மீண்டும் ‘டிக் டாக்’..; சூர்யா – சிவகார்த்திகேயன் பட நாயகியின் அதிரடி அறிமுகம்.!

மீண்டும் ‘டிக் டாக்’..; சூர்யா – சிவகார்த்திகேயன் பட நாயகியின் அதிரடி அறிமுகம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tik Tok movieநெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’.

இதில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான ‘டான்’ படத்திலும் பிரியங்கா அருள் மோகனே நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பாண்டிராஜ் & சூர்யா இணையும் படத்திலும் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 படங்களும் இன்னும் ரிலீசாகவில்ரை.

அதற்குள் பிரியங்கா அருள் மோகனின் முதல் படம் தமிழில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்திற்கு ‘டிக் டாக்’ என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

மதன் & டீம் இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளனர்.

இந்தியாவில் ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பெயரில் படம் வருவது குறிப்பிடத்தக்கது.

Priyanka Mohan’s next film is titled Tik Tok

பர்ஸ்ட் ‘அண்ணாத்த’… நெக்ஸ்ட் அமெரிக்கா… லாஸ்ட் அரசியல்…; ரஜினி போடும் 3 ப்ளான்ஸ்

பர்ஸ்ட் ‘அண்ணாத்த’… நெக்ஸ்ட் அமெரிக்கா… லாஸ்ட் அரசியல்…; ரஜினி போடும் 3 ப்ளான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annatthe (2)ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’.

சிவா இயக்கி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

முதன்முறையாக ரஜினி படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு கடந்த டிசம்சர் 13-ந்தேதி இப்படம் சூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டது.

படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் உடனடியாக சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 29-ந்தேதி ரஜினியை நேரில் சந்தித்தார் இயக்குனர் சிவா.

மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்குவது குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.

அதன்படி, மார்ச் மாதம் முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஓகே சொல்லிவிட்டாராம் ரஜினி.

ஒரே மாதத்தில் தன் காட்சிகளை முடித்துக் கொடுத்து விட்டு பின்னர் தான் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கவிருக்கிறாராம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ள சமயத்தில் வீண் அரசியல் பிரச்னைகளை தவிர்க்க இந்த திட்டம் என கூறப்படுகிறது.

Super star Rajni’s Annaatthe shooting to resume soon?

கமல் படத்தை முடித்து விட்டு மீண்டும் விஜய் படத்தை இயக்கும் லோகேஷ்.?

கமல் படத்தை முடித்து விட்டு மீண்டும் விஜய் படத்தை இயக்கும் லோகேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay lokesh kanagaraj (2)விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’.

பொங்கலுக்கு இந்த படம் தியேட்டரில் வெளியாகி 15 நாட்களில் ஓடிடியில் ரிலீசானது.

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இப்படம் 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இப்படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்,

இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது சன் பிக்சர்ஸ்.

இதனையடுத்து தளபதி 66 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கவுள்ள ‘விக்ரம்’ படத்தை அடுத்து மீண்டும் விஜய் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ்.

Vijay and Lokesh Kanagaraj join for Thalapathy 66 ?

ஸ்பெயினில் க்ளைமாக்ஸ் பைட்..; ப்ளைட்டில் பறக்கும் ‘தல’ அஜித்..!

ஸ்பெயினில் க்ளைமாக்ஸ் பைட்..; ப்ளைட்டில் பறக்கும் ‘தல’ அஜித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai (1)அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’.

போனிகபூர் தயாரிக்க இதில் அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா என பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், ஸ்பெயினில் ஒரு ஸ்டைலிஷான பைக்கை வைத்து நடக்கும் சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த காட்சி தான் அப்படத்தின் க்ளைமாக்ஸ் பைட் என சொல்லப்படுகிறது.

எனவே அஜித்துடன் ‘வலிமை’ படக்குழு விரைவில் ஸ்பெயின் பறக்கிறது.

Thala Ajith to shoot high octane bike chase sequence in Spain for Valimai climax

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijayஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள்.

இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது…

மிக சமீபத்தில் தான் அருண் விஜய் அவர்கள் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக நடிப்பது குறித்து பெருமையாக பகிர்ந்திருந்தேன் இப்போது இதை சொன்னால் மிகவும் வழக்கமான ஒரு செய்தியாகிவிடக்கூடும். ஆனால் தமிழ் சினிமாவில் பல சாதானைகள் படைத்திருக்கும் மூத்த நடிகர் விஜய குமார் அவர்கள் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதிலும் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் மூலம் இணைவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் பங்குபெற சம்மதித்தற்கு, மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அருண் விஜய் போன்று விஜய் குமார் அவர்களுக்கு கதை சொல்வது அத்தனை எளிதாக இல்லை. அவரது கதாப்பாத்திரம் குறித்தும் படத்தில் அதற்குரிய முக்கியத்துவம் குறித்தும் அவருக்கு விளக்கி கூறினேன். இது குடும்ப படம் என்பதாலும் உணர்வுபூர்வமான நிறைய சம்பவங்கள் அவரது கதாப்பத்திரத்தை சுற்றி நடப்பதாலும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படம் மிக அழகாக உருவாகி வருகிறது.

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை மைக்கேல் செய்கிறார். உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.

Three generations of actors from the same family sharing the screen space together

சூர்யாவுக்கு கொரோனா..; இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.. மக்களுக்கு அட்வைஸ்

சூர்யாவுக்கு கொரோனா..; இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.. மக்களுக்கு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaகொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்…

Suriya tests corona positive; Shares emotional note with this message

More Articles
Follows