தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படத்தில் முதன்முறையாக போலீஸாக நடிக்கிறாராம் சந்தானம்.
இப்படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என பெயரிட்டுள்ளனர்.
இது எம்ஜி.ஆரின் நல்ல நேரம் படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதில் நாயகியாக தனுஷின் அனேகன் படத்தில் நடித்த அமைரா நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் ரோபோ சங்கர், ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தை வாசன் பிரதர்ஸ், சிவஸ்ரீ பிக்சர்ஸ் மற்றும் வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்.