தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆண்டு தமிழ்நாட்டை கஜா புயல் கடுமையாக தாக்கியது.
இதில் காரைக்கால், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், வேதாரண்யம் உள்ளிட்ட ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்தனர்.
இதனையடுத்து கஜா புயலால் வீடுகளை இழந்த 10 குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என ரஜினி அறிவித்திருந்தார்.
அதன்படி அந்த வரிசையில் கோடியக்கரையில் நான்கு வீடுகளும், தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும் கட்டப்பட்டன.
இந்த நிலையில் வீடு கட்டும் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தை ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து சாவிகளைக் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து ட்விட்டரில் #மக்கள்_நலனில்_ரஜினி மற்றும் #RMMinGajaAffectedAreas என்ற இரு ஹேஸ்டாக் உருவாக்கி ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Rajini gave 10 house to Gaja flood affected peoples