தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று சென்னை விமான நிலையம் மிகுந்த பரபரப்பானது. அதற்கு முக்கிய காரணம் கமல் மற்றும் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தனர்.
மாலை 6.30 மணியளவில் சென்னை திரும்பினார் கமல். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…
தமிழகத்தின் மேம்பாட்டிற்காக ரஜினியும் நானும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். என்றார்.
அதனையடுத்து மாலை 7.30 மணியளவில் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அவரும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது… “தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்.
ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதில்கூற விரும்பவில்லை” என்றார்.
அதிசயத்தால் எடப்பாடியார் முதல்வர் ஆனதாக ரஜினி கூறியிருந்தார். அதற்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini and Kamal open talk about their alliance in Politics