ஆதரவற்ற குழந்தைகளை காதலிக்கும் சாக்ஷி அகர்வால்..; வழக்கம்போல காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடினார்.!

ஆதரவற்ற குழந்தைகளை காதலிக்கும் சாக்ஷி அகர்வால்..; வழக்கம்போல காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடினார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வேலன்டைன்ஸ் டே’ என்றாலே டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என இன்றைய தலைமுறை ஒரு மோசமான ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனாலேயே காதலர் தினத்தை வெறுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

நடிகை சாக்ஷி அகர்வாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அவர் காதலிப்பது ஆதரவற்ற குழந்தைகளை என்பது ஹைலைட்!

ஆம், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி.

தான் நடித்த ‘குட்டி ஸ்டோரி’ படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் நேரமாகப் பார்த்து காதலர் தினம் வருகிறது. அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய காதலர் தினக் கொண்டாட்டம் என்கிறார்.

அவரிடம் பேசினோம்… ” ‘வேலன்டைன்ஸ் டே’வை உலகம் பார்க்கிற பார்வை வேற. நான் அதை மனுஷங்க மேல மனுஷங்க அன்பு செலுத்துறதுக்கான தினமாத்தான் பார்க்கிறேன்.

யார் வேணாலும் யார் மேல வேணாலும் அன்பு செலுத்தலாம். எனக்கு ஆதரவற்ற குழந்தைகள் மேல அன்பு செலுத்துறது பிடிச்சிருக்கு. அவங்கதான் என்னோட காதலர்கள். அதனால, காதலர் தினத்தை அவங்களோட கொண்டாடுறேன்.

மூணு வருஷத்துக்கு முன்னே, ‘ஃபுட் ஃபார் டூ’ங்கிற (Food for Two) கான்செப்ட்ல காதலர் தினத்தைக் கொண்டாடினேன்.

அதாவது ‘ஒரு மனுஷன் இரண்டு பேருக்கு உணவு கொடுத்தாலே போதும்; நாட்டுல ஏழைகளுக்கு பசி பட்டினி இருக்காது’ங்கிற விழிப்புணர்வை உருவாக்குறதுக்காக பண்ணது அது.

போன வருஷ காதலர் தினத்தை, ‘எய்ட்ஸ்’ பாதித்த பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கான ஒரு காப்பகத்துல அவர்களைத் தொட்டுப் பேசி பழகி, சாப்பாடு கொடுத்து கொண்டாடினேன்.

‘எய்ட்ஸ் பாதித்தவங்களை தொடுறதால நமக்கு எய்ட்ஸ் தொற்றாது; அவங்களை தொட்டுப் பழக தகுதியற்றவர்களா நினைக்கிறது தப்பு’ங்கிறதை எடுத்துச் சொல்றதுக்கான முயற்சியா அதை பண்ணேன்.

இந்த வருஷம், கிட்டத்தட்ட 100 ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிற ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ காப்பகத்துல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். மனசுக்கு அவ்ளோ ஹேப்பி… இது அடுத்தடுத்த வருஷமும் தொடரும்” என்றார்.

‘குட்டி ஸ்டோரி’ படத்தையடுத்து சாக்ஷி அகர்வால் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘டெடி’ படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்ததாக, சாக்ஷி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘தி நைட்.’

விலங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரமாக நடிக்கப் போகிற அந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கிறதாம். ‘அரண்மனை 3’யிலும் நடிக்கவிருக்கிறார் என்பது சாக்ஷி பற்றிய அடுத்த அப்டேட்.

Sakshi Agarwal Celebrated Valentines day with Childrens

மீண்டும் ‘டிக் டாக்’..; ராஜாஜி – சுஷ்மா ராஜ் – பிரியங்கா மோகன் கூட்டணி

மீண்டும் ‘டிக் டாக்’..; ராஜாஜி – சுஷ்மா ராஜ் – பிரியங்கா மோகன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tik Tokஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் ‘டிக்டாக்’. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன்.
‘எங்கிட்ட மோதாதே’ படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

மூடர் கூடம் ராஜாஜி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர்.

மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய மால் ஒன்றில் scary house எனப்படும் பேய்வீடு செட் அமைத்து பார்வையாளர்களுக்கு ‘த்ரில்’ வழங்கும் வேலையை செய்து வருகின்றனர் நாயகனும் நாயகியும்.

