தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயினுக்கு பஞ்சம் இல்லையென்றாலும், அம்மா அப்பா கேரக்டருக்கு எப்போதும் பஞ்சம் இருந்துக் கொண்டேத்தான் இருக்கிறது.
இதனால் அம்மா அப்பா கேரக்டர்களில் நடிக்கும் சரண்யா மற்றும் ராஜ்கிரண் ஆகியோருக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான ‘பவர் பாண்டி’ படம் ராஜ்கிரனுக்கு இன்னும் அதிகப்படியான இமேஜ்ஜை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இந்நிலையில் கமல்ஹாசன் நடத்தவுள்ள ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
ஆனால் நிக்ழ்ச்சியில் கலந்துக் கொள்ள ராஜ்கிரண் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு கூட சில விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், ராஜ்கிரண் அதை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Power Paandi actor Rajkiran refuse to participate in Kamals TV show