BREAKING சூழல் ஏற்பட்டால் நிச்சயம் கூட்டணி; ரஜினி & கமல் ஓபன் டாக்

BREAKING சூழல் ஏற்பட்டால் நிச்சயம் கூட்டணி; ரஜினி & கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal open talk about their alliance in Politics இன்று சென்னை விமான நிலையம் மிகுந்த பரபரப்பானது. அதற்கு முக்கிய காரணம் கமல் மற்றும் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தனர்.

மாலை 6.30 மணியளவில் சென்னை திரும்பினார் கமல். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

தமிழகத்தின் மேம்பாட்டிற்காக ரஜினியும் நானும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். என்றார்.

அதனையடுத்து மாலை 7.30 மணியளவில் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அவரும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது… “தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்.

ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதில்கூற விரும்பவில்லை” என்றார்.

அதிசயத்தால் எடப்பாடியார் முதல்வர் ஆனதாக ரஜினி கூறியிருந்தார். அதற்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini and Kamal open talk about their alliance in Politics

யூ ட்யூப் டிரெண்டிங்கில் தனுஷு ராசி நேயர்கள்

யூ ட்யூப் டிரெண்டிங்கில் தனுஷு ராசி நேயர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish kalyanஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே” இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி மில்லியன் பார்வைகளை கடந்து Youtube தளத்தில் சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தின் பத்திரைகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது…

இந்தப்படம் சுரேஷ் சாரால் தான் ஆரம்பித்தது. அவர் தான் தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தினார். கதை கேட்டு பிடித்து இந்தப்படத்தை கோகுலம் மூவிஸ் தயாரித்துள்ளார்கள். ராசியை நம்பும் ஒரு ஹீரோ அதற்கேற்ற ஹீரோயினை கலயாணம் செய்ய தேடுவதுதான் கதை. காமெடியாக குடும்பத்தோடு எல்லோரும் பார்க்ககூடிய படமாக இருக்கும். இது நடிகர் தனுஷை மையமாக வைத்து எழுதவில்லை. முதலிலேயே ஹரீஷைத்தான் அணுகினோம். எதிர்வீட்டுப் பையன் மாதிரி ஒரு ஆள் தான் ஹரீஷ் அவர் அந்தக்கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.

படத்தின் டிரெய்லரை பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது. நாயகியின் பெயர் கே ஆர் விஜயா ஒரு மாற்றத்திற்க்காக தான் அந்தப்பெயரை வைத்தோம். படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். டிகாங்கனா, ரெபா மோனிகா இருவரும் நாயகி ரோல் சூப்பராக பண்ணியிருக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் 5 பாடலகள் படத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருக்கும். படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. கூடிய விரைவில் திரையில் சந்திக்கிறோம் என்றார்.

யுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம்!

யுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya Maliயுவன் சங்கர் ராஜாவின் யு-1 ரெக்கார்ட்ஸ், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை சரியான முறையில் ஊக்குவித்து வாய்ப்பளிப்பதில் முதலிடத்தில் இருக்கிறது. பிரியா மாலி இசையமைத்துப் பாடிய ‘துளி தீ’ ஆல்பம், யு டியூப் சேனல் மற்றும் இதர இசைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பன்முகத் திறமை மிக்க பிரியா மாலி பாடலுக்கு இசையமைத்து பாடியதுடன் நடித்திருப்பது, வெகுவான பாராட்டுதல்களை குவித்து வருகிறது. செவிக்கினிய குரல் வளத்துடன், கண்களைக் கவரும் விதத்தில் தோன்றியதற்காக கிடைத்து வரும் அபரிமிதமான பாராட்டு மழையால் பிரியா மாலி அகம் மகிழ்ந்து வருகிறார்.
இது குறித்து விவரித்த பிரியா மாலி, ஆத்மார்ந்தமான அன்பைக் கொண்டாடுவது என்பதுதான் இந்த இசை ஆல்பத்தின் அடிப்படை. எளிமையாகவும் அமைதியாகவும் நான் கட்டமைக்க நினைத்த இந்த ஆல்பத்தை தொழில் நுட்பக் குழுவினர், சிறந்த பின்னணிக் காட்சிகளுடன் கண்கவரும் விதத்தில் உருவாக்கியிருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா சார் என் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காவும், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு இந்த ஆல்பத்தை அர்பணிக்கிறேன். இந்த ஆல்பம் உருவாக எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும், குறிப்பாக பாடலை எழுதிய எனது தந்தை வி.ஆர்.மாலி அவர்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

புதிய திறமைசாலிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இசைத் தொழிலை செதுக்கி வருகிறது யு-1 ரெக்கார்ட்ஸ். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பாடல்களைத் தவிர, பிற திரைப்படப் பாடல்களையும், சுயாதீன பாடல்களையும் யு-1 நிறுவனம் வெளியிட இருக்கிறது.

