தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாட்டு மக்களுக்கு இன்று மே 7 மாலை உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
அவர் பேசியவை…
கடந்த 100 ஆண்டுகளில் உலகம் சந்தித்திராத கொடூரமான வைரஸ் கொரோனா தான். இதுபோன்ற ஒரு பெருந்தொற்றை பார்த்ததில்லை.
கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் பிரியமான பலரை நாம் இழந்துள்ளோம்.
கொரோனாவைத் தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி தான்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது.
நாட்டில், இதுவரை 23 கோடி டோஸ்களுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக சொட்டு மருந்தாக செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசிகளை பெற்று, மக்களுக்கு செலுத்த நடவடிக்கை.
ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்.
மாநிலங்களுக்கு தேவையான 75% தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து விநியோகிக்கும்.
சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் வகையில், பரிசோதனைகள் தொடங்கியுள்ளது.
மொத்தம் 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
Prime Minister Modi announces free vaccines to adults over the age of 18