தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 25 வருடங்களாக ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர்.
கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி… இப்போ இல்ல… எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
அந்த அறிவிப்பு்வெளியான அன்றே, ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் ஒன்றுதிரண்டு கோஷங்களை எழுப்பி ரஜினியை அரசியலுக்கு அழைத்தனர்.
மேலும் தமிழகமெங்கும் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நேற்று ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர்.
இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டனர்..
ஆனாலும் அவர்களின் எதிர்ப்பை மீறி 12,000க்கும் மேற்ப்பட்ட ரஜினி ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் கூடினர்.
வா தலைவா வா… என அரசியலுக்கு ரஜினியை அழைத்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் சற்றுமுன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி.
அதில்…
“நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மன்ற நிர்வாகிகளும், மன்றப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர்.
கட்டுப்பாடுடன், கண்ணியத்துடன் நடந்த போராட்டத்திற்கு பாராட்டுகள். ஆனால் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.
தலைமையின் உத்தரவை மதித்து போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நன்றி. நான் என் முடிவை கூறி விட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
வாழ்க தமிழக மக்கள்…
வளர்க தமிழ்நாடு…
ஜெய்ஹிந்த்”
” என குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
‘Rajinikanth latest statement on joining politics