Link : https://youtu.be/x90E35vJHYo

மலையடிவாரத்தில் காதல் செய்யும் ராம்சந்த் & அன்ஷிதா ஜோடி

மலையடிவாரத்தில் காதல் செய்யும் ராம்சந்த் & அன்ஷிதா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ramchand and Anshitha team up for Thirumaayiபிரபல இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பாடம் பயின்றவர் சாலமோன் கண்ணன் இவர் கதை- திரைக்கதை – வசனம் – எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பெயர் தான் ” திருமாயி”.

இவர், இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்தின் கதையை பற்றி கூறியதாவது, ” மலையடிவாரத்திலிருந்து மலைமேல் வாழும் மக்களுக்கான பொருட்களை கழுதை மேல் ஏற்றிக் கொண்டு பாட்டுப் பாடியபடி கொண்டு போய் கொடுத்து வரும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் இந்தப் படத்தின் நாயகன் நாயகி.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டு முழுவதும் வேறு பட்டு சொல்லப்பட்டுள்ள காதல் கதை இது.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படமிது.” என்று கூறினார்.

மேலும் அவர், “இதன் படப்பிடிப்பு தேனி, அல்லிநகரம், கும்பக்கரை, பூதிபுரம், காமக் காபட்டி, சின்னமனூர் வருசநாடு’ வடுகபட்டி, அன்னஞ்சி, கொடைக்கானல், சீலையம்பட்டி, இடங்களில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது” என்ற கூடுதல் தகவலையும் நமக்கு சொன்னார்”

கதையின் நாயகனாக ராம்சந்த் அறிமுகமாக அவருக்கு ஜோடியாக மலையாள பட உலகை சார்ந்த அன்ஷிதா நடித்துள்ளார். கொடூர வில்லனாக கே.எஸ். மாசாணமுத்து அதிமுகமாகிறார்.

மேலும் இதில் ராணி, பரவை சுந்தராம்பாள், நம்பியார் ராஜா, மொட்டைவிஜி, குதிரை முருகன், முரளி கோவிந்த்ராக், முத்துக் காளை, நெல்லை சிவா, கார்த்தி, வீரமணி, பெங்களூர் அலிஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

குமரன்.ஜி.ஒளிப்பதிவையும், சாய் சுரேஷ் படத்தொகுப்பையும், எழுமலை ‘ சுப்ரமணி, மகி, காலோமன்கண்னன் நால்வரும் பாடல்களையும், இசைவாணன் பாடலுக்கான இசையையும், எஸ்.பி.பூபதி பின்னனி இசையையும், ஆர்.கே.முரளி சண்டைப் பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

கே.எஸ். மாசாணமுத்து.
திருப்பூர் சிவகுமார்,
சோசன் சஞ்சய்,
அன்னஞ்சி கார்த்தி நால்வரும் சாக் ஷினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ” திருமாயி ” படத்தை தயாரிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் ஒரு பாடல் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார் சாலோமோன் கண்ணன்.

Ramchand and Anshitha team up for Thirumaayi

Ramchand and Anshitha team up for Thirumaayi

ஆணவக்கொலை பற்றிய கதை; ஒற்றை எழுத்தில் படத்தலைப்பு ‘சா’

ஆணவக்கொலை பற்றிய கதை; ஒற்றை எழுத்தில் படத்தலைப்பு ‘சா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aanava Kollai movie with Single letter titled Sa “தா” ” உ” “சே” “நீ” “ரா” “ஏ” ஆகிய படங்கள் வரிசையில் அடுத்து “சா” என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் புதிய படம் உருவாகிறது.

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் அனு கதையின் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் இதில் சஞ்சீவ், தாமோதரன், கிங்காங், போண்டா மணி. வேல்சிவா மற்றும் அருண்ஜீவா ஆகியோர் நடிக்கின்றனர்.

அம்மா, அப்பா, வீடு, உறவு, சாதி, மதங்களை தாண்டி காதலித்து மணம் முடிக்கும் இளம் தம்பதிகளை ஆணவக்கொலை செய்யும் சம்பவங்களை மையமாக வைத்து வேறொரு கோணத்தில் சொல்லும் படம் தான் “சா” என்கிறார் புதுமுக இயக்குனரான எஸ்.இ.சபரி.

இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து டைரக்ட் செய்கிறார்.

