கடனை திருப்பி தராத கமல்..; ஞானவேல் ராஜா பகிரங்க புகார்

கடனை திருப்பி தராத கமல்..; ஞானவேல் ராஜா பகிரங்க புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Gnanavel Raja complaints against Kamalhaasanநடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்த படம் உத்தம வில்லன் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்தார். அந்த சமயத்தில் இப்படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஞானவேல் ராஜாவிடம் இது தொடர்பாக தாங்கள் எதுவும் பேசவில்லை எனவும் லிங்குசாமியிடமே அப்போது அனுகியதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Producer Gnanavel Raja complaints against Kamalhaasan

என் பிணத்தை ரஜினி-கமல் எட்டி பாக்குறாங்க… நடிகை ரேகா வேதனை

என் பிணத்தை ரஜினி-கமல் எட்டி பாக்குறாங்க… நடிகை ரேகா வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Rekha emotional speech on 100 percent Kaadhal press meetஎம்.எம். சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே ஜோடியாக நடித்துள்ள படம் ‛100% காதல்’.

இப்படம் அக்டோபர் 4ஆம் தேதி அசுரன் படத்துடன் வெளியாகவுள்ளது.

இதில் ஜிவி. பிரகாஷின் அம்மாவாக நடிகை ரேகா நடித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை ரேகா பேசியதாவது…

‛உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனு, கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனு இருந்தால் வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’ என நடிகர் விஜய் சொன்னார்.

அதுபோல் தான் என் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கிறது.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு யூ-டியூப் தளத்தில் நான் இறந்து போய் விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

என்னை புதைத்து அருகில் ரஜினி, கமல் எட்டி பார்ப்பது போன்றும் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்கள். நான் உயிரோடு இருக்கும் போதே எனக்கு பாடை கட்டி, கற்பூரம் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.

கலைஞர் கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே பல முறை அவர் மரணமடைந்துவிட்டதாக செய்திகளை சிலர் வெளியிட்டனர்.

சினிமா பிரபலங்களான கே.ஆர்.விஜயா, மோகன் போன்றவர்களை இப்படி சாகடித்து, அதை யு-டியூப் மூலம் பரபரப்பை உண்டு பண்ணி பணம் சம்பாதிக்கிறார்கள்.

இது நன்றாகவா இருக்கிறது. இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற யு-டியூப் தளங்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். என வேதனையுடன் பேசினார் ரேகா.

இறுதியில் நான் ஜம்முன்னு இருக்கேனா.. சொல்லுங்க.. நான் ஜம்முன்னு தானே இருக்கேன் என பேசி விடைபெற்றார்.

Actress Rekha emotional speech on 100 percent Kaadhal press meet

தீபாவளிக்கு விஜய்; பொங்கலுக்கு ரஜினி… மோத ரெடியான கார்த்தி

தீபாவளிக்கு விஜய்; பொங்கலுக்கு ரஜினி… மோத ரெடியான கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthi movies clash with Darbar and Bigilலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி.

இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் விஜய் நடித்துள்ள பிகில் படமும் திரைக்கு வருகிறது.

இதனையடுத்து ஜீத்துஜோசப் இயக்கும் படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தலைப்பு இன்னும் வெளியாகவில்லை.

இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இதே நாளில் தான் ரஜினி நடித்துள்ள தர்பார் படமும் திரைக்கு வருகிறது.

தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

Actor Karthi movies clash with Darbar and Bigil

குட் டச் பேட் டச்-சை பாடமாக வைக்கனும்..; அரசுக்கு ஆர்.வி. உதயகுமார் வேண்டுகோள்

குட் டச் பேட் டச்-சை பாடமாக வைக்கனும்..; அரசுக்கு ஆர்.வி. உதயகுமார் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Good Touch and Bad Touch should be a lesson for kids says RV Udhayakumar12 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்லெட் குறும்படம் படமல்ல பாடம் என்று செய்தி மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் கவிதா தயாரித்திருக்கும் குறும்படம் சாக்லேட். இதில் நட்டி என்கிற நட்ராஜ், காயத்ரி,தேஜஸ்வினி, தீக்ஷளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் லாவண்யா நான்சி இயக்கியிருக்கிறார். பாடல்களை மீரான் எழுத, பவதாரிணி பாடியிருக்கிறார். குறும்படம் ஒன்றிற்கு பவதாரிணி பின்னணி பாடியிருப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குறும்படத்தினை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வு ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது.

அவ்விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு, விருகம்பாக்கம் தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் விருகை வி என் ரவி, விளாத்திகுளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஐசரி கே கணேஷ், ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சாய் தன்ஷிகா, இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான கவிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர்,“இந்த குறும்படத்தை நான் பார்த்துவிட்டேன்.

