காலாவை தொடர்ந்து மீண்டும் லைகாவுடன் இணைந்த ரஞ்சித்

காலாவை தொடர்ந்து மீண்டும் லைகாவுடன் இணைந்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith production Pariyerum Perumal first look launchஅட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என் இரு வெற்றிப் படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு எவருமே எதிர்பாராத வகையில் ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து தற்போது ரஜினியின் காலா படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் ரஞ்சித்.

இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வேலன் மற்றும் ராகேஷ் ஆகியோரும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

தற்போது சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மார்ச் மாதம் வெளியாகவுள்ள இப்டத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

காலா படத்தின் வெளியிட்டு உரிமையையும் லைகா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ranjith production Pariyerum Perumal first look launch

ranjith perumal

காலா வந்தாதான் நல்ல காலம்; சவரக்கத்தி சக்ஸஸ் மீட்டில் ராம் பேச்சு

காலா வந்தாதான் நல்ல காலம்; சவரக்கத்தி சக்ஸஸ் மீட்டில் ராம் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director cum Actor Ram speech about Kaala arrival at Savarakathi success meetஜிஆர். ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கின் தயாரித்து பாடல் எழுதி நடித்த படம் சவரக்கத்தி.

அரோல் கரோலி இசையமைத்திருந்த இப்படத்தில் டைரக்டர் ராம், பூர்ணா ஜோடியாக நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்ற இப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பட நாயகன் ராம் பேசியதாவது…

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்புக்கு பிறகு தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது.

பாகுபலி2 படத்திற்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை என தியேட்டர்கள் அதிபர்கள் சொல்கின்றனர்.

பெரிய படம் வரவேண்டும் என்கின்றனர். காலா போன்ற படம் வந்தால் மக்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்கிறார்கள்.

தற்போது சவரக்கத்தி படத்திற்கும் மக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படத்திற்கு யு சர்ட்டிபிகேட் கிடைத்திருந்தாலும் சவரக்கத்தி என்ற தலைப்பால் இது வன்முறை நிறைந்த படமாக இருக்குமோ? என்று சிலர் நினைக்கின்றனர்.

இந்த சவரக்கத்தி திருத்தும் கத்தி. அழகு பூர்வமான கத்தி” என்று பேசினார்.

Director cum Actor Ram speech about Kaala arrival at Savarakathi success meet

savarakathi success

கமல்-ரஜினியின் குரு கே.பாலசந்தரின் வீடு ஏலம்; கவிதாலயா நிறுவனம் விளக்கம்

கமல்-ரஜினியின் குரு கே.பாலசந்தரின் வீடு ஏலம்; கவிதாலயா நிறுவனம் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kavithalaya clarifies KBalachanders house office auctionதமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக திகழும் கமல் மற்றும் ரஜினியின் புகழ் உச்சத்திற்கு மிக முக்கிய காரணமானவர் இயக்குனர் கே. பாலசந்தர்.

இயக்கம் தவிர ரஜினியின் ‘சிவா’, ‘அண்ணாமலை’, கமல்ஹாசனின் ‘உன்னால் முடியும் தம்பி’, விக்ரமின் ‘சாமி’ உள்ளிட்ட பல படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

‘இயக்குநர் சிகரம்’ எனக் கொண்டாடப்பட்டவர் இவர் சில வருடங்களுக்கு முன் காலமானார்.

அவரது மறைவுக்குப் பிறகு அவரின் மகள் புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில், மயிலாப்பூர் வாரன் சாலையில் இருக்கும் கே.பாலசந்தரின் வீடும், அதேபகுதியில் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே இருக்கும் கவிதாலயா அலுவலகமும் ஏலத்துக்கு வருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

யூகோ வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் போனதால் கே.பாலசந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் மற்றும் அவரது வீடு உள்ளிட்டவை ஏலத்துக்கு வர உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரஜினி கமலை உருவாக்கியவருக்கே இந்த நிலைமையா? என சினிமாவுலகில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அந்த செய்தியை நம்ப வேண்டாம் என மறுப்பு தெரிவித்து கவிதாலயா நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Kavithalaya clarifies KBalachanders house office auction

இதோ அந்த அறிக்கை…

kb home auction

ராஜ்குமார் இயக்கத்தில் ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்

ராஜ்குமார் இயக்கத்தில் ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cheran next project Rajavukku Check Directed by Rajkumarநடிப்பு இயக்கம் என பிஸியாக இருந்த சேரன் சமீபகாலமாக நடிப்பு துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜெயம் ரவி நடித்த மழை படத்தை இயக்கியவர் ராஜ்குமார்.

அவர் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கு ராஜாவுக்கு செக் என தலைப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில்தான் சேரன் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இது ஒரு த்ரில்லர் படம் என கூறப்பட்டாலும் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவை சொல்லும் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Cheran next project Rajavukku Check Directed by Rajkumar

விஜய் ரிலீல்தான் செய்தார்; கமல் ரியலாகவே செய்துவிட்டார்

விஜய் ரிலீல்தான் செய்தார்; கமல் ரியலாகவே செய்துவிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal at Harvard and Vijay in Mersal have connectionமெர்சல் படத்தின் ஆரம்ப காட்சியில் வேஷ்டி கட்டிக் கொண்டு விஜய் வருவார்.

ஆனால் அந்த ஏர்போர்ட்டில் இருக்கும் அதிகாரிகள் அவர் கட்டியிருக்கும் வேஷ்டியை பார்த்து பலரும் கிண்டல் செய்வார்கள்.

மேலும் ஒரு பேட்டிக்காக அவர் வெளிநாடு சென்றிருப்பார்.

அவர் மெர்சல் என்ற படத்தில் விஜய் ரீலீல் செய்ததை இன்று கமல்ஹாசன் ரியாலாகவே செய்து காட்டிவிட்டார்.

அமெரிக்கா நாட்டில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசி வருகிறார்.

இன்று பிரபலமான ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலும் உரையாற்ற சென்றிருந்தார்.

அப்போது தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal at Harvard and Vijay in Mersal have connection

kamal and vijay in dhothi

 

ஆன்மிக அரசியல் அப்டேட்ஸ்: உளவுத்துறைக்கே ரஜினி கொடுத்த ஷாக்

ஆன்மிக அரசியல் அப்டேட்ஸ்: உளவுத்துறைக்கே ரஜினி கொடுத்த ஷாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth political entry news updatesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ஆன்மிக அரசியல் பணிகளை ஆரம்பித்துவிட்டார்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் தன் காவலர்களை நியமித்து வருகிறார்.

மேலும் ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்படத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் நடவடிக்கைகளை உளவுத்துறை கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாம்.

இதனால் தன் ஆலோசனை இடத்தை மாற்ற முடிவு செய்த சூப்பர் ஸ்டார் ஏதாவது ஒரு காரில் சம்பந்தப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு, காரிலேயே ஆலோசனையை முடித்து விடுகிறாராம்.

மேலும் இதற்காக அவர் பல கார்களை பயன்படுத்துகிறாராம். ஒரே காரில் பயணிக்காமல் சிறிது நேரம் ஒரு காரிலும் அதன் பின்னர் மற்றொரு காரிலும் பயணிக்கிறாராம்.

இவரின் இந்த செயல் உளவுத்துறைக்கே பெரும் ஷாக்காக அமைந்துள்ளதாம்.

Rajinikanth political entry news updates

More Articles
Follows