அஸ்வின் பாடலையும் சந்திரன் சாமி கேமராவையும், புவனேஷ் படத்தொகுப்பையும், நிஷான்லி இசையையும் கவனிக்கின்றனர்.

கோவை, மேட்டுப்பாளையம், கர்நாடகாவில் உள்ள மடிக்கேரி பகுதிகளில் உள்ள அழகிய இடங்களில் படத்தின் உச்சகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

Aanava Kollai movie with Single letter titled Sa

4IITEENS அவர்களின் ஆற்றல்மிகு 50 புதிய வளாகம் துவக்கம்

4IITEENS அவர்களின் ஆற்றல்மிகு 50 புதிய வளாகம் துவக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4IITEENS announces Aattral Migu 50 at the inauguration of their new campusமுன்னணி கல்வி நிறுவனம் 4IITEENS நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் தேதி கில்பாக் கார்டன் சாலையில் தங்கள் புதிய வளாகத்தை திறந்துள்ளது. இந்த பிரமாண்டமான நிகழ்வில், ஆற்றல்மிகு 50 ஐ அறிமுகப்படுத்துவதும் இடம்பெறும், இந்த நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் 50 திறமையான மாணவர்களுக்கு நீட் மற்றும் ஐ.ஐ.டி தேர்வுகளுக்கு 100% இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த மெகா நிகழ்வை தமிழக அரசின் மீன்வள, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சராக தற்போது பதவியேற்றுள்ள நமது முதன்மை விருந்தினர் ஸ்ரீ டி.ஜெயக்குமார் தொடங்கி வைக்க உள்ளார்.

அவருடன் சிறப்பு விருந்தினராக திரு வரப்பிரசாத ராவ் வேலகபள்ளி (ஐ.ஏ.எஸ்.), சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான (திருப்பதி), ஆந்திர அரசு. விருந்தினராக டி.ஆர். ஏ.பி.ஜே கல்வி ஆலோசனை நிர்வாக பங்குதாரர் டாக்டர் அஜீத் பிரசாத் ஜெயின் கலந்து கொள்ள உள்ளார். எங்கள் நலம் விரும்பி பி.வி.ஆர் & நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு அன்ஷுமன் ராய் இந்த விழாவில் அங்கம் வகிக்கிறார்.

4IITEENS ஒரு முன்னோடி நீட் மற்றும் ஐ.ஐ.டி பயிற்சி நிறுவனம் மற்றும் ஐ.ஐ.டி ஜே.இ.இ.யில் பல முன்னணி தரவரிசைகளை உருவாக்கியுள்ளது. பயிற்சியளிப்பதில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றது.

இந்த கடுமையான தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடமிருந்து சிறந்தவற்றை வெளிப்படுத்துகிறது.

அறிவியல் மற்றும் கணித பேராசிரியர்களான நடராஜன் பொன்னுசாமி, சமரேஷ் மொண்டல் மற்றும் சுப்பா ராவ் ஆகியவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

4IITEENS, நீட் மற்றும் ஐ.ஐ.டி தேர்வுகளுக்கு ஏற்றவாறு பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்துகிறது, இதனால் அவர்கள் கனவுகளை அடைவார்கள்.

இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள புத்திசாலித்தனமான மாணவர்களுக்கு ஒரு மாதிரியை உருவாக்குகிறது.

தேர்வு நடத்தியபின், பிரதானமாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் எங்கள் மேம்பட்ட பயிற்சித் திட்டத்தின் மூலம் எங்கள் வழக்கமான மாணவர்களுடன் சேர்க்கப்படுகிறார்கள்.

இதனால் அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற சம வாய்ப்பு கிடைக்கும். 4IITEENS தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு 2 ஆண்டு விரிவான பயிற்சி, உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.

இந்த நிகழ்வில் 4IITEENS சில திறமையான மாணவர்களுக்கு ரொக்க வெகுமதிகளை வழங்கும், இதில் சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் முஹிந்தர் ராஜ் வெள்ளி பதக்கத்திற்கு ரூ .50,000, ரூ. 25,000, ஜெய் முர்ஹேகர் (INMO, INCHO), அருத்ராக்கு (NTSE) ரூ. 10,000, ரித்தேஷ்க்கு (NTSE) 10,000, நிகில்க்கு (Pre RMO and NTSE) ரூ .10,000, மற்றும் ஸ்ரேயா (CBSE) ரூ. 10,000.

4IITEENS announces Aattral Migu 50 at the inauguration of their new campus

4IITEENS announces Aattral Migu 50 at the inauguration of their new campus

 

More Articles
Follows