சென்னையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பின்னணியாக வைத்து பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இது படமல்ல பாடமாக எடுத்துக கொள்ளவேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் இந்த குறும்படத்தை அவசியம் பார்க்கவேண்டும்.

படத்தில் நடித்த அந்த குழந்தையின் நடிப்பை நான் பாராட்டுகிறேன். இதனை உருவாக்கிய படக்குழுவினருக்கும், இதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் சங்க நிர்வாகியும் இயக்குநருமான ஆர் வி உதயகுமார் பேசுகையில்,

“ தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் வகையில்,ஆன்லைன் மூலம் மட்டும் தான் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படவேண்டும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக தமிழ் திரைப்பட துறையினர் அரசிற்கு நன்றி தெரிவித்துக கொண்டிருக்கிறார்கள். சாக்லேட் குறும்படம் படமல்ல. பாடம் என்று அமைச்சர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.

இந்த குறும்படம் பேசும் விசயமான குட் டச் பேட் டச்சை எல் கே ஜி, மற்றும் யூ கே ஜி குழந்தைகளுக்கான பாடதிட்டத்தில் சேர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிகிறேன்.

அரசு இதில் ஆவணசெய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பிறகு குழந்தைக்கு தெரிந்துவிடும். ஒரு பெண் குழந்தையை ஒழுக்கமாக வளர்த்தால் அது பெண்களுக்கு மிகப்பெரும் பெருமையை அளிக்கும். ஒரு ஆண் குழந்தையை ஒழுக்கமாக வளர்த்தால்.. அது மனித சமுதாயத்திற்கே பெருமை. இந்த ஒழுக்கம் எங்கே விதைக்கப்படுகிறது?

பள்ளியில் தான் என்பதால் இதனை பாடமாக வைத்துவிட்டால் அனைத்து குழந்தைகளுக்கும் எங்கே தொட்டால் நல்லது என்பதும், எங்கே தொட்டால் கெட்டது என்பதும் தெரிந்துவிடும். இது போன்ற ஒரு குறும்படத்தை தயாரித்த கவிதா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகர் நட்ராஜ் பேசுகையில்,“ ஆண் பெண் என இருவருக்கும் பாலியல் பற்றிய புரிதல் தேவை. பெண்கள் பூப்பெய்திய பிறகு அவர்கள் வீட்டு பெரியவர்கள் சில விசயங்களில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள்.

ஆனால் ஆண்களுக்கு இது போன்ற வழிகாட்டிகள் அமைவது கடினம். இயக்குநர் ஆர் வி உதயகுமார் வலியுறுத்தியதைப் போல் பாலியல் பற்றிய புரிதலை பள்ளியில் பாடமாக வைத்துவிட்டால் ஆண் குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும்.இந்த குறும்பட குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள். ” என்றார்.

நடிகை சாய் தன்ஷிகா பேசுகையில்,

“பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து இது போன்ற சமூகத்திற்கு தேவையான குறும்படத்தை உருவாக்கியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த குறும்படத்தின் தயாரிப்பாளர் கவிதா ஊடகவியலாளர் என்பதைக் கடந்து சிறந்த சமூக சேவகி, சமூக வலைதளத்தில் செல்ஃபியை பதிவிடுவதை விட சமூகத்திற்கு தேவையான விசயத்தை பதிவிடலாம் என்பதற்காக என்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் குட் டச் பேட் டக் குறித்து யூட்யூபில் பதிவிடப்பட்டிருந்த ஏராளமான வீடியோவில் பெற்றோர்கள் சொல்லிய சில வீடியோக்களை எடுத்து பதிவிட்டிருக்கிறேன்.

பொதுவாக தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் முழுமையாக கவனிப்பதில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் இந்த குறும்படம் பெற்றோர்களையும் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து சாக்லேட் குறும்படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டார். வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் கவிதா நன்றி தெரிவித்தார்.

Good Touch and Bad Touch should be a lesson for kids says RV Udhayakumar

Good Touch and Bad Touch should be a lesson for kids says RV Udhayakumar

சிவகார்த்திகேயனின் குடும்ப படத்துடன் மோதும் போதை படம் ‘கோலா’

சிவகார்த்திகேயனின் குடும்ப படத்துடன் மோதும் போதை படம் ‘கோலா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kola movie clash with Sivakarthikeyans Namma veetu Pillaiபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

இப்படத்தில் சிவாவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் நாளை செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. இத்துடன் போதை வகைகளை சொல்லும் கோலா என்ற படமும் வெளியாகிறது. அதன் விவரம் வருமாறு…

மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் “கோலா“.

மோத்தி.பா இயக்கியுள்ள இப்படத்தில் விக்கி ஆத்தியா, வைசாக் இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக ஹரிணி நடித்துள்ளார்.