இந்த வீட்டில் நிஜமான பேய் ஒன்று நுழைவதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளையும் காமெடி, த்ரில் என கலந்து படமாக்கியுள்ளார்கள். பேய்க்கான பிளாஸ்பேக்கும் இதுவரை சொல்லப்படாத ஒன்றாக இருக்கும்

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் நாயகன் ராஜாஜி இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

அதில் இன்னொன்று வில்லன் கதாபாத்திரம். யாருமே நடிக்க தயங்கும் அந்த கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் துணிச்சலாக நடித்துள்ளார் ராஜாஜி. இதற்காக மொட்டையெல்லாம் அடித்துள்ளார் ராஜாஜி.

இளைஞர்களிடம் இருந்து பிரிக்க முடியாமல் இரண்டற கலந்திருந்த, டிக்டாக் செயலி போல, கமர்ஷியலான அம்சங்களுடன் இந்தப்படம் உருவாகி இருப்பதால் டிக்டாக் என்றே டைட்டிலும் வைத்து விட்டார்கள்.

அதற்கேற்றவாறு, “எவன்டா சொன்னான் மாமு.. டிக்டாக் எல்லாம் பேன்னு” என்கிற புரோமோ பாடலையும் உருவாக்கியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் ஏ.கே.ரிஷால் சாய்.

ராட்சசன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த ஷான் லோகேஷ் இந்தப்படத்திலும் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோவையிலேயே நடைபெற்றுள்ளது.. மேலும் பிரமாண்டமான பேய் வீடு செட் ஒன்றையும் அமைத்து அதில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

விரைவில் இந்தப்படத்தின் இசைவெளியீடு நடக்கவுள்ளது. படத்தை மார்ச் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அந்தவகையில் அடுத்துவரும் நாட்களில் சோஷியல் மீடியாவை இந்த டிக்டாக் ஆக்கிரமிப்பு செய்யப்போகிறது என்பது நன்றாகவே தெரிகிறது..

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

டைரக்சன் ; மதன்

இசை ; மணி & ரிஷால் சாய்

ஒளிப்பதிவு ; டோனி சான் & முருகன் செல்லப்பா

படத்தொகுப்பு ; ஷான் லோகேஷ்v

சண்டை பயிற்சி ; சூப்பர் சுப்பராயன் .

நிர்வாக தயாரிப்பு ; சுரேஷ் மாரிமுத்து

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

TIK TOK movie news updates

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் & சேரன்..; வாரிசு நடிகையும் கூட்டணி

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் & சேரன்..; வாரிசு நடிகையும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா பெரியசாமி எழுதி, இயக்கவுள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.

மேலும் சேரன், டேனியல் பாலாஜி , சரவணன், கிழக்கு சீமையிலே விக்னேஷ் , சிங்கம் புலி, ஜோமல்லூரி , கவிஞர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் , மௌனிகா, மைனா , பருத்திவீரன் சுஜாதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஸ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார்.

பாலபரணி ஒளிப்பதிவு செய்ய சித்துகுமார் இசையமைக்கிறார்.

இப்பட மூலம் வாரிசு நடிகை ஷிவாத்மிகாவும் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கவுதம் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் நட்சத்திர தம்பதிகள் ராஜசேகர் & ஜீவிதாவின் 2வது மகள் ஆவார்.

இவர்களின் மூத்த மகள் ஷிவானியும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இப்பட சூட்டிங் மார்ச் மாதம் முதல் நடைபெறவுள்ளது .

Gautham karthik and Cheran joins for new film

Gautham Karthik Cheran

சிரஞ்சீவி & ராம்சரண் இணையும் ‘ஆச்சார்யா’ படத்தில் பூஜா ஹெக்டே..; யாருக்கு ஜோடி தெரியுமா?

சிரஞ்சீவி & ராம்சரண் இணையும் ‘ஆச்சார்யா’ படத்தில் பூஜா ஹெக்டே..; யாருக்கு ஜோடி தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்து வரும் படம் ‘ஆச்சார்யா’.

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே கமிட்டாகியிருக்கிறார்.

இதற்கு முன்பு ராம்சரணின் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் பூஜா.

கொரட்டல்லா சிவா இப்படத்தை இயக்கி வருகிறார்.

கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Chiranjeevi and Ram Charan joins for new film

chiranjeevi ram charan

‘மோகன் தாஸ்’ படத்திற்காக இணையும் விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா ராஜேஷ்

‘மோகன் தாஸ்’ படத்திற்காக இணையும் விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் நடிப்பில் ‘காடன்’ மற்றும் ‘எப்ஐஆர்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதனை முடித்து விட்டு ‘மோகன் தாஸ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து தயாரித்தும் வருகிறார்.

உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறதாம்.

இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார்.

இந்நிலையில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.

மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறதாம்.

Vishnu Vishal and Aishwarya Rajesh joins for Mohan Das

vishnu aishwarya rajesh

அரக்கோணம் அதிரடி..; அதிமுகவை தோற்கடிக்க களம் இறங்கிய வக்கீல்கள் படை

அரக்கோணம் அதிரடி..; அதிமுகவை தோற்கடிக்க களம் இறங்கிய வக்கீல்கள் படை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DMKதிமுக தலைவர் ஸ்டாலின் எப்போது அரக்கோணம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., ரவியை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினாரோ அன்றில் இருந்தே அரக்கோணம் தொகுதி தமிழக சட்டசபை தேர்தலில் தனி கவனம் பெற்ற தொகுதியாக மாறியது.

அதோடு, அசைக்க முடியாத திமுக கோட்டையாக ஒரு காலத்தில் இருந்த அரக்கோணம் தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆளுமையில் இருக்கிறது.

சிட்டிங் எம்.எல்.ஏ. ரவி 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்றாலும் தொகுதியில் பெரும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறார்.

மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாததால் அவர் சார்ந்த ஆளும் கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர்.

அதே நேரம் திமுக தரப்பில் தொகுதி முழுதும் கட்சியினரிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

10 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாமல் இருப்பதால் இந்த முறை எப்படியும் தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என முழு வேகத்தில் கட்சியினருக்கு உத்தரவு போட்டிருக்கிறார் மாவட்ட செயலாளர் காந்தி.

அதோடு, தேர்தலில் பணபலமும், அதிகார பலமும் அதிமுக தரப்பில் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதால் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் தீவிரமான தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், தொகுதியில் எங்கு ஆளும் கட்சியால் இடையூறுகள் ஏற்பட்டாலும் உடனடியாக அதை எதிர் கொள்ளும் வகையில் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம்.

இது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள திமுக வக்கீல்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் போட மாவட்ட செயலாளர் காந்தி முடிவு செய்து இருக்கிறாராம்.

இது தவிர அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் ரேசில் இருந்த பவானி வடிவேலுவுக்கு “கலப்பு திருமண சிக்கல்” காரணத்தால் வாய்ப்பு ஏற்கனவே பறிபோய்விட்டது.

கடந்த முறை தேர்தலில் நின்று தோற்ற ராஜ்குமாரும் ” அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஏலக்காய் மாலை போட்ட” விவகாரத்தால் வேட்பாளர் ரேசில் இருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தொகுதியில் சர்வே எடுத்த ஐ பேக் டீமும், முன்னாள் அமைச்சரின் தனி டீமும் கொடுத்த ரிப்போர்ட் படி புதிய வேட்பாளர் களம் இறக்கப்பட்டால் திமுக வெற்றியை தவிர்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்களாம்.

அந்த வகையில் திமுக சார்பில் புதிய வேட்பாளாராக வழக்கறிஞர் எழில் இனியன் களம் இறங்க வாய்ப்புகள் அதிகமாம்.

காரணம், ஏற்கனவே தொகுதி முழுதும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் கோரிக்கை புதிய வேட்பாளர்.

அதே நேரம் ஆளும் கட்சி செய்யும் தாறுமாறான செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செலவு செய்யும் பலமும் எழில் இனியனிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

எல்லாவற்றிற்க்கும் மேலாக கோஷ்டி பூசலில் எப்போதும் நிறைந்து காணப்படும் அரக்கோணம் திமுகவில் எந்த கோஷ்டியிலும் சிக்காதவர் என்பதும் வக்கீல் எழில் இனியனுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறதாம்.

இதன் காரணமாக மாவட்டத்தின் கரிசன பார்வையும் இவர் மீதே திரும்பி உள்ளதாம்.

அதோடு வக்கீல்கள் பலத்தை அதிகரிக்க அதிமுக உட்பட பல கட்சிகளில் இருந்து பல வக்கில்களை மாவட்டம் முன்னிலையில் திமுகவில் சேர்த்த நிகழ்வும் சமீபத்தில் நடந்ததாம்.

அதில் சேர்ந்த வக்கீல் ஒருவர் இப்போது உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. ரவிக்கு மிக நெருக்கமான நண்பராம் என்பது கூடுதல் தகவல்.

இந்த தகவல்களால் அரக்கோணம் தொகுதியில் உள்ள திமுக வக்கீல்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறதாம்..

Arakkonam DMK Lawyers campaign to win assembly election

More Articles
Follows