தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் முதன் முறையாக இயக்கி, தயாரித்து நடித்துள்ள ப பாண்டி படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.
எனவே இப்படக்குழுவினர் இதற்கான புரோமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்காக இப்படக்குழுவினர் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இதில் தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டாலும், மடோனா செபாஸ்டியன் கலந்து கொள்ளவில்லை.
இப்படத்தில் ஒப்பந்தம் ஆகும் சமயத்தில் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக கையெழுத்திட்டு இருந்தாராம் மடோனா.
ஆனால், தற்போது மறுக்கவே, இந்த விஷயம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்லக்கூடும் என சொல்லப்படுகிறது.
அப்படியானால், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றதும் சந்திக்கும் முதல் புகார் இதுவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Power Paandi action against their heroine Madonna Sebastian