தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சற்றுமுன் நடைபெற்றது.
இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…
“முரசொலி பத்திரிகை வைத்திருந்தால் திமுகக்காரர் என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்.
சோ சார் அவர்கள் ஒரு ஜீனியஸ். அவர்கள் அனுபவத்தாலும் படிப்பாலும் ஜீனியஸ் வருவதில்லை. அவர்கள் பிறக்கும்போதே
ஜீனியஸ்காத்தான் பிறப்பார்கள். அவர்கள் தங்கள் அடையாளத்தை இந்த சமுதாயத்தில் காட்ட சில காலம் ஆகும்.
அவர் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கவில்லை. துக்ளக் என்ற இனத்தை உருவாக்கினார்.
சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர் இருந்தனர்.
அதில் ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் பக்தவச்சலம் அவர்கள்.
இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தபோது அதை எதிர்த்து துக்ளக் பத்திரிகையில் கருப்பு அட்டை படம் போட்டவர் சோ.
அதன் மூலம் அவர் இந்தியளவிலும் பிரபலம் ஆனார்.
சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி” என்றார்.
Rajinikanth slams DMK Murasoli at tughlaq 50th year event