மூக்கு வழியாக தடுப்பு மருந்து.. சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி..; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

மூக்கு வழியாக தடுப்பு மருந்து.. சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி..; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டு மக்களுக்கு இன்று மே 7 மாலை உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

அவர் பேசியவை…

கடந்த 100 ஆண்டுகளில் உலகம் சந்தித்திராத கொடூரமான வைரஸ் கொரோனா தான். இதுபோன்ற ஒரு பெருந்தொற்றை பார்த்ததில்லை.

கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் பிரியமான பலரை நாம் இழந்துள்ளோம்.

கொரோனாவைத் தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி தான்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது.

நாட்டில், இதுவரை 23 கோடி டோஸ்களுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மூக்கு வழியாக சொட்டு மருந்தாக செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசிகளை பெற்று, மக்களுக்கு செலுத்த நடவடிக்கை.

ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்.

மாநிலங்களுக்கு தேவையான 75% தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து விநியோகிக்கும்.

சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் வகையில், பரிசோதனைகள் தொடங்கியுள்ளது.

மொத்தம் 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Prime Minister Modi announces free vaccines to adults over the age of 18

மதுக்கடைகளை திறக்க போராடும் பிஜேபி MLA ஜான்குமார்.; வைரலாகும் ஆடியோ..! இவர்தான் மக்களை காப்பாற்றுவாரா.?

மதுக்கடைகளை திறக்க போராடும் பிஜேபி MLA ஜான்குமார்.; வைரலாகும் ஆடியோ..! இவர்தான் மக்களை காப்பாற்றுவாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகளான மளிகை & காய்கறி கடைகள் மட்டுமே திறக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் மதியம் வரை கடைகள் திறக்க அனுமதி அமலில் உள்ளது.

இவர்களும் மக்கள் மீது அக்கறையில்லாமல் வாய்க்கு வந்தபடி காய்கறிக்கு விலை சொல்லி ஏமாற்றுகின்றனர்.

ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் தங்கள் படிக்கும் வகுப்பையே மறந்து விட்டனர்.

மேலும் சலூன், ஒர்க் ஷாப், வெல்டிங், தனியார் நிறுவன ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றை எல்லாம் நினைத்து கவலைப்படாமல் இதற்கெல்லாம் குரல் கொடுக்காமல் சரக்கடிக்காமல் ஒருவர் இறந்துவிட்டதாக கூறி மதுக்கடைகளை திறக்க ஆளுநரிடம் கோரிக்கை ஙைத்துள்ளார் புதுச்சேரி பிஜேபி எம்எல்ஏ ஜான்குமார். அவரின் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

குடிக்காரர்கள் குடிக்கட்டும்.. குடித்து குடித்து செத்து கூட மடியட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்பவர்களுக்கு… “சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

மதுக்கடைகளில் நிச்சயம் சமூக இடைவெளி என்பதே கிடையாது. இதனால் கொரோனா வைரஸ் எளிதாக பரவும்.

மது கடைக்கு மதுபிரியர்கள் சென்று வீட்டிற்கு திரும்ப வந்தால் அவர்களால் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்படும். இதனால் சின்ன சின்ன குழந்தைகள் வரை பாதிக்கப்படுவர்.

இதனால் சமூகம் முற்றிலும் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உருவாகும். எனவே தான் மதுக்கடைகள் திறக்கப்படவே கூடாது என்கிறோம்.

*ஜான்குமார் யார்.? ஒரு பார்வை..*

புதுச்சேரியில் கடந்த 2019-ம் ஆண்டு காமராஜர் நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஜான்குமார், தனது சொத்துகளை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய குற்றத்திற்காக வழக்கும் இவர் மீது போடப்பட்டது.

2021 பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான் குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான நாராயணசாமி ஆட்சி பெருன்பான்மை இழந்தது. ஆட்சி பறிபோனது.

தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார் ஜான்குமார்.

அவரும் 2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதை விட மதுக்கடைகளை திறக்க ஆடியோ வெளியிட்டுள்ளார் இந்த எம்எல்ஏ ஜான்குமார். இதுவல்லவோ பொது நலம்..??

Pondy BJP MLA John Kumar controversy audio goes viral

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி – காரைக்காலிலும் +2 பொதுத்தேர்வு ரத்து

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி – காரைக்காலிலும் +2 பொதுத்தேர்வு ரத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

n rangaswamyகொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை.

அரசு & தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.

இதனையடுத்து சிபிஎஸ்இ +2 இந்தாண்டு பொதுத் தேர்வு ரத்து என அறிவித்தார் பிரதமர் மோடி.

இதனால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்பது குறித்த ஆலோசனை சில தினங்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என 60% மக்கள் கருத்து தெரிவித்தாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநிலத்தில் (காரைக்கால் உட்பட) இது குறித்த அறிவிப்பு இல்லை.

இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மாஹி (கேரளா) மற்றும் ஏனாம் (ஆந்திரா) பகுதிகள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பகுதிகள் என்றாலும் தமிழக புதுச்சேரி பாடத்திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Pondy govt cancels 12th exam

இந்தியாவை விட்டு கொரோனாவை விரட்ட ஒரே வழி…; நித்யானந்தாவின் நியூ ஐடியா

இந்தியாவை விட்டு கொரோனாவை விரட்ட ஒரே வழி…; நித்யானந்தாவின் நியூ ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nithyanandaபாலியல் தொல்லை, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா.

அழகான இளம் பெண்களுடன் எப்போதும் உல்லாசமாகவே இருந்து வருகிறார்.

ஆனாலும் காவல்துறைக்கே டிமிக்கி கொடுத்து தலைமறைவாக உள்ளார்.

ஓரிரு ஆண்டுகளாக கைலாசா என்ற ஒரு புதிய தீவில் வாழ்ந்து வருவதாக அறிவித்தார். தானே அந்த நாட்டின் அதிபர் என்றும் புதிய கரன்சியை அறிமுகப்படுத்தினார்.

எவர் வேண்டுமானாலும் தன் நாட்டிற்கு வரலாம் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த தீவு இந்தோனேஷியா / நியூசிலாந்து நாட்டின் அருகில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த தீவுகளை அவர் விலைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இவரின் புதிய வீடியோ ஒன்றில்… “தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும்” என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nithyananda idea for corona pandemic ends

ரஜினியை அடுத்து கமலை இயக்க முருகதாஸ் ப்ளான்.? தெலுங்கு நடிகரும் கூட்டணியா?

ரஜினியை அடுத்து கமலை இயக்க முருகதாஸ் ப்ளான்.? தெலுங்கு நடிகரும் கூட்டணியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanசூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்குவதாக இருந்தது.

ஆனால் அந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலகினார். பின்னர் சூர்யாவுடன் கூட்டணி என கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த நடிகரை இயக்குவார் இந்த நடிகரை இயக்குவார் என பல யூகங்கள் வந்தாலும் எதையும் முருகதாஸ் தரப்பு உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போகிறார் முருகதாஸ் என ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் இதே படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதில் ‘சர்கார்’ பட வில்லியும் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுபோல முருகதாசின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் பறந்தாலும் எதுவுமே இதுவரை உறுதியாகவில்லை.

ஏற்கெனவே மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

AR Murugadoss to direct Kamal Haasan’s next film?

‘வலிமை’யான பெண் குறித்து தளபதி பட நாயகி என்ன சொன்னார் தெரியுமா?

‘வலிமை’யான பெண் குறித்து தளபதி பட நாயகி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கி வெளியான ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே.

பின்னர் தெலுங்கு சினிமாக்களில் பிசியான இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியானார்.

தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 65” படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பெண்களின் வலிமை குறித்து கொரோனா குறித்தும் பதிவிட்டுள்ளார்.

அதில் “வலிமையான பெண்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். .

எங்கள் அழுகையைப் பற்றியும் மோசமான நாட்களைப் பற்றியும் கவலைப் படுகிறோம். ஆனால் அதிலிருந்து எப்போதும் வெளிவந்து விடுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Actress Pooja Hegde tweet on strong women

More Articles
Follows