தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் என் தனா இயக்கியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’.
இந்த படத்தை தன் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக மணிரத்னம் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு, சரத்குமார், ராதிகா, வேலையில்லா பட்டாதாரி படத்தில் நடித்த அமிதாஷ் பிரேதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சித் ஸ்ரீராம்.
இந்த பட டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஆண்டாள் பள்ளியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் மேடையேறி பேசினார்.
சரத்குமார் பேசியதாவது…
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசில் நடிப்பது சந்தோஷம். அவரது தயாரிப்பில் நடித்தால் சிறந்த கலைஞருக்கான அடையாளம் கிடைத்துவிடும்.
ராதிகா பேசியதாவது…
மணிரத்னத்தின் 2வது படத்தில் என்னை பரதநாட்டிய கலைஞராக நடிக்க வைத்தார் மணி. அப்போது அழுதே விட்டார்.
அதன்பின்னர் நிறைய படங்களில் என்னை நினைத்து தான் கேரக்டரை வடிவமைப்பார். ஆனால் என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு அங்க அங்க 2 இன்ச் கம்மியாக இருப்பதால் அவரையே நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்துவிட்டார்.
இந்த படம் நன்றாக வந்துள்ளது. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
நான் பார்த்தபோது விக்ரம் பிரபு குட்டி பையன். என் வயதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. அன்று அவரது அப்பாவுடன் நடித்துள்ளேன். இன்று இவருடன் நடித்துவிட்டேன்” என பேசினார் ராதிகா.
இந்த படத்தை பிப்ரவரி 7-ம் தேதி திரைக்கு கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
Radhika talks about Aishwarya rai at Vaanam Kottattum event