BREAKING தமிழக அரசியலின் மையமாக மீண்டும் போயஸ் கார்டன்.? ரஜினி சூப்பர் பதில்

BREAKING தமிழக அரசியலின் மையமாக மீண்டும் போயஸ் கார்டன்.? ரஜினி சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis super reply Will Poes garden became Political centre of TN againதமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்த் தன் பைரவி படம் மூலம் ஹீரோவாக உயர்த்தியவர் கலைஞானம்.

அவருக்கான பாராட்டு விழா தற்போது சென்னையில் நடைபெறவுள்ளது.

அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் செல்லும்போது சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன்.

காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை மதிப்பிற்குரிய சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனையடுத்து வருகிற சித்திரை 1ல் கட்சி பெயர் அறிவிக்கப்படுமா? என்று கேட்டதற்கு.. விரைவில் தெரிவிப்பேன் என்றார்.

அதனையடுத்து போயஸ் கார்டன் மீண்டும் அரசியல் களத்தின் மையமாகுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள்” என சூப்பர் ஸ்டார் நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்.

Rajinis super reply Will Poes garden became Political center of TN again

உசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா

உசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)சுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு (11-08) பனை விதைகளை நட்டதோடு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

பொதுவாக பிறந்த தினத்தில் மரக்கன்றுகளை நடுவது அனைவராலும் அறிந்த விசயமே, ஆனால் பனைமரத்தின் பயன்கள் பலருக்கு தெரியாது அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டுபோன பிறகும் கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது. அதனை காக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் நடிகர் சௌந்தர்ராஜா தனது மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு பனை விதைகளை நட்டார்.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினுபாலு, ரோட்டரி சங்கசெயலாளர் பொன்ரமேஸ், லையன்ஸ் கிளப் பிரேம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் மற்றும் 58 கிராம கால்வாய் சங்கத்தினர், மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளை சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் பெண் குழந்தைகள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தர்ராஜா பேசுகையில், எனது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை நட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல் பசுமை ஆர்வலர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் பனை விதைகளை நட உள்ளோம். ஒவ்வொருவரும் தங்களது ஊரில் உள்ள கண்மாய் குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரி சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் அதனை முறையாக பராமரிக்கவும் வேண்டும். இளைஞர்கள் இதனை ஆர்வத்தோடு செய்ய வேண்டும். நான் இந்த பனை மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல், இதனை பராமரிப்பதை சவாலாக எடுத்துள்ளேன். இந்த கண்மாயை சுத்திகரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

56000 திரைகளில் செப்டம்பர் 6ஆம் தேதி ரஜினியின் 2.0 ரிலீஸ்

56000 திரைகளில் செப்டம்பர் 6ஆம் தேதி ரஜினியின் 2.0 ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய்குமார் ஆகியோரது நடிப்பில் உருவான 2.0 படம் கடந்தாண்டு 2018ல் வெளியானது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்தை ஷங்கர் இயக்க, ஏஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் இந்தியாவில் முதலுக்கு மோசமில்லாத நல்ல வசூலை பெற்றது.

இந்த நிலையில் சீனாவில் படத்தை வெளியிட்டு, பெரிய லாபம் ஈட்ட திட்டமிட்டனர்.

கடந்த மே மாதம் சீனாவில் வெளியிட இருந்த நிலையில் ‘தி லயன் கிங்’ படம் வெளியானதால் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது வருகிற செப்டம்பர் 6ம் தேதி படத்தை வெளியிடஉள்ளனர்.

சீனாவில் மட்டும் மொத்தமாக 56000 (48000 3டி திரைகள்) திரைகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பிகில் படக்குழுவினருக்கு தங்க மோதிரம் பரிசளித்த தளபதி

பிகில் படக்குழுவினருக்கு தங்க மோதிரம் பரிசளித்த தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)ஏஜிஎஸ், அட்லி, விஜய், ரஹ்மான் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தன் காட்சிகளை முடித்துவிட்ட விஜய் படக்குழுவினர் 400 பேருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வருடம் தீபாவளி வெளியீடாக பிகில் வரவுள்ளது.

ரஜினி வந்தா நல்லாயிருக்கும்..; காத்திருக்கும் சைரா படக்குழு

ரஜினி வந்தா நல்லாயிருக்கும்..; காத்திருக்கும் சைரா படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட நாட்களுக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள படம் சைரா.

சுதந்திரப் போராட்ட வீரரான சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சைரா-வாக சிரஞ்சீவி நடித்துள்ளார்.

இவருடன் நயன்தாரா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, சுதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ. 250 கோடியாகும்.

அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜட் படம் என்பதால் தெலுங்கை தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தியிலும் வெளியிட உள்ளனர்.

எனவே தமிழ் பதிப்பின் அறிமுக விழாவை சென்னையிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டால் படத்திற்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என படக்குழு காத்திருக்கிறதாம்.

மாநாடு படத்திலிருந்து நீக்கியதால் 120 கோடியில் சிம்புவின் புதிய படம்

மாநாடு படத்திலிருந்து நீக்கியதால் 120 கோடியில் சிம்புவின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)சிம்பு நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என மாநாடு படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது.

இது அரசியல் படம் என்பதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளிலும் நடைபெற்றது.

ஆனால் சிம்பு செய்த பிரச்சினைகளால் அவரை படத்திலிருந்து நீக்குவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார் சுரேஷ் காமாட்சி.

மேலும் புதிய ஹீரோ ஒருவர் மாநாடு படத்தில் நடிப்பார் என கூறினார்.

இது குறித்து சிம்பு எதையும் தெரிவிக்கவில்லை,

இந்த நிலையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பாக ரூ. 120 கோடியில் புதிய படத்தை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்திற்கு மகா மாநாடு எனத் தலைப்பு வைத்துள்ளதாக சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows