகார்த்திகேயன் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கும் நட்சத்திரமாக மாறியிருப்பதை அங்கு போடப்பட்ட கோஷங்களே பறை சாற்றின.

விழா நடந்த இடம் வண்ண விளக்குகளால் மின்னியது. பெரிய அளவில் நட்சத்திரங்கள் கூடிய ஒரு விண்மீனைப் போலவே ஒரு நாள் முழுக்க மதுரை இருந்தது. நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பழமையான கிராமிய நாட்டுப்புற கலைகள் பார்வையாளர்களை வரவேற்றன, அந்த பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

“இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், பாடலாசிரியர் யுகபாரதி, ஹீரோ சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து வேலை செய்வதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. சூரி எங்கள் குழுவின் ஒரு அங்கம்.

சமந்தா எங்கள் கெமிஸ்ட்ரியை பார்த்து பொறமைப்படுவதாக ஜாலியாக சொல்வார். சமந்தா ஒரு முழுமையான தொழில்முறை நடிகை.

அவர் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு சிலம்பம் கலை தேவை என்று தெரிந்தவுடன், மிகவும் அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்று, மிக நேர்த்தியாக நடித்துக் கொடுத்தார்.

இந்த படத்தில் மூத்த நடிகர்கள் நெப்போலியன் சார், லால் சார், சிம்ரன் மேடம் ஆகியோர் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு சிறந்ததையே கொடுப்பார் என நம்புபவன் நான். சீமராஜா நிச்சயம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும். சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து நான் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவரை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.

இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பே மதுரையில் தான் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா.

இந்த படத்தை உருவாக்குவதில் 24AM STUDIOS குழுவின் கடின உழைப்புடன், ஆர் டி ராஜாவின் முயற்சிகளும், தமிழ் சினிமா வர்த்தகத்தில் ராஜாவை சிறந்தவராக ஆக்கியிருக்கிறது” என்றார் இயக்குனர் பொன்ராம்.

Seemaraja will take Sivakarthikeyan to next level says Ponram

பியார் பிரேமா காதலை ஆகஸ்ட் 9ல் ரிலீஸ் செய்ய காரணம் இதுதான்

பியார் பிரேமா காதலை ஆகஸ்ட் 9ல் ரிலீஸ் செய்ய காரணம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Here is the reason Why Pyaar Prema Kaadhal release date preponedகாதல், ரசிகர்களுக்கு விருந்து வைக்க, அதன் முன்னறிவிக்கப்பட்ட நாளை விட முன்னதாகவே வருகிறது.

இந்த காலகட்டத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான பியார் பிரேமா காதல், முன்பே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியே உலகமெங்கும் வெளியாகிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையோடு அலங்கரிக்கப்பட்ட அழகிய காட்சியமைப்புகள், ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
யுவன் ரசிகர்களின் தவிர்க்க முடியாத காத்திருப்புக்கு, தற்போது விடை தெரிந்திருக்கிறது.

பியார் பிரேமா காதல் படத்தின் உலக அளவிலான டிஸ்ட்ரிபியூஷன் உரிமையை பெற்றிருக்கும் இர்ஃபான் கூறும்போது, “ஆரம்பத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி தான் இந்த திரைப்படத்தை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர நாங்கள் விரும்பினோம்.

ஆனால் இசை மற்றும் டிரெய்லருக்கான நம்ப முடியாத வரவேற்பை கண்ட பிறகு, ரசிகர்களுக்கு முன்னதாகவே விருந்து வைக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம்.

எனவே ஒரு நாள் முன்னதாகவே ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட செய்ய முடிவு செய்தோம். யுவன் ஷங்கர் ராஜாவின் 12 பாடல்கள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மிகவும் அதிகமாக்கியது.

கூடுதலாக, டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. பியார் பிரேமா காதல் ரசிகர்களுக்கு நிச்சயம் பொழுதுபோக்கு மற்றும் உண்மையான காதலின் தருணங்களை கொடுக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பதும், மனதை கவரும் அவர்களின் தோற்றமும் படத்துக்கு மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும்.

Here is the reason Why Pyaar Prema Kaadhal release date preponed

PPK பியார் பிரேமா காதல்

*8 தோட்டாக்கள்* டைரக்டருடன் இணைந்து அதர்வா ஆடும் *குருதி ஆட்டம்*

*8 தோட்டாக்கள்* டைரக்டருடன் இணைந்து அதர்வா ஆடும் *குருதி ஆட்டம்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvaa teams up with Director Sri Ganesh for Kuruthi Aatamஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் “குருதி ஆட்டம்”. கடந்த வருடம் வெளியான படங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் “8 தோட்டாக்கள்”.

அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தமிழ் திரை உலகின் எதிர்கால இயக்குனர்களில் மிக முக்கியமானவராக வருவார் என்கிற கணிப்பும் ஏக மனதாகவே இருந்தது, இருக்கவும் செய்கிறது.

அவருடைய அடுத்த படத்துக்கு “குருதி ஆட்டம்” என பெயரிட பட்டு உள்ளது. தமிழ் திரை உலகின் தற்போதைய இளம் கதாநாயகர்களில் உச்ச நிலைக்கு போக தகுதியானவர் என பலரும் போற்றும் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் pictures சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்தது.

” இந்த படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். Commercial மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் படம் இது.

ஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும். நாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன் அந்தஸ்த்தை உயர்த்தும் அதர்வா இந்த படத்தின் கதாநாயகன், அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக “குருதி ஆட்டம்” அமையும்.

கதாநாயகி தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்” என கூறினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.

Atharvaa teams up with Director Sri Ganesh for Kuruthi Aatam

வருண் தவான்-அனுஷ்கா ஷர்மா இணைந்துள்ள *சுய் தாகா-மேட் இன் இந்தியா*

வருண் தவான்-அனுஷ்கா ஷர்மா இணைந்துள்ள *சுய் தாகா-மேட் இன் இந்தியா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varun Anushka give 40 days for Sui Dhaaga Made In India promotionsசுய் தாகா மேட் இன் இந்தியா ரிலீஸ், சுய் தாகா மேட் இன் இந்தியா வருண் தவான் அனுஷ்கா ஷர்மா, கைத்தறி தினம் ஆகஸ்ட் 7,

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி ” சுய் தாகா- மேட் இன் இந்தியா ” திரைப்படத்திற்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர் !

இந்த படத்தில் வருண் தவான் தையல் காரராகவும் அனுஷ்கா ஷர்மா (EMBROIDERER ) தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர்.

எனவே இப்படத்திற்கான விளம்பரத்தை தொடங்க ஆகஸ்ட் 7 ஆம் தேதியைவிட சிறந்த நாளாக இருக்கப்போவதில்லை .

இத்திரைப்படத்தினை நெசவாளர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் சமர்பிப்பதில் படக்குழு மிக்க மகிழ்ச்சி அடைகிறது.

அதனால் இப்படத்தின் விளம்பர வேலையை ஆகஸ்ட் தேசிய கைத்தறி தினத்தன்று தொடங்குகிறோம் என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார் .

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவித்தது.அதே நாளில் 1905 ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த இயக்கம் உள்நாட்டு தொழில்முயற்சியை புதுப்பிப்பதைக் கண்டது.வருண் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இதேநாளில் படத்தின் விளம்பர சுற்றுப்பயணத்தை தொடங்க தயாராக உள்ளனர்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த ” சுய் தாகா- மேட் இன் இந்தியா “திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Varun Anushka give 40 days for Sui Dhaaga Made In India promotions

சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய *சுப்ரமணியபுரம்* பெயரில் ஒரு சீரியல்

சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய *சுப்ரமணியபுரம்* பெயரில் ஒரு சீரியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Subramaniapuram mega serial in Jaya TVசசிகுமார் இயக்கத்தில் ஜெய், சமுத்திரக்கனி நடிப்பில் உருவானப்படம் சுப்ரமணியபுரம்.

2008ல் வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

தற்போது இதே பெயரில் ஜெயா டிவியில் ஒரு சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

சின்னத்திரையில் நாளுக்கு நாள் புதுப்புது தொடர்கள் வெளியாகின்றன.. இதில் பல தொடர்கள் ஒன்றைப்போலவே இன்னொன்று இருப்பதையும் பார்க்க முடிகிறது.

அதனால் இந்த தொடர்களில் இருந்து மாறுபட்டு முற்றிலும் புதிய கதைக்களத்தில் திகில், மர்மங்கள் நிறைந்த தொடராக உருவாகிறது ‘சுப்ரமணியபுரம்’. இதன் துவக்கவிழா பூஜை ஏவி எம் கார்டன் வளாகத்தில் நடைபெற்றது.

வி. சங்கர் ராமன் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடரை ஹரீஷ் ஆதித்யா இயக்குகிறார்.. இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்மாளம் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், மேலும் திருடா திருடி, மலைக்கோட்டை படங்களிலும், சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அதன்பின் சின்னத்திரை தொடர்களில் டைரக்சன் பக்கம் கவனத்தை திருப்பிய இவர் தற்போது ‘சுப்ரமணியபுரம்’ தொடரின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

இது சுப்ரமணியபுரம் என்கிற ஊரை பற்றிய கதை. அந்த ஊரில் உள்ள கோயிலில் உள்ள சிலை ஒன்று காணாமல் போகிறது.அதனால் அந்த ஊர் சாபத்திற்கு ஆளாகிறது.

அதையடுத்து அந்த ஊரில் நடக்கும் மர்மங்களும் அதை நாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதும் தான் கதை.. கதாநாயகன் தேர்வு நடைபெற்று கொண்டிருக்குறது. கதாநாயகியாக ககனா நடிக்கிறார்.

மர்ம கதைகளுக்கு பெயர்போன எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தான் இந்த தொடருக்கு கதை எழுதியுள்ளார். சரவணக்குமார் ஒளிப்பதிவை கவனிக்க விவேக் சங்கர் வசனம் எழுதுகிறார்.

இங்கே வழக்கமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்த விரும்பாததால் இந்த தொடரின் படப்பிடிப்பு முழுதும் கர்நாடகாவில் உள்ள வனப்பகுதியில் தான் நடைபெறுகிறது.

கதைக்கேற்ற கிராமமும் கோவிலும் அந்தப்பகுதியிலே கிடைத்தது அதிர்ஷ்டம் என்கிறார் இயக்குனர் ஹரீஷ் ஆதித்யா.. வரும் செப்டம்பர் முதல் ஜெயா டிவியில் இந்த தொடரை சின்னத்திரையில் கண்டுகளிக்க தயாராகுங்கள்.

Subramaniapuram mega serial in Jaya TV

Subramaniapuram mega serial in Jaya TV

வீட்டில் இருப்பவர்கள் போராளிகள் என சொல்லக்கூடாது..- சுரேஷ் காமாட்சி

வீட்டில் இருப்பவர்கள் போராளிகள் என சொல்லக்கூடாது..- சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer cum Director Suresh Kamatchi speech at Porukkiees Audio launchமஞ்சுநாத் இயக்கியுள்ள *பொறுக்கிஸ்* படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் ராஜா நாயகனாக நடிக்க, லவனிகா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவ்விழாவில் ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது…

“இன்றைய சூழலில் கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளை கட்டிவிட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காலத்தில், அப்படி ஒரு டிஜிட்டல் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த காலத்தில் விவசாயத்தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்கிறபோது மிகவும் பெருமையாக இருக்கிறது.

சினிமாக்காரர்களிடம் சமூகப் பொறுப்பு இல்லை என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாக்காரர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை நிருபிக்க வந்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிப்பட்ட கருத்துகளை சொல்வதினால் எங்களை சமூகவிரோதிகள் , பொறுக்கிகள் என்று சொன்னாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இப்படிப்பட்ட கருத்துக்களை சொல்ல தைரியம் வேண்டும். இதற்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான ஒன்று.

படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப்பது தெரிகிறது. ராதாவி சார் சும்மாவே ஆடுவார்.. அவருக்கு சலங்கையும் கட்டி ஆடவிட்டால் கேட்கணுமா..?

நாம வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க நிறைய சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்.

இன்று தமிழ் சினிமாவில் பத்து சதவீதம் தான் பெரிய படங்கள் வருகின்றன. மீதி 90 சதவீதம் சிறிய படங்கள் தான்.. ஆனால் இந்த சின்ன படங்களை வைத்துதான் இன்று சினிமாத் துறையே இயங்கிக்கொண்டு இருக்கிறது.
இவங்க, எல்லோரையும் வாழவைக்கும் ஏணியா இருந்துட்டு, இவங்க மட்டும் இன்னமும் அதே இடத்துல இருந்துட்டு இருக்காங்க..இவங்களை ஏற்றிவிட ஊடகங்களின் ஆதரவு வேண்டும்” என வேண்டுகோளுடன் முடித்தார்.

ஜே.கே.ரித்தீஷ் பேசும்போது,

“ராதாரவியின் அழைப்பை ஏற்றுத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன். எப்போதுமே சிறிய படங்களும், புதிய நடிகர்களும் வெற்றி பெறவேண்டும் என நினைப்பவன்.மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பொறுப்புக்கு வருவோம்..

இந்தப் படத்தில் பாடிய ஆலயமணிக்கு குறைந்தது பத்து படங்களிலாவது நான் வாய்ப்பு வாங்கித்தருவேன்” எனக் கூறினார்.

Producer cum Director Suresh Kamatchi speech at Porukkiees Audio launch

More Articles
Follows