இவர்களுடன் மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ், சந்தான லக்ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமிநாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ், அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி மோத்தி.பா ஒரு பேட்டியில் கூறியதாவது:-

போதை தான் இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

அதில் பல வகை உண்டு பணக்கார போதை, அதிகார போதை, பெண் போதை, மது போதை, கடைசியாக புகழ் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ் போதைக்கு ஆசைப்படுகிறான்.

விளக்கின் வெளிச்சத்தை தேடிச்சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். இவ்வாறு அவர் கூறினார்.

ஒளிப்பதிவு – கமில் ஜே.அலெக்ஸ்; இசை – கண்மணி ராஜா; பின்னணி இசை – எஸ்.எம்.பிரஷாந்த்; பாடல்கள் – காதல் மதி, டாக்டர் கிருதியா, மோத்தி.பா; கலை – ராம்ஜி; எடிட்டிங் – தீபக்; நடனம் – ராதிகா; தயாரிப்பு மேற்பார்வை – லினா மோத்தி, எம்.எல்.பிஸ்மி; தயாரிப்பு – மோத்தி முகமது; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோத்தி.பா.

Kola movie clash with Sivakarthikeyans Namma veetu Pillai

kola movie poster

‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் நடித்தது குறித்து பிரியா மணி பேட்டி

‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் நடித்தது குறித்து பிரியா மணி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Priya Maniமறைந்த பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா என்ற ஜாம்பவான் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா மணி, தொடர்ந்து பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்ட ஜாம்பவான்களின் படங்களில் நடித்ததோடு, அமீரின் ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். நடிகைகள் பலர் இருந்தாலும், நடிக்க கூடிய நடிகைகள் என்று கேட்டால், டக்கென்று நினைவுக்கு வரும் நடிகைகளில் பிரியா மணி முக்கியமானவராக இருக்கிறார். தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டிய பிரியா மணி, தற்போது இணைய தொடர் உலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

தற்போது இந்திய ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படும் இணைய தொடர்களில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வரும் நிலையில், ‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) என்ற வெப் சீரிஸ் மூலம் பிரியா மணி இணைய தொடரில் அறிமுகமாகிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி இதோ,

திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நீங்கள் வெப் சீரிஸில் நடிக்க சம்மதித்தது ஏன்?

ஒரு வலைத்தொடரில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது நான் உணர்ந்த முதல் மற்றும் முக்கிய விஷயம், எந்த இரண்டாவது எண்ணங்களும் இல்லாமல் அதற்காக செல்ல வேண்டும் என்பது தான். அனைத்து துறையில் உள்ள நடிகர்களும் வலைத்தொடரில் நடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக பாலிவுட்டில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களும் வலைத்தொடரில் நடிக்கும் போது, நா. ஏன் நடிக்க கூடாது?. என்னிடம் முதல் முறையாக இயக்குநர் ராஜ் மற்றும் டி.கே கதை சொல்லும் போதே, நான் சுசித்ரா கதாபாத்திரத்தில் இறங்கிவிட்டேன். என்னுடைய கதாபாத்திரம் மட்டும் அல்ல, ‘தி ஃபேமிலி மேன்’ சீரிஸில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

உங்களுடன் நடித்த பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பயி பற்றி…?

மனோஜ் பாஜ்பயி சார் கதையின் நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் உளவுத்துறையில் பணியாற்றும் அவர், தனது நடுத்தர குடும்ப வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துவதற்காக பாடுபடுவார். சமகால சமுதாயத்தின் பணிபுரியும் பெண்களை பிரதிபலிக்கும் சுசித்ரா, வேலை மற்றும் குடும்பம் இரண்டிற்கும் சமமான இடத்தை கொடுக்க வேண்டும் என்று நினைப்பதோடு, ஸ்ரீகாந்த் தனது வேலையில் முழுமையான கவனம் செலுத்துவதாகவும், குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததாகவும் அவர் உணருவது இருவருக்கும் இடையிலான முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும், சந்தோஷமாக இருக்கும் இந்த குடும்பத்திற்கு இரு முனைகளில் இருந்தும் அழுத்தங்கள் வருகின்றன. அதையும் தாண்டி இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக நேசிக்கிறார்கள். இப்படி அழகான குடும்ப கதையோடு நகரும் இந்த வெப் சீரிஸில் பல திருப்பங்களும் நிறைந்திருக்கின்றன.

சினிமாவுக்கு, வெப் சீரிஸுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

திரைப்பட படப்பிடிப்புக்கும், வெப் சீரிஸ் படப்பிடிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஒரு நாளில் ஐந்து முதல் ஆறு காட்சிகளை படமாக்கி முடித்துவிடுகிறார்கள். இது ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்துடன், ’தி ஃபேமிலி மேன் சீசன் 2’ வுக்கான படப்பிடிப்பையும் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.

அமேசானில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸில் இந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான மலையாள நடிகர் நீரஜ் மாதவ், பாலிவுட்டின் சென்சேஷனல் நடிகர் குனால் பகத் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

More Articles
Follows