தெலுங்கு ரீமேக்கில் சந்தானத்தை இயக்கும் ‘வஞ்சகர் உலகம்’ பட இயக்குநர்

தெலுங்கு ரீமேக்கில் சந்தானத்தை இயக்கும் ‘வஞ்சகர் உலகம்’ பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானத்தின் சமீபத்திய படங்கள் வெற்றி பெற்று வருகின்றன.

அவரது கைவசம் தற்போது பாரிஸ் ஜெயராஜ், மன்னவன் வந்தானடி, சபாபதி உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இந்த நிலையில், 2019ல் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் சந்தானம்.

அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ பட இயக்குனர் மனோஜ் பீதா இயக்குகிறார்.

Santhanam’s next with Vanjagar Ulagam director

vanjagar ulagam director

அருண் விஜய் & ப்ரியா கூட்டணியில் இணைந்தார் ‘குக் வித் கோமாளி’ புகழ்

அருண் விஜய் & ப்ரியா கூட்டணியில் இணைந்தார் ‘குக் வித் கோமாளி’ புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pugazhதமிழ் சினிமாவில் மளமளவென படங்களை குவித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாண் உடன் ‘ஓ மணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ஜீவா & அருள்நிதியுடன் ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் இவர் கைவசம் உள்ளன.

இந்த படங்கள் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’, சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

மேலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இவர்கள் ஜோடியுடன் யோகி பாபு, பிரகாஷ் ராஜ், ராதிகா ஆகியோர் இணைந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ புகழ் என்பவரும் இணைந்துள்ளார்.

இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கிறார்.

Cooku with comali fame Pugazh part of Arun Vijay 33

அடேங்கப்பா.. ‘மாநாடு’ பட டீசரை மெகா நாடாக மாற்றிய படக்குழு..; சிம்புவுக்கு கை கொடுக்கும் இந்திய ஸ்டார்ஸ்

அடேங்கப்பா.. ‘மாநாடு’ பட டீசரை மெகா நாடாக மாற்றிய படக்குழு..; சிம்புவுக்கு கை கொடுக்கும் இந்திய ஸ்டார்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanaadu (2)‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து விட்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணி புரிய, இசையமைப்பாளராக யுவன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு (நாளை பிப்ரவரி 3ஆம் தேதி) மதியம் 2.34 மணிக்கு ‘மாநாடு’ பட டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த டீசரை தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் & ஹிந்தி ஆகிய மொழிகளில் அந்தந்த மொழி பிரபலங்கள் வெளியிடவுள்ளனர்.

மலையாள டீசரை நடிகர் ப்ருத்விராஜ், ஹிந்தி டீசரை நடிகர் அனுராக் காஷ்யப், கன்னட டீசரை நடிகர் சுதீப் & தெலுங்கு டீசரை நடிகர் ரவி தேஜா வெளியிடவுள்ளனர்.

தமிழ் பதிப்பு டீசரை யார் வெளியிட போகிறார்கள்? என்பதை (இந்த செய்தி பதிவாகும்வரை) இன்னும் அறிவிக்கவில்லை.

மேலும் சிம்புவின் அடுத்த படமான ‘பத்து தல’ படக்குழு பிப்ரவரி 3 நள்ளிரவு 12.06 மணிக்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாம்..

Indian top celebrities joins for STR

தியேட்டர் ரிலீஸில் இருந்து ஜகா வாங்கும் ‘ஜகமே தந்திரம்’..? தனுஷ் ட்வீட்டால் ரசிகர்கள் கன்ப்யூஸ்

தியேட்டர் ரிலீஸில் இருந்து ஜகா வாங்கும் ‘ஜகமே தந்திரம்’..? தனுஷ் ட்வீட்டால் ரசிகர்கள் கன்ப்யூஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushஇந்தாண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘மாஸ்டர்’ & சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் தியேட்டர்களில் ரிலீசானது.

ஈஸ்வரன் படத்தை முதல் நாளே ஓடிடி-யில் வெளியிட திட்டமிடப்பட்டதால், அப்படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தனர்.

எனவே ஓடிடி முடிவை கைவிட்டது படக்குழு.

ஆனால் ‘மாஸ்டர்’ படம் இரு வாரங்களில் ஓடிடி-யில் வெளியானது.

ஒரு படம் தியேட்டரில் வெளியாகி 50 நாட்களுக்குள் ஓடிடியில் வெளியிடக்கூடாது என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருந்த போதிலும் ‘மாஸ்டர்’ படம் OTT-ல் வெளியிடப்பட்டு, தியேட்டரிலும் கூட்டம் அள்ளுகிறது.

இந்த நிலையில் இதே போல பிரச்சினையை தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படமும் சந்தித்து வருகிறது.

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் படத்தை OTT-ல் நேரடியாக வெளியிடும் முடிவை மறுத்தனர்.

இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிய திரைகளில் ரசிக்கும்படி இயக்கப்பட்டுள்ளது என அறிவித்தனர்.

சற்றுமுன் நடிகர் தனுஷும் அவரது ட்விட்டரில்… தியேட்டர் உரிமையாளர்கள் & என் ரசிகர்களை போல ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர் வெளியீடாக எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனால் படத்தயாரிப்பாளர் முடிவில் ஏதேனும் மாற்றம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் ‘ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளர், மனம் மாறி, ஏற்கனவே படத்தை OTT தளத்துக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது.

இத்துடன் ஒரே நாளில் படத்தை தியேட்டர்களிலும் ஓடிடி-யிலும் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்த படம் ‘ஜகமே தந்திரம்’.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார்.

Actor Dhanush’s surprise breaking statement about Jagame Thandhiram release

தலைப்பாகையுடன் வந்தார்.. விவசாயிகளுக்கு குரல் கொடுத்தார்.; சட்டப் பேரவையை வியக்க வைத்த விஜயதாரணி

தலைப்பாகையுடன் வந்தார்.. விவசாயிகளுக்கு குரல் கொடுத்தார்.; சட்டப் பேரவையை வியக்க வைத்த விஜயதாரணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayatharaniஇந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்திற்காக கலைவாணர் அரங்கம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது.

காலை 9 மணிக்கு காரில் வந்து இறங்கினார் ஒரு பெண்மணி. சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் கெடுபிடியாக இருந்தது.

காரிலிருந்து இறங்கிய போது, தலையில் பச்சை கலரில் தலைப்பாகை கட்டி கம்பீரமாக வெளியே வந்தார் காங்கிரஸ் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி.

பார்த்தவர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். வந்தவர் நேரடியாக சட்டமன்றத்திற்குள் சென்றார்.

உள்ளே நுழைந்ததும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆச்சரியமாக பார்த்தனர். கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரது பார்வையும் ஒரே நேரத்தில் விஜயதாரணி பக்கம் கவனம் பெறும் வகையில் இருந்தது.

அவர் ஏன் தலைப்பாகையோடு இப்படி வந்திருக்கிறார் என்று பலரும் புலம்பிக் கொண்டிருந்தனர்.

கவர்னர் உரை தொடங்குவதற்கு முன்பே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் விஜயதாரணி.

அவருடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் தலையில் தலைப்பாகை கட்டி வெளியே வந்து முழக்கமிட்டனர்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதை கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக கூறி முழக்கமிட்டார்.

இந்தியாவின் உயிர்நாடியாக இருப்பது விவசாயமும், விவசாயிகளும் தான்.

அவர்களின் குரலுக்கு செவி சாய்க்காத அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் தலைப்பாகை அணிந்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஓங்கி ஒலித்த குரலில் பேட்டி கொடுத்தார் விஜயதாரணி.

அப்போது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதை வியப்பில் பார்த்தனர்.

எப்போதுமே அதிரடியாக துணிச்சலோடு விமர்சனங்களுக்கு, அஞ்சாமல் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் விஜயதாரணியின் இந்த செயலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Congress MLA Vijayatharani boycotted the Tamil Nadu assembly

சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண்..; அரசியலுக்கு வரவே மாட்டேன்னு ரஜினி சொன்னாரா?.; மார்ச் 7 ட்விஸ்ட் வைக்கும் தமிழருவி மணியன்

சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண்..; அரசியலுக்கு வரவே மாட்டேன்னு ரஜினி சொன்னாரா?.; மார்ச் 7 ட்விஸ்ட் வைக்கும் தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth tamilaruvi manian (1)தன் உடல்நிலை காரணமாக இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2020 டிசம்பர் 29ல் அறிவித்தார்.

இதனால் சில தினங்களில் அவரது ரசிகர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது…

“காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் ரஜினி ஒரு நாள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர்வார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை.

அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத்திற்குச் சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, மிகச் சாதாரண மனிதனாகத் தன்னைப் பாவிக்கும் பண்பு நலன், அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமற்ற எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் உங்கள் மனதைப் பறிகொடுத்துத்தான் நீங்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களாக மாறினீர்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

அவருக்காக எதையும் இழக்கத் துணியும் உங்கள் உயரிய அர்ப்பணிப்பைக் கடந்த நான்காண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன்.

பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார்.

காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை.

ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை.

இந்த நிலையில் அவருடைய கூற்றின்படி சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண் அடைந்திருப்பதையும்,

சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு நான் வருந்துகிறேன். ரஜினி

மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன்.

காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன்.

காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாகத் தொடர்ந்து செயற்படும். அவரவர் இடத்தில் இருந்தபடி கரங்கள் இணந்து காரியமாற்றுவோம். நான் ஒரு காந்தியவாதி இறக்கும் நாள்வரை இடையறாமல் தன்னலமின்றி சமூக நலன் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இழிந்த விமர்சனங்களை இம்மியும் பொருட்படுத்தலாகாது. மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் பணியில் நீங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று சான்றாண்மை மிக்க மூத்தோர் பலர் வழங்கிய அறிவுரையை ஏற்கிறேன்.

தரம் தாழ்ந்த, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தியதில்லை. எந்த லாவணிக் கச்சேரியிலும் ஒரு நாளும் நேரத்தை விரயமாக்காமல் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பணிகளில் காந்திய மக்கள் இயக்கம் முன்னிலும் முனைப்பாக ஈடுபடும்.

மார்ச் 7-ம் நாள் திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திபூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி”

இவ்வாறு தமிழருவி மணியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tamilaruvi Manian writes to Rajini Makkal Manram members and fans

More Articles